Search This Blog in tamil

Sunday, 16 May 2021

கணவர்களின் பொதுவான கருத்துக்கள்.

 கணவர்களின் பொதுவான கருத்துக்கள்.


1. பாலுறவின் போது என் மனைவி பிணம் போல் கிடக்கிறாள். திருமணம் என்கிற பெயரில், ஒரு மரக்கட்டையை நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.


2. என் மனைவி ஒரு புத்தகப்புழு அல்ல. ஆயினும் நான் பாலுறவில் ஈடுபட விரும்பும் போது, ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கி விடுகிறாள். நான் பாலுற்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அவள் படித்துக் கொண்டிருக்கிறாள். என் உயிர்நீர் வெளியேறியதும், “முடிந்து விட்டதா? சரி. சரி. போய்ப் படு” என்கிறாள். என்னால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. என் மனம் சுக்கு நூறாக உடைந்து கிடக்கிறது.


3. நான் பாலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, என் மனைவி அவமதிக்கப் படுவதாக உணர்கிறேன்.


4. நான் பாலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, என் மனைவி அன்றாட விவகாரங்கள் பற்றி விவாதிக்கத் தொடங்கி விடுகிறாள். என் மனம் பாலுறவிலிருந்து விலகி விடுகிறது. பாலுறுப்பு தன் விரைப்புத் தன்மையை இழந்து விடுகிறது.


5. கால்களை அகற்றுவதைத் தவிர, என் மனைவி வேறு எந்தச் செயலிலும் ஈடுபட்டதேயில்லை. கணவனின் பாலுறுப்பைத் தன் கைகளால் தொடுவது அவளுடைய பிறப்புக்கே அவமானம் எனக் கருதுகிறாள்.


6. எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இரவு எத்தனை மணிக்கு நான் மனைவியை நெருங்கினாலும், உடனே வீறிட்டு அலறியபடி தன்னை ஏதோ கடித்து விட்டதாகக் கூறி, என் குழந்தை அழுத படி விழித்துக் கொள்கிறான். ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்த மாதிரி இது நடக்கிறது. குழந்தை சுட்டிக் காட்டும் இடம் யாராலோ கிள்ளப் பட்டதன் காரணமாக சிவந்து போய்க் கிடக்கிறது. குழந்தையை அவ்வளவு குரூரமாகக் கிள்ளி, ஏன் என் மனைவி எழுப்பி விடுகிறாள்?


7. என் மனைவி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, சாப்பாடு போடு எனக் கேட்டு விட்டால், ருத்ர தாண்டவம் ஆடுகிறாள்.


8. என் வயது ஐம்பது. கடந்த பத்தாண்டுகளாக பாலுறவே கொள்வதில்லை. ஏனெனில், நாற்பது வயதைக் கடந்த பின், என்னால் கற்பழிக்க முடிவதில்லை.


9. தனியாக நாங்களிருவர் மட்டும் இருக்கும் போது, மனிதக் கழிவைப் பார்ப்பதைப் போல், என் மனைவி என்னைப் பார்க்கிறாள்.


10. என்னுடைய விரல் பட்டு விட்டால் கூட என் மனைவி குளிக்கச் செல்கிறாள். இத்தனைக்கும் அவள் என் அத்தை மகள்.


11. மனைவிக்கும் எனக்கும் இடையே சண்டையில்லாமல் ஒரு நாள் கூட கழிந்ததில்லை. எனக்குத் திருமணமாகிப் பத்தாண்டுகள் ஆகிறது.



12. என் வீட்டிற்குள் நுழைய என் தரப்பு உறவினர்கள் (யாரையும் என் மனைவி அனுமதிப்பதேயில்லை. என் உறவினர் என்கிற போர்வையில் முன் பின் தெரியாத நீங்களே வந்தாலும் உங்களுக்கும் இதே கதி தான்.


13. என் மனைவி நாட்காட்டிகளில் குறிப்பிட்டுள்ள விரத தினங்களில் பாலுறவில் ஈடுபட அனுமதிப்பதில்லை. அதன்படி விரத தினம் இல்லாத நாளே என் வாழ்வில் இல்லை. ஏனெனில், ஐந்து மதங்களின் நாட்காட்டி களை என் மனைவி அனுசரித்துக் கொண்டிருக்கிறாள். எங்கள் திருமணமோ ஜாதிகளைக் கடந்த கலப்புத் திருமணம்.


14. குடியில்லை, பணப் பிரச்சின இல்லை. தனிக் குடித்தனம். எனினும், வாழ்க்கை போர்க் களமாகவே இருக்கிறது.


15. என் சுய இன்ப அட்டவணையின் படி, திருமணத்திற்கு முன்னால் அனுடவித்ததை விட, திருமணத்திற்குப் பின்னால் அனுபவித்ததே அதிகம். என் வயது நாற்பது.


16. அகாலமான முறையில் எனக்கு மரணம் நேர்ந்தால், அதற்கு என் மனைவி தான் காரணம் என ஒரு கடிதத்தை, என் கைப்பட எழுதி என் நண்பனிடம் கொடுத்து வைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு அவளுடன் வாழ்வது அச்சமூட்டுவதாக இருக்கிறது.


17. குறிப்பிட்ட நடிகரின் புகைப்படங்களால் என் வீடு மட்டுமன்றி என் மனைவியின் கைப்பையும் நிரம்பி வழிகிறது. என் குழந்தைகள் கூட இதை வெறுக்கிறார்கள்.


18. என் மனைவி எனக்கிழைக்கும் கொடுமையைப் பற்றிச் சொல்லவே என் நா கூசுகிறது. ஆனால், தொடைகளின் இடுக்குகளிலேயே நான் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. மேலும், இந்த உண்மை எனக்குத் தெரியாது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.


19. யாரேனும் பதினோராயிரத்து ஐநூறு ரூபாயை, நூறு ரூபாய்த் தாள்களாக என்னிடம் கொடுத்து விட்டால், அதை எண்ணி முடிக்க எனக்கு ஒரு மணி நேரம் ஆகிறது. ஏனெனில்,எண்ணிக் கொண்டிருக்கும் போது இடையில் நுழைந்து ஏதாவது வம்பிழுப்பாள். அந்த வம்புப் பேச்சிற்குள் போய் வந்து மீண்டும் எண்ணத் துவங்கினால், அதை எண்ணி முடிப்பதற்குள் மீண்டும் வந்து வம்பிழுப்பாள்.கவனம் சிதறாமல் எண்ணவே முடியாது. இவ்வாறு என் கவனத்தை என் மனைவி திசை திருப்பிக் கொண்டேயிருக்கிறாள். நச்சரிப்பாயிருக்கிறது வாழ்க்கை.


20. காதல் திருமணம் மூலம் என்னுடன் இணைந்த என் மனைவி, குழந்தை பிறந்த பிறகு, பார்வையாலேயே என்னை மிக மோசமாக அவமதிக்கிறாள். வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லவே, அவமானமாக இருக்கிறது. ஆனால், குழந்தைக்காகச் சென்று கொண்டிருக்கிறேன்.


21. மது வாடை இல்லாமல் போனால், பேசியே வதைக்கிறாளே என்று குடிக்கத் தொடங்கினேன். மூன்று மாதங்கள் அமைதி காத்த அவள் வழக்கம் போல் பேசத் தொடங்கி விட்டாள். ஆனால், நான் தான் மதுவுக்கு அடிமையாகி விட்டேன்.


22. இல்லத்தரசியான என் மனைவி பகலில் குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது உறங்கி விட்டு, இரவில் இரண்டு மணி வரை டீ.வீ. பார்த்துக் கொண்டிருக்கிறாள். எனக்கும் குழந்தைகளுக்கும் உள்ள இடையூறைப் பற்றிச் சொன்னாலும் அவளுக்குப் புரிவதில்லை.


23. உறவினர், நண்பர், தெரிந்தவர் என யார் மறைந்தாலும், அந்த ஈமச்சடங்கில் கலந்து கொள்ள என் மனைவியை நான் அனுப்புவதேயில்லை. ஏனெனில், மரணமடைந்தது யாராக இருப்பினும், ஈமச் சடங்கில் கலந்து விட்டு வந்ததும் முதல் வேலையாக, “எவ்வளவு நல்ல மனிதர் இறந்து விட்டார். அவருக்குப் பதில் நீங்கள் கூட இறந்திருக்கலாம்” என்று கூறுகிறாள்.


24. என் மனைவி வெளியூரில் வேலை பார்க்கிறாள். நான் கைபேசியில் அழைத்தால் எடுக்கவே மாட்டாள். குழந்தையின் எண்ணிலிருந்து அழைத்தால் வினாடிகளில் எடுத்து விடுவாள். ஆனால், பேசுவது நான் என்பது தெரிந்ததும், உன் மரண சேதி எப்போது வருமெனக் காத்திருக்கும் சூழலில் நீயே பேசிக் கொண்டிருக்கிறாயே என்கிறாள். குழந்தை கூட என் மீது பரிதாபப் படுகிறான்.


25. நான் ஒரு தொழில் அதிபர். என் மனைவி வங்கியொன்றில் தணிக்கை அதிகாரியாகப் பணியாற்றுகிறாள். பணிநிமித்தமாக அவள் வெளியூர் சென்றிருக்கும் போது, எந்த எண்ணிலிருந்து, யார் அழைத்தாலும் கேபேசியை எடுத்துப் பேசும் மனைவி, என் எண்ணிலிருந்து வரும் அழைப்புக்களை மட்டும் ஏற்பதேயில்லை. கேட்டால் “பணிச் சுமை” என்கிறாள்.


26. நீ இல்லாத போது அம்மா அமைதியாக டி.வி.பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், நீ இருக்கும் போது, டி.வி. நிகழ்ச்சிகளைக் கவனிக்க முடியாத அளவிற்கு உன்னோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாள். என்னால் டி.வி.பார்க்க முடியவில்லை. அதனால் நீ வீட்டிற்கு வராதே என்று தன் ஆறு வயதுக் குழந்தை கூறுவதாக ஒரு கணவர் கூறுகிறார்.


27. எனக்கு குடிப்பழக்கம் இல்லை. என் மனைவியை நான் திட்டியது கூட இல்லை. பெரிய அளவில் சண்டைகளும் வந்ததில்லை. ஆனால், என்னோடு பேசுவதை விட்டு விடு. உன் குரலைக் கேட்கவே எனக்குப் பிடிக்கவில்லை என்று என் மனைவி சொல்கிறாள். நாங்கள் பிரிய முடியாத அளவிற்கு குழந்தை வேறு இருக்கிறது.


1) வயிற்று வலி, 2) அமாவாசை, 3) குழந்தை விழித்துக் கொண்டுள்ளது,4) தலைவலி, 5) வெள்ளிக்கிழமை, 6) உடல்வலி, 7) மூடு இல்லை, 8) உறக்கம் வருகிறது, 9) என் தாய் வந்திருக்கிறார். 10) கொசுத்தொல்லை, 11) நாளை அதிக வேலை இருக்கிறது.12) குழந்தை வளர்ந்து விட்டது, 13) இன்று என் பாட்டியின் நினைவு நாள்.14) உடம்பு கெட்டுப் போய் விடும்.15) இன்று வேலை அதிகம்.16) ஓய்வு தேவை. 17) வயதாகி விட்டது. போதும்.18) போரடிக்கிறது.19) உறவினர்கள் வந்துள்ளனர். 20) ௧௬ உருவாகி விடும். 21) சிகரெட் நெடி 22) உன் அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏன் திட்டினாய். 23) நாளை மாத விடாய் துவங்கப் போகிறது. 24)25)26)27)28) மாதவிடாய் என ஐந்து நாட்கள். 29) இதற்கு மட்டும் நான் வேண்டுமாக்கும். 30) இன்று பண்டிகை தினம். ஒரு மாதத்தில், இத்தனை காரணங்களைக் கூறி பாலுறவை என் மனைவி நிராகரிக்கிறாள். மேற்கண்டவை அனைத்தும் பகிர்ந்து கொள்ள முடிந்த சில மாதிரிகளே.




 Must read தந்தரா  வழியில் தம்பத்யம்... Book

No comments:

Post a Comment