Search This Blog in tamil

Sunday, 16 May 2021

காமத்தை முழுமையாக அனுபவியுங்கள்.

காமத்தை முழுமையாக அனுபவியுங்கள். முழுமையாக அனுபவம் கொண்டவன் எவனும் அதற்கு அடிமையாக  மாட்டான். அடிமையால் எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாது. அது அவன் மண்டையில் சதா சர்வ காலமும் நச்சரித்து கொண்டே இருக்கும்.
இங்கு சில விசித்திர ஆசைகள் மட்டுமே. அதை புரிந்து கொண்டால் இங்கு எவனும் அடிமை பழக்கத்துக்கு ஆட்பட மாட்டான்.

1. இவ்வளவு காலம் முறையான குடும்ப உறவுகளை கண்டு பழகி விட்டிருந்தோம். அதனால் முறையற்ற உறவுகள் எப்படி இருக்கும் என்று காண வேண்டும் ஒரு விசித்திரமான ஆசை. ஒரு ஆசை அவ்ளோதான்.. 

2. நமக்கு சொந்தமான ஒரு உறவு நம்  கணவனோ, மனைவியோ அடுத்தவர் மீது விருப்பம் கொண்டால், அதனால் நமக்கு உண்டாகும் கோபம், வன்மம் போன்ற உணர்ச்சிகளை நமக்கு நாமே கற்பனை செய்து கொண்டு அதை அனுபவிப்பது. இது புண்ணை சொரிந்து சுகம் காண்பது போல ஒரு இன்ப கிளர்ச்சி. அவ்ளோதான்.

அதேபோல அடுத்தவன் பொருளை நாம் அபகரித்து கொண்டோம் என்கிற ஒரு வக்கிர சுக  உணர்ச்சி, இன்று காமத்திலும் புகுந்து விட்டது. அடுத்தவன் மனைவியை புணர்கிறோம் என்கிற எண்ணமே ஒருவனை இன்பத்தில் ஆழ்த்தினால் அவன் மனம் ஒரு வக்கிரமான சுழலில் மாட்டி கொண்டு விட்டது என்றே பொருள்.

3. நம் தாய், மனைவி, அக்கா, மற்றும் குடும்பத்தில் உள்ள பெண் உறவுகளின் அழுகை, சிரிப்பு, கவலை போன்ற எல்லா உணர்ச்சிகளையும் நேரில் பார்த்து இருப்போம்.

 அது போல
 மற்ற பெண்களின்  
காம உணர்ச்சியை காணாததால் அதை அவர்கள் வெளிப்படுத்தும்போது எப்படி இருக்கும் என்று காண வேண்டும் என்று ஒரு ஆசை அவ்வளவுதான். 
அதை வெளியல் உள்ள மற்ற ஆண்களுடன் தொடர்புபடுத்தி பார்த்து ஒரு இன்பகிளர்ச்சி.

 இவையெல்லாம் நம் மனதில் நிகழும் ஒரு வித நிகழ்வுகளே அன்றி இவை உண்மையான காம இன்பத்தை தருவதே இல்லை. 
மாறாக சில நாள்களில் குற்ற உணர்வையே உண்டாக்கி விடுகின்றன. 

4. இயல்பாகவே பருவ பெண்களை விட, திருமணமாகி, குழந்தை பெற்று விட்டால் பால் சுரந்து முலை பெரிதாகி விடும். இது இயற்கை. ஆயினும் அதையே பெரிதுபடுத்தி பேசி பேசி நமக்கு நாமே ஒரு அழுத்தமான மனநிலையை உண்டு செய்து விட்டோம். உண்மையில் காமத்தில் முலைகளின் அழுத்தம் பெண்ணுக்கு இன்பம் தரும். ஆனால் முலைகளை காணும்போதே ஒருவனுக்கு காமம் இயல்பாக வருவதில்லை. அதை அவன் வலுக்கட்டாயமாக வருவித்து கொள்கிறான். இங்கு தான் அடிமை தன்மை உருவாகிறது. எல்லோருக்கும் காமம் வெளிப்படும். ஆனால் இவ்வகையான 'கட்டாய வருவித்து கொள்ளுதல்' சில நாளில் துன்பம் தரும். மனம் சிதையும்.

5. டிவியும், இண்டர்நெட்டும் வரும் முன்பு அடிக்கடி காம வயப்பட வில்லை. அதனால் பத்து, இருபது நாளுக்கு ஒரு முறையே விந்து நன்கு நிரம்பிய பின்னரே உடலுறுவு கொள்வர். நெடுநாள் தேக்கி வைத்து அனுபவிக்கும் இன்பம் உண்மையில் இனித்தது. ஆனால் இன்று அன்றாடம் நம் ஊடகங்கள் இன்டர்நெட் டிவி சினிமா எல்லாமே அன்றாடம் காமக் கொதிப்பை ஊட்டி கொண்டிருக்கின்றன. இதனால் அடிக்கடி காம நினைவில் உழன்று அடிக்கடி இன்பசெயல் செய்து அதில் திருப்தியே இல்லாமல் போய்விட்டது.  அடிமை பழக்கம் வந்தது மட்டுமே மிச்சம்.

6. மனிதர்களில் பலருக்கு இயல்பாகவே ஒரு உடலில் காமம் ஊற்றெடுக்க 15, 20 நாளாவது ஆகும். அது விந்து தேங்கும் அளவை பொருத்து. விந்து நிறைய தேங்கிய மூளைக்கு சமிக்ஞை போகும். காம உணர்வு வரும். சிலருக்கு மாதம் கூட ஆகலாம். அது குறையே இல்லை. அது இயற்கை. ஆனால் இன்று நாம் தொடர்ந்து காமத்தையே பார்த்து பார்த்து, காமத்தையே கேட்டு கேட்டு, அதையே சிந்தித்து கொண்டே இருப்பதால் பழக்க தோஷத்தால் அதை அடிக்கடி வெளியேற்றி வருகிறோம். இதில் இன்பமே இருப்பதில்லை. 

நன்கு நிரம்பிய அணையை திறந்து விடும்போது உண்டாகும் மின்னாற்றல் வேறு, அது அற்புதம். கால் பங்கு அளவை கூட எட்டாத போதே திறந்து விட்டு மின்னாற்றலை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்? அது போலவே விந்து நன்கு நிரம்பிய பின் திறந்து விட்டால் உண்டாகும் காம மின் சுகம் உடலில் அபரிதமாக பரவும். சிந்தித்து பாருங்கள். நாம் இப்போது எப்படி மாட்டி கொண்டிருக்கிறோம் என்று புரியும்.

நன்றி: பொன். தங்கராஜ்

வாழ்க வளத்துடன் 🙏 நன்றி நற்பவி

https://t.me/joinchat/WVaVRL9RMwGH

No comments:

Post a Comment