💏கலவியை தியானமாக மாற்றும் கலைகள் பகுதி:-3
🙂♥️ சென்ற பதிவில் கூறிய தியானம், பிராணாயாமம் தொடர்ந்து செய்து வாருங்கள் அடுத்த பயிற்ச்சிக்கு செல்வோம்.
கண்ணாடி முன் தியானம்: இந்த பயிற்சியை தனிநபராக செய்ய வேண்டும்., இந்த பயிற்ச்சிக்கு உங்கள் முழு உடல் தெரிய கூடிய கண்ணாடி தேவை., அது பீரோ கண்ணாடியாக கூட இருக்கலாம், யாரும் தொந்தரவு செய்யாத நேரத்தில் செய்ய வேண்டும். ரூமில் தனி நபர் மட்டும் இருக்க வேண்டும்., ரூமை தாழ்ப்பாள் போட்டு கொள்ளுங்கள். கண்ணாடி முன் உடைகள் அனைத்தும் கழற்றி நிர்வாணமாக நில்லுங்கள்., உடல் முழுவதும் கண்ணாடியில் தெரியும்படி நில்லுங்கள். இரு கால்களையும் ஒட்டி வைத்தவாறு நிமிர்ந்த நிலையில் நில்லுங்கள்.
இப்போது இரு கண்களால் காலின் இரு கட்டை விரலின் மைய பகுதியை கண்ணாடியில் கவனியுங்கள்., அடுத்ததாக பிறப்புறுப்பை கவனியுங்கள்., அடுத்து தொப்புள், மார்பு மையம்,தொண்டை குழி, மூக்கின் நுனி,புருவ மத்தி,தலை உச்சியில்,திரும்பவும் புருவ மத்தி கவனியுங்கள்., அடுத்ததாக நீங்கள் உடலின் எந்த பகுதிகளை கவனிக்க விரும்புகிறீர்களோ அதை கவனித்து முடித்து கொள்ளுங்கள்., முடித்த உடன் சிறிது நேரம் ரூமில் எதையும் சிந்திக்காமல் உங்களை மட்டும் கவனித்து உலாத்துங்கள். அப்போது சிலருக்கு உடல் தன்னிச்சையாக சில பயிற்ச்சிகளை செய்ய விரும்பும் அதை நீங்கள் சரியாக கவனித்து உடலுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். இந்த பயிற்சி ஆண், பெண் தனி தனியாக செய்ய வேண்டும் இந்த பயிற்சி இத்துடன் முடிவுற்றது. அடுத்த பயிற்சி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
மேற்கண்ட பயிற்ச்சியை நீங்கள் செய்யும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள். கண்ணாடியில் உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியை காணும் போதும் உங்கள் கவனம் பார்வை முழுவதும் அந்த குறிப்பிட்ட உறுப்பின் மேல் தான் இருக்க வேண்டும். உறுப்பை கவனிக்காமல் பார்வை, கவனம் உங்களை அறியாமல் சிதறினால் கூட திரும்பவும் விழித்தெழுந்து குறிப்பிட்ட பகுதியை திரும்ப விடாமல் கவனியுங்கள்.ஒவ்வொரு உறுப்பையும் எவ்வளவு நேரம் கவனிக்க வேண்டும் என்பது உங்களுக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து சரி சமமாக நிர்ணயித்து கொள்ளுங்கள். உறுப்பை கவனிக்கும் போது அந்த குறிப்பிட்ட பகுதி வைப்பரேட் ஆகலாம் மேலும் சில உணர்வுகள் ஏற்படலாம் அப்போதும் உங்கள் கவனம் சிதறாமல் அந்த குறிப்பிட்ட பகுதியை கவனியுங்கள்.
புருவ மத்தியை நீங்கள் கவனிக்கும் போது முகம் திருஷ்டி பொம்மை போல் கோரமாக மாறும் அதை பார்த்து பயப்படாமல் தொடர்ந்து புருவ மத்தியை கவனியுங்கள். அது மனதின் உண்மையான முகம்.மனம் அடங்காமல் சுற்றி திரிந்தால் மாடு என்பார்கள் சித்தர்கள் அம்மனமே பயிற்ச்சியின் மூலம் அடங்கினால் நந்தி என்பார்கள் சித்தர்கள்.புருவ மத்தியை சரியாக கவனிக்கும் போது உங்கள் உடல் கண்ணாடியில் மறைவது போல் இருக்கும் பயபட வேண்டாம். இரண்டாவது முறை புருவ மத்தியை கவனிக்கும் போது உங்களது ஸ்மார்ட்டான வேண்டுதல்களை முன் வைக்கலாம், கணவன், மனைவி ஒரே மாதிரியாக பேசி வைத்துகொண்டு வேண்டுங்கள். நாளடைவில் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும். உதாரணத்திற்க்கு, நானும் என் மனைவியும் உடலுறவில் இந்த பிறவி முழுவதும் உச்ச கட்ட இன்பத்தை அனுபவிப்போம்.( அல்லது) விந்துவை வெளியேற்றாமல் உடலுறவு செய்யும் கலையை அறிந்தவன் என்று கூட வேண்டலாம், உங்கள் வேண்டுதல் ஏற்றார் போல் மனைவியை வேண்ட சொல்லுங்கள்.
இந்த பயிற்சி சரியாக செய்யும் போது உங்களை அறியாமல் கத்துவீர்கள், உளறுவீர்கள் அதனால் அக்கம் பக்கத்தினர் பயபட போகிறார்கள் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க டீவி ஆன் பன்னி வைத்து விடலாம் அல்லது செல் போனில் பாட்டு வைத்து விடலாம்.வெளியே சத்தம் கேட்காமல் இருக்கும்.
இந்த பயிற்ச்சியின் மூலம் உங்கள் உடல் பற்றை கடக்கிறீர்கள் அடுத்த பயிற்ச்சியின் போது உங்கள் துனைவரின் உடல் பற்றை கடப்பீர்கள்.நான் மேற்சொன்ன பயிற்ச்சியை செய்து முடிக்கும் போது இந்த அழகான உடலையும் உயிரையும் கொடுத்தவர்க்கு நன்றி என கூற மறவாதீர்கள்.அடுத்த பயிற்ச்சியில் சந்திப்போம்.🙂♥️
No comments:
Post a Comment