*🐚சித்தர்கள் ரகசியம்🔱*
உடலுறவை விலக்கினால் தீமைகள் உண்டாகும்
*************************************************************************
காமசூத்திரம் என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.
இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதது இவர் கிபி முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் துவக்கத்தில்இ முதலில் நான்கு புருஷார்த்தங்கள் குறித்தும் பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்நூலிலேயே அறம்(தர்மம்). பொருள்(அர்த்தம்) ஆகியவற்றுக்கு பிறகே காமம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனினும் மேலை நாட்டவரின் தவறான மொழிபெயர்ப்பினாலும் மூலநூலில் இல்லாத பாலியல் சித்திரங்களையும் பின்னர் இணைத்ததனாலும் இந்நூல் பாலுறவு நிலைகள் பற்றியதாகவே பரவலாக அறியப்படுகிறது. உண்மையில் அது நூலின் ஒரு பகுதியேயாகும். இரண்டாம் அத்தியாயம் மட்டுமே முழுவதும் பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறுகிறது. காதல். பாலியல் கல்வி முதலிய பிற கருத்துகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
காமசூத்திரம் என்ற நூல் காம சாஸ்திரத்தை சார்த்து எழுதப்பட்ட நூல் ஆகும். இந்நூலின் படி, காம சாஸ்திரம், முதன் முதலில் சிவன் பார்வதியுடன் காமத்தை குறித்து பேசிக்கொண்டிருந்ததை, ஏதேச்சையாக கேட்ட நந்திதேவர். பிறகு மனித நலனுக்காக தான் கேட்டதை நந்தி தேவர் இதை ஒராயிரம் அத்தியாங்களில் எழுதினார். இந்த சாஸ்திரம் பின்னர் பலராலும் சுருக்கி எழுதப்பட்டது. வாத்சாயனர் தான் மூல காம சாஸ்திரத்தின் ஒரு சிறு பகுதியையே விவரிப்பதாக நூலில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று ஆசிரியர்கள்இ காம சூத்திரம் தற்போதைய வடிவில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
முத்தம் கொடுப்பதால் உடலில் ஏற்படும் காந்த சக்தியானது ஆயிரம் வாட்ஸ் மின்சாரமாக பாய்ந்து உடலில் இருக்கும் பலவேறு நுண் கிருமிகளை கொல்லுகின்றது என்கிறது ஒரு ஆய்வு. அதுமட்டுமல்லாது உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் சக்தி வெளிப்பாடனது புதிய இரத்தத்தை எமது உடலில் தோற்றுவிப்பதால் புதிய கலன்களால் நோயெதிர்ப்பு அதிகரிக்கின்றது இது சமீபகால மருத்துவ ஆய்வுகள். காமசூத்திரம் என்பது என்ன வென்றால் சிற்றின்பயோகா இங்கு பல்வேறு வகையான ஆசனங்கள் தான் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன.
உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும். அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும்.அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.
இயற்கையை வென்றது யார் தான்…?அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும் .
உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் பாலியல் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே பாலியல் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
முத்தம் கொடுப்பதால் உடலில் ஏற்படும் காந்த சக்தியானது ஆயிரம் வாட்ஸ் மின்சாரமாக பாய்ந்து உடலில் இருக்கும் பலவேறு நுண் கிருமிகளை கொல்லுகின்றது என்கிறது ஒரு ஆய்வு. அதுமட்டுமல்லாது உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் சக்தி வெளிப்பாடனது புதிய இரத்தத்தை எமது உடலில் தோற்றுவிப்பதால் புதிய கலன்களால் நோயெதிர்ப்பு அதிகரிக்கின்றது இது சமீபகால மருத்துவ ஆய்வுகள். காமசூத்திரம் என்பது என்ன வென்றால் சிற்றின்பயோகா இங்கு பல்வேறு வகையான ஆசனங்கள் தான் சொல்லப்பட்டிருக்கின்றன.
சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காமசூத்திரம்.....
No comments:
Post a Comment