Search This Blog in tamil

Sunday, 16 May 2021

கலவியை தியானமாக மாற்றும் கலைகள் பகுதி:-4

 💏 கலவியை தியானமாக மாற்றும் கலைகள் பகுதி:-4 

    🙂சென்ற பதிவில் கண்ணாடி முன் தியானம் பயிற்சி சொல்லிகொடுத்தேன், அடுத்த பயிற்சிக்கு செல்வோம்.

      இந்த பயிற்சி கணவன், மனைவி ஒற்றுமையுடன், ஒத்துழைப்போடு அன்போடு செய்ய வேண்டும். யாரும் தொந்தரவு செய்யாத நேரத்தில் கதவை தாழ்ப்பாள் போட்டு செய்ய வேண்டும். 

       இருவரும் உடைகளை களைந்து நிர்வாணமாக இரு கால்களையும் ஒட்டி வைத்தவாறு நிமிர்ந்த நிலையில் நில்லுங்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு நில்லுங்கள். 5 அடி இடைவெளி விட்டு நில்லுங்கள்.  கணவன், மனைவியின் இரு கட்டைவிரல் மையத்தை பார்க்க வேண்டும். அதேபோல் மனைவி, கணவனின் கட்டைவிரலை கவனிக்க வேண்டும். அடுத்து பிறப்புறுப்பு, தொப்புள், மார்பு மையம், கழுத்து, உதடு, மூக்கு, புருவ மத்தி, தலை உச்சி, திரும்பவும் புருவ மத்தி கவனிக்கவும்., அடுத்து உங்களுக்கு துணைவரின்  உடலின் எந்த பகுதியில் பற்று அதிகமோ அதை கவனிக்கவும். அதன் பின் ஒருவர் விட்டு ஒருவர் பின்புறமாக திரும்பி நின்று பின் அழகை கீழிருந்து மேலாக ஒவ்வொரு பகுதியாக கவனிக்கலாம்.

     இந்த பயிற்சியை ஒவ்வொரு பகுதியை  எவ்வளவு நேரம் கவனிக்க வேண்டும் என்பது உங்களுக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து நிர்ணயித்து கொள்ளுங்கள்.ஒவ்வொரு பகுதியும் பார்க்கும் போதும் உங்களுக்குள் எழும் உணர்வுகளை அந்த உறுப்பை பார்த்து கொண்டே கவனியுங்கள். எந்த உணர்வுகளையும் அடக்க வேண்டாம்., வெறுமனே கவனியுங்கள். ஆரம்பத்தில் இந்த பயிற்ச்சி செய்யும் போது உங்களை கட்டுபடுத்த முடியாமல் கட்டிபிடிப்பது முத்தம் கொடுப்பது உடலுறவு வைத்து கொள்ள முனைப்பு ஏற்படும், இதில் எந்த உணர்வுகளையும் நீங்கள் அடக்க வேண்டாம். பயிற்சி செய்ய செய்ய மனம் கட்டுபடும்.பயிற்ச்சி செய்யும் போது உங்கள் கவணம் பார்வை அந்த உறுப்பில் மட்டும் இருக்கட்டும். கவனம் சிதறினால் திரும்பவும் விழித்தெழுந்து அந்த குறிப்பிட்ட பகுதியை கவனியுங்கள். பயிற்சி செய்யும் போது உங்களை அறியாமல் கத்துவீர்கள், உளறுவீர்கள் அதனால் அக்கம் பக்கத்தினர் பயப்பட போகிறார்கள்  அதனால் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க டீவி ஆன் பன்னி வைத்து விடலாம் அல்லது செல் போனில் பாட்டு வைத்து விடலாம் அல்லது மந்திரங்கள் ஒலிக்க விடலாம் சத்தம் வெளியே கேட்காமல் இருக்கும்.

      பயிற்சி செய்து முடித்ததும் கண்டிப்பாக உடலுறவு வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, வெறும் பயிற்ச்சியாக கூட செய்யலாம். பயிற்ச்சி முடிந்ததும் கட்டிபிடித்து முத்தம் கொடுத்து கூட முடிக்கலாம்.முக்கியமாக பெண்கள் கூச்சபட்டு உங்கள் உணர்வுகளை அடக்க வேண்டாம். கணவனிடம் உங்களுக்கு எழும் உணர்வுகளை தைரியாமாக வெளிப்படுத்துங்கள். உடல் தெளிவாக தெரியும் அளவு லைட் வெளிச்சம் இருக்கட்டும்.குறைவான வெளிச்சத்தில் உடலுறவு வைத்து கொள்வது உடலுறவு அவசர அவசரமாக முடிப்பது மனதின் வேலை, அது நீங்கள் அல்ல.

    இந்த பயிற்ச்சியின் மூலம் உங்கள் துணைவரின் உடல் பற்றை கடப்பதால் உடலுறவில் விழிப்புணர்வோடு நிதனமாக நீண்ட நேரம் ஈடுபட முடியும். 

   திருமணம் ஆகத சிங்கள்ஸ் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து பயிற்சி மேற்கொள்ளலாம்.தொடர்வோம்🙂♥️

No comments:

Post a Comment