தந்த்ரா ரகசியங்கள்:
"நிறுத்து"
" ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமென்ற உந்துதல் இருக்கும் பொழுது நிறுத்து".
முயற்சி செய்.
மூன்று விஷயங்களை நினைவில் கொள். ..
1) உண்மையான உந்துதல் இருக்கும்போது மட்டுமே செய்.
2) நிறுத்துவதைப் பற்றி யோசிக்காதே. வெறுமனே நிறுத்து!
3) காத்திரு! நீ நிறுத்திய நிலையில் மூச்சு இல்லை. அசைவு இல்லை -- காத்திரு. என்ன நடக்கிறது என்று பார். எந்த முயற்சியும் செய்யாதே. நான் காத்திரு என்று சொல்வதன் அர்த்தம், மையத்தைப் பற்றி இப்பொழுது யோசிக்க ஆரம்பிக்காதே என்பதே. அப்படி செய்வதால் மறுபடியும் தவற விடுவாய். சுயம், ஆத்மா பற்றி எல்லாம் யோசிக்காதே. ஒரு தரிசனம் வருகிறது. .ஒரு தரிசனம் இங்கு கிடைக்கிறது என்று நினைக்காதே. எதுவும் யோசிக்காமல் வெறுமனே காத்திரு. உந்துதல், சக்தி அதுவாகவே நகரட்டும். நீ பிரம்மா, ஆத்மா, மையம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால் சக்தி இந்த யோசனைக்குள் போய் விடும்.
நீ இந்த உள் சக்தியை மிக எளிதில் வீணாக்கி விடலாம். ஒரு நிணைப்பு கூட அதன் திசையை மாற்றி விட்டு விடும். அதன்பின் நீ யோசனையில் மூழ்கி விடுவாய். நான் நிறுத்து! என்று சொல்வதன் அர்த்தம் முழுமையாக முற்றிலுமாக நிறுத்துதல். எதுவும் அசைவதில்லை. காலமே நின்றுவிட்டது போன்ற நிலை! எந்த அசைவும் அங்கு இல்லை. வெறுமனே நீ இருக்கிறாய்! அந்த எளிய இருப்பில் திடீரென மையம் வெடிக்கிறது...!
உதாரணமாக நீ ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கப் போகிறாய். நீ டம்ளரை, தண்ணீரைத் தொட்டு விட்டாய்; அப்போது திடீரென நிறுத்து. உனது கை அங்கேயே இருக்கட்டும். உள்ளே உள்ள தாகம், குடிக்க வேண்டுமென்ற ஆசை அப்படியே இருக்கட்டும். ஆனால் நீ முற்றிலுமாக நின்றுவிடு. டம்ளர் வெளியே இருக்கிறது. தாகம் உள்ளே இருக்கிறது. கை டம்ளரின் மேல் உள்ளது. கண்கள் டம்ளரின் மேல் உள்ளன. அப்படியே திடீரென நிறுத்திவிடு. சுவாசம் இல்லை; அசைவு இல்லை; ஏதோ இறந்தவனைப் போல நீ ஆகிவிட்டாய். இப்போதிருந்த உந்து சக்தி, தாகம், சக்தியை விடுவிக்கும். மேலும் மையத்தை அடைவதற்கு அந்த சக்தியே பயன்படும். நீ மையத்திற்கு வீசப்படுவாய். ஏன்? ஏனெனில் எந்த ஒரு உந்து சக்தியும் வெளிப்புறம் நோக்கிய ஒரு அசைவே. ஞாபகத்தில் வைத்துக் கொள்; 'உந்துசக்தி' உந்துதல் என்பதன் அர்த்தமே வெளிப்புறம் நகரும் சக்தி என்பதே.
வாழ்க வளத்துடன் 🙏 நன்றி
No comments:
Post a Comment