Search This Blog in tamil

Saturday, 22 May 2021

இரகசியகேள்வி-பதில்கள்

 இரகசியகேள்வி-பதில்கள்


பால்வினை நோய்கள் வராமல் தடுக்கும் வழிகள் யாவை?


1. முன்பின் அறிமுகம் இல்லாதவருடன் உடலுறவில் ஈடுபடும் பொழுதெல்லாம் கருத்தடை உறை (நிரோத் – Condoms ) பயன்படுத்த வேண்டும்.


2. உடலுறவு முடிந்தவுடனேயே சிறுநீர் கழித்து விடுவது நல்லது.


3. மலவாயில் உடலுறவு கொள்வது பல்வேறு நோய்களை உருவாக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.


4. பொதுவாக உடலுறவுக்குப் பின் பாலியல் உறுப்புகளை நீரினால் சுத்தம் செய்வது நல்லது.


சந்தேகங்களும் – விளக்கங்களும்


52. மாதவிலக்கின் போது உடலுறவு கொள்ளலாமா?


மாதவிலக்கு என்றால் என்ன என்று வினா எண் 14-ல், முன்பே விளக்கப்பட்டுள்ளது. அதாவது பருவமடைந்த பென் இன விருத்திக்காக அடிவயிற்றில் (அண்ட கோசத்தில்) உருவாகும் சினைமுட்டை கர்ப்பப்பைக்கு வந்து அது குறித்த காலத்திற்குள் கருவுறுதல் நடைபெறாதபொழுது இரத்தமாக பெண்ணின் பிறப்பு உறுப்பு வழியாக வெளியேறும் நிகழ்வே மாத விலக்காகும். இது குறிப்பிட்ட சில நாட்காளே (3 முதல் 5 வரை) இருக்கும்.


இந்தக் குறிப்பிட்ட சில நாட்களில் அல்லது இதற்கு முன்னும் பின்னும் சில நாட்களுக்கு பெரும்பாலான பெண்களின் மனநிலை சீராக இருப்பதில்லை. அதிக கோபம், எரிச்சல், வலியினால் உடல் நலிவு போன்ற நிலையில் இருப்பார்கள். அந்த சமயம் அவர்களுடன் உடலுறவுக்கு முயல்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம்.


மேற்கண்ட பிரச்சனைகள் இல்லாதபோது ஆரோக்கிய மான உடலமைப்புள்ள பெண்களுடன் மாதவிலக்குக் காலங் களில் அவர்களின் விருப்பத்துடன் உடலுறவு கொள்வது மருத்துவ ரீதியில் தவறு இல்லை. மருத்துவர்களின் கூற்று அப்படி யிருந்தாலும் சம்மந்தப்பட்ட பெண்ணின் மனநிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .(இது அவரவர்களின் மன நிலையைப் பொறுத்த விசயமாகும்.)


53. ஒரு பெண் பூப்படைந்த நாள் முதல் உடலுறவு கொள்ள ஏற்றவளாக இருப்பாளா?


ஒரு பெண் பூப்படைந்து விட்டாலே அவள் அன்று முதல் கருத்தரிக்க (குழந்தை பெற) தயாராகிவிட்டாள் என்றெ பொருள். எனவே பூப்படைந்தவுடன் உடலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகத்திற்கே இடமில்லை. ஆனால் பெண்களின் வயது (ஏனெனில் தற்போது 12 அல்லது 13 வயதுகளிலேயே சில பெண்கள் இந்த நிலையை அடைந்துவிடுகிறார்கள்) உடல்நலன், சமூக நலன் போன்றவற்றைக் கருத்திற் கொண்டும், பெண்கள் குழந்தை பெறுவதை எவ்வளவு காலம் தள்ளிப்போட திட்டமிடுகிறார்களோ அது பெண்களுக்கு நல்லது. பெண்கள் தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை என்ற முடிவுடன் வாழ்ந்தால் பாராட்டுக்குரியது.


54. ஆண்களுக்கு உடலுறவின்போது விந்து வெளியேறுவது போல பெண்களுக்கு திரவமேதும் வெளியேறுமா?


உடலுறவின்போது இருபாலருக்கும் உயவுத் திரவம் சுரக்கும். (இந்த உயவுத்திரவம் பெண்களுக்கு உச்சக் கட்ட நேரங்களில் அதிக அளவு சுரக்கும்) உடலுறவின்போது ஆண்களுக்கு விந்து வெளியேறுவதுபோல பெண்களுக்கு எந்தத் திரவமும் வெளிவருவது இல்லை.


55. கருவுண்டான பிறகு எத்தனை மாதங்கள் வரை உடலுறவு வைத்துக் கொள்ளலாம்?


கருவுண்டாகி குழந்தை பெறுவதற்கு முதல் நாள் வரை உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று மருத்தவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் கருவுண்டான பெண்ணின் உடல் நிலை, மன நிலையைக் கருத்தில் கொண்டு இருவரும் கால அளவை தீர்மானித்துக் கொள்வது நல்லது.


56. பிரசவத்திற்குப்பின் எவ்வளவுகாலம் கழித்த பிறகு உடலுறவு வைத்துக்கொள்ளலாம்?


சுகப் பிரசவமாக இருந்தால் 1 மாதத்திற்குப் பிறகு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகிகின்றனர். அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்திருந்தால் அந்த வலியிலிருந்து அவர்கள் முழுமையாக குணமடையும் வரை பொறுத்திருந்து மருத்துவரின் ஆலோசனைப்படி உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும். இரத்தக்கசிவு இருக்குமானால் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக பெண்ணின் உடல், மனவலிமை மற்றும் அவர்களின் விருப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு உறவு கொள்ள வேண்டும்.


57.கருப்பையில் உள்ள குழந்தையை ஸ்கேன் செய்வது என்றால் என்ன?


செவி உணரா ஒலி அலைகலை, பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, வளரும் குழந்தையின் நிலையைத் திரையில் காண முடியும். இதனால் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதயையும் அறிய முடியும். குழந்தையின் வளர்ச்சி அதன் செயல்பாடு இதன் மூலம் அறிய முடிகிறது. செலுத்தப்படும் ஒலி அலைகள் குறிப்பிட்ட நெறிமுறைக்கு மீறி இருப்பின் குழந்தையின் உடல் நலத்தைப் பாதிக்கும். குழந்தையின் உடல் நலத்தைப் பாதிக்கும். குழந்தையின் உடல் ஊனம் ஏற்பட்டு இருந்தால் ஸ்கேன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.


ஊனமுற்ற குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்து விட முடியும். தாய் கருவுற்று இருக்கும்போது நோய்வாய்ப் பட்டால் சில சமயங்களில் அந்நோய் கருவில் உள்ள குழந்தை யையும் பாதிக்கும். இம்முறை மூலம் அதனை அறிந்து கொள்ள முடியும். அதே சமயம் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதையும் பார்த்து பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்யவும் இம்முறை தவறாகப் பயன் படுத்தபட்டு வருகிறது.

No comments:

Post a Comment