Search This Blog in tamil

Monday, 19 July 2021

கொக்கோகம்

 👩‍❤️‍👨💝👩‍❤️‍👨💝👩‍❤️‍👨💝👩‍❤️‍👨💝👩‍❤️‍👨💝


அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.


சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது. ஆனால், பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி, மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கத் தெரியாதவனுக்கு அந்தத் தங்க வயல் கிடைத்து என்ன பயன்?


மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்குத் தேன் எவ்வளவு அவசியமோ, அதுபோல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.


பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதையே விலாவாரியாக விவரிக்கிறது இந்த நூல்.


காதலுடன் மணந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு.


அதற்குக் காரணம் அவர்கள் செவ்வனே காமத்தைக் கற்றுக்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தாததுதான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.


💝💝💝💝💝💝💝💝💝💝


அதிவீரராம பாண்டியனின் 

கொக்கோகம் நூலிலிருந்து👇🏻

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️


பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு.


இவர்களில்,


1.பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம்போல் நடை உடையவள். பெண்களில் முதல் தரமான இவளை எல்லாக காலங்களிலும் கூடுதல் இனிது.


2. சித்தினி என்பவள், பெண் யானையைப் போன்றவள்.


3. சங்கினி என்பவள், வடிவமான உடல் அமைப்பு பெறாதவள்.


4. அத்தினி என்பவள், முரட்டுத் தன்மை நிறைந்தவள்.


அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதைக் குறிப்பதாகும்.


அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாள், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும்போது காமம் பெருகும்.


உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டைச் சுவைத்து, நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கையாலும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையையும் சுவைத்தல் போன்றவை மன்மதக் கலையாகும்.


இந்த மன்மதக் கலையை ஆண்கள் அறிந்து, எந்த நிலையில், என்ன மாதிரியான முன் விளையாட்டுகளைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து, நாயகியுடன் உறவுகொண்டால், அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரைப் பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.


ஆடவர்களை முயல், காளை, குதிரை என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.


ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல்,


குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல்,


பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் – இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.


குறைந்த ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில், ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம்.


ஆனால், பெண்களுக்கு இன்பம் கிடைக்காது.


அதுபோல், அதிக ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளம் குறைந்த உறுப்பு உள்ள ஆண் இணைவது நீச்ச சேர்க்கை எனப்படும்.


இதில், ஆண்-பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம் மிகவும் வேறுபடுவதால், இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.


🥳🥳🥳🥳💃🏽💃🏽🥳🥳🥳🥳

No comments:

Post a Comment