Search This Blog in tamil

Sunday, 16 May 2021

கலவியை தியானமாக மாற்றும் கலைகள் பகுதி:-2

 💏 கலவியை தியானமாக மாற்றும் கலைகள் பகுதி:-2‌

  ♥️🙂 நான் முந்தைய பதிவில் மூச்சு பயிற்சி, தியானம் எளிமையாக சொல்லி கொடுக்கிறேன் என கூறியிருந்தேன், தொடங்கலாம்.

     மூச்சு பயிற்சி: உங்களுக்கு செளகர்யாமான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள், சேரிலோ அல்லது சுவற்றில் சாய்ந்து கொண்டு பயிற்சி செய்யலாம்., உங்களை யாரும் தொந்தரவு செய்யாத இடமாக பார்த்து கொள்ளுங்கள்.இடது துவாரத்தை மூடி கொண்டு வலது துவாரம் வழியாக மூச்சை 1 நிமிடம் வெளியேற்றுங்கள்., இதேபோல் வலது துவாரத்தை மூடி கொண்டு இடது துவாரத்தில் 1நிமிடம் மூச்சை வெளியேற்றுங்கள்.,மூச்சை தொடர்ச்சியாக வெளியேற்ற கடினமாக இருந்தால் விட்டு விட்டு வெளியேற்றலாம், இது குறைந்த பட்சம் ஒரு சுற்று போதுமானது. அடுத்ததாக இரு துவாரத்தின் மூலமாக மூச்சை உங்களால் முடிந்த வரை தொடர்ச்சியாகவோ அல்லது விட்டு விட்டு மூச்சை உள்ளுக்குள் இழுத்து சில நொடிகள் அடக்கி வைத்து மூக்கின் வழியாக வெளியேற்றி விடுங்கள்., (நீங்கள் மூச்சை எவ்வளவு இழுத்தீர்களோ அந்தளவு வெளியேற்றுங்கள்.) இதை மூன்று முறை செய்யுங்கள்.மூச்சை இழுக்கும் போது கட்டை விரல், ஆள் காட்டி விரலால் மூக்கின் மேல் வைத்து இழுத்தால் அதிக காற்றை இழுக்கலாம்., அடுத்ததாக, மூச்சை உங்களால் முடிந்த வரை இரு துவரங்களிலும் இழுத்து அடக்கி வைத்து கொள்ளுங்கள். இப்போது கண்களை மூடி கொள்ளுங்கள், இயல்பாக மூச்சை கவனியுங்கள்., வலது, இடது என மூச்சு மாறி மாறி ஓடும் அதை உடலை தளர்வாக வைத்து கொண்டு கவனித்து வாருங்கள்., ஒரு துவாரம் வழியாக சுவாசம் உள்ளிழுக்கபட்டு மறு துவாரம் வழியாக சுவாசம் வெளியேறும் நிகழ்வை வெறுமனே கவனித்து வாருங்கள்.சுவாசம் உள்ளே, வெளியே செல்லும் இடைப்பட்ட இடைவெளியை கவனிக்க தவர விட வேண்டாம்., இதுதான் இறைவன் உங்களை கவனிக்கும் நேரம்.  இந்த பயிற்சி செய்ய செய்ய இடைவெளி அதிகரித்து கொண்டே போகும் அந்த இடைவெளியில் நீங்கள் வேண்டிய  உங்கள் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும். மூச்சு பயிற்சி செய்து வருவதன் மூலம் கலவி நேரத்தில் மூச்சு வாங்குவது டயாட் குறையும். கலவி தொடங்கும்  போது ஆணுக்கு  வலது புறம் சுவாசம் ஓட வேண்டும். பெண்ணுக்கு இடது புறம் ஓட வேண்டும். அப்போதுதான் தாம்பத்யம் சிறக்கும்.நம் விருப்ப படி சுவாசத்தை மாற்றி கொள்ளும் கலைகள் சித்தர்கள் எழுதி சென்றுள்ளனர்.தேடுங்கள் உங்களுக்கு தகவல் கிடைக்கும். இந்த பயிற்சியை தினமும் செய்து வாருங்கள் அடுத்ததாக தியானத்திற்க்கு செல்வோம். 

   தியானம்:-  உங்களுக்கு செளகர்யமான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்., முதலில் இரு கண்களால் மூக்கின் நுனியை கவனியுங்கள் நீண்ட நேரம் கவனிக்க முடியாது அதனால் விட்டு விட்டு திரும்ப கவனிக்கலாம். இது எத்தனை முறை என்பது உங்கள் விருப்பம். அடுத்ததாக கண்களை திறந்தோ அல்லது மூடியோ சும்மா இருங்கள்., எதையும் யோசிக்காமல் இருக்க வேண்டும்., நீங்கள் எதையும் யோசிக்காத போதே உங்கள் கடந்த கால எண்ணங்கள், எதிர்கால எண்ணங்கள், எடிட்டிங் செய்த எண்ணங்கள் உங்களை தொந்தரவு செய்யும். வரும் எண்ணங்களை வெறுமனே கவனியுங்கள் பின்  தொடராதீர்கள், ஒன்று விட்டு ஒன்று எண்ணங்கள் தன்னிச்சையாக வந்து கொண்டே இருக்கும், அதை வெறுமனே கவனிங்கள் அவ்வளவுதான். நீங்கள் கவனிக்க கவனிக்க எண்ணங்கள் குறைந்து கொண்டே வருவதை அறியலாம். அடுத்ததாக கண்களை மூடி கொண்டு உங்கள் இரு கரு விழியை கவனியுங்கள் அது ஒரு இடத்தில் நிற்க்காது ஆடிக்கொண்டே இருக்கும்  அதற்க்கு காரணம் எண்ணங்கள் தொந்தரவு செய்வதன் அறிகுறி.

  மேற்கண்ட பயிற்சிகள் தொடர்ந்து செய்யுங்கள்.பயிற்ச்சி செய்யும் போது யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள். இதை நீங்கள் விரும்பிய நேரத்தில் செய்யலாம். வயிறு சற்று காலியாக இருக்கும் நேரத்தில் செய்யலாம். பிறகு அடுத்து என்ன செய்யவேண்டும், என்ற பகுத்தறிவு உங்களுக்கு வளர்ந்து விடும். சைவம் உணவை உண்பவர்க்கு தியானம், மூச்சு பயிற்ச்சி விரைவாக கைகூடும். பயிற்சிகள் தொடர்ந்து செய்பவர்க்கு, சைவ உணவை மேற்கொள்பவர்க்கு,  கள்ளம் கபடமற்றவர்க்கு, தன்னால் இயன்ற தர்ம காரியங்கள் செய்பவர்க்கு, குரு உங்களுக்குள் உதயமாகி உங்களை வழிநடத்துவார் இது சத்தியம்.குருவை வெளியே தேடாதே உனக்குள் தேடு.  அடுத்த பதிவில் சொல்ல இருக்கும் பயிற்ச்சிக்கு முன்னதாக இந்த பயிற்சி மேற்கொண்டு வாருங்கள்.   தொடர்வோம்.🙂♥️

No comments:

Post a Comment