மாதவிடாய் பற்றி பொதுஇடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் நாகரீகம் கொண்ட நண்பர்களே
மாதவிடாய் என்பது பெண்ணின் உடல் அமைப்பில் இயங்கியவியலின் சாதாரண உடலியல் சுழற்சி நடைமுறை.
நாப்கின் மற்றும் மாதவிடாய் பற்றிய புரிதல் இன்மை பல ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் இன்றளவும் உள்ளது.
இன்றும் கூட பெண்கள் வெளியில் சொல்ல வெட்கிகுறுகுவதும், ரகசியம் காக்கவேண்டிய ஒன்றாகவும் தான் மாதவிடாயை பார்க்கின்றனர்.நாப்கின்களை பெரும்பாலான ஆண்கள் முழுதாக பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஏனென்றால், கடைகளில் கருப்பு கவர்களின் உள்ளேதானே வைத்து தருவார்கள்.
இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது பிளாஸ்டிக் வகைப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில் முதல் லேயர்… சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது. இரண்டாவது லேயர், மறுசுழற்சி செய்யப்பட்ட அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர், முன்றாவது லேயர் ஜெல் (பெட்ரோலியப் பொருளால் தயாரானது) கீழ் லேயர்… பொலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது.
நல்ல நாப்கின் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு பி.ஐ.எஸ்ஸின் பரிந்துரை
15.2 மி.மீ. அடர்த்தி இருக்க வேண்டும்.
நாப்கினின் நீளம் 200 – 20 மி.மீ (ரெகுலர்),
240 – 20 மி.மீ (லார்ஜ்),
280 – 20 மி.மீ (எக்ஸ்ட்ரா லார்ஜ்) இருக்க வேண்டும்.
அகலம் 60 முதல் 75 மி.மீ. இருக்க வேண்டும்.
30 மி.லி. திரவத்தை உறிஞ்சும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும்.
முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறகு நாப்கினின் அடியிலோ, பக்க வாட்டிலோ கசிவு ஏதும் இருக்கக் கூடாது.
ஏதோ ஒரு காரணத்தால் இன்றும் பெண்களுக்கு சுகாதாரமற்ற மாதவிடாய் அமைகிறது
மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தத்தின் மூலம் நுண்ணுயிர் கிருமி தொற்றுகள், நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
சுகாதாரக் குறைவான மாதவிடாய் கால அணுகுமுறைகளால் பல நோய்த் தொற்றுகள் ஏற்படுவதோடு, கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்று நோய்கள் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், சுகாதாரக் குறைவான அணுகுமுறைகள் சில நேரங்களில் குழந்தையின்மைக்கும் வழிவகுக்கக் கூடுமென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருப்பை வாய் புற்றுநோயால் உண்டாகும்.
கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும் விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத சூழலில் அந்த துணி உரசி உரசி தொடையெல்லாம் எரியும்.
துணியை நல்லா தோய்க்காமல் அதைத் திருப்பிப் பயன்படுத்தி அதுனால் கிருமி தாக்கி நோய் தாக்கும்
பெண்கள் நிறைய இருக்கிறார்கள் நாள் முழுக்க மாற்ற முடியாமல் திண்டாடும் பெண்களைப் போன்று பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் நாப்கினை மாற்ற வாய்ப்பில்லாமல் இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் கண்டு கவலை அடைந்ததுண்டு.
பல ஆண்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.எனவே ஆண்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு தரப்படவேண்டும்.சானிடரி நாப்கின்களை இன்னும் மலிவான விலையில், அனைத்து தரப்பு பெண்களுக்கும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.
பெண்ணுக்கு உடலே விதியல்ல Biology is not Destiny என்ற புரிதல் இல்லாமல் ஆண்களும், பெண்களும் இருப்பதும் ஒரு பிரச்சினை.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் அவதியை ஆண்களால் அனுபவிக்க இயலாது என்பதால் குறைந்த பட்சம் உணரவாவது முயற்சி செய்வது ஆண்கள் ஒவ்வொருவரது கடமை. இதனை அனைவரிடத்தும் கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை. சேர்க்க முடியும், சேர்ப்போம்.
நன்றி
No comments:
Post a Comment