🤺🤾♀️🤼♀️🏇🤺🤾♀️🤼♀️🏇🤺🤺
*மனிதன் காமத்திற்கு எதிராக ஒரு போரையே உருவாக்கியுள்ளான்*
அந்தப் போரின் விளைவுகளை நாம் சரியாக கணிப்பது கடினம் .
ஓரினச் சேர்க்கை என்பது மனிதனின் நாகரீகமடைந்த இந்த உலகத்தைத் தவிர வேறு எங்காவது உண்டா ?
பின்தங்கிய பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடையே ஒரு ஆண் மற்றொரு ஆணிடம் உடலுறவு கொள்வது என்பதை கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது .
நான் பழங்குடி மக்களிடையே தங்கியுள்ளேன் .
அவர்களிடம் நாகரீகமடைந்த மக்களின் இந்தப் பழக்கத்தைப் பற்றி கூறியபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் .
அவர்களால் இதை நம்ப முடியவில்லை .
ஆனால் மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்காக சங்கங்கள் உள்ளன .
பெரும்பாலான மக்கள் ஓரினச் சேர்க்கை பழக்கமுள்ளவர்களாக இருக்கும்போது அதைத் தடுப்பது ஜனநாயகமற்றது என்று அந்த சங்கங்கள் வாதாடுகின்றன .
ஓரினச் சேர்க்கையை ஒழிப்பதற்கு சட்டம் இயற்றுவது மனிதனின் அடிப்படை உரிமையையே எதிர்ப்பதாகும் என்று அவைகள் கூறுகின்றன .
அது சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்துவது போலாகிறது என்கின்றனர் .
தன் இனச் சேர்க்கைக்கான இந்த மனோபலம் பிறப்பதற்கு செக்ஸோடு நாம் கொண்டுள்ள போர்தான் காரணம் .
அதே போன்று நாகரீகம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளதோ அதே அளவுக்கு விபச்சாரமும் அதிகமாகி விட்டது .
முதலில் இந்த விபச்சாரத் தொழில் ஏன் ஏற்படுகிறது என்று யாராவது சிந்தித்துப் பார்த்ததுண்டா ?
மலைகளில் வாழும் பழங்குடி மக்களிடம் ஒரு விபச்சாரியையாவது காட்ட முடியுமா ?
முடியாது .
அங்கு வாழும் அந்த மக்களால் , தனது கற்பை விற்கின்ற பெண்கள் இருக்கிறார்கள் என்றோ , காசுக்காக உடலுறவிற்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள் என்றோ கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது .
ஆனால் மனிதனின் நாகரீக முன்னேற்றத்தினால் காமத்தின் இந்த நெரிசல்களும் ஏற்பட்டு விட்டன .
இது மலர்களைத் தின்னும் அந்தச் செயலுக்கு ஒப்பானது .
மேலும் செக்ஸினால் ஏற்படும் ஏனைய நெறி கோணல்களை நாம் முற்றிலும் கணக்கில் எடுத்துப் பார்த்தால் ,
செக்ஸின் அசிங்கமான வெளிப்பாடுகளின் முழு வரிசையையும் பரிசோதித்துப் பார்த்தால் நாம் இன்னும் அதிகமாக அதிர்ச்சிதான் அடைவோம் .
மனிதனுக்கு என்ன நேர்ந்துவிட்டது ?
இந்த அசிங்கங்களுக்கும் , விபச்சாரத்திற்கும் யார் பொறுப்பாளிகள் ?
செக்ஸைப் பற்றி மனிதன் புரிந்து கொள்வதற்கு பதிலாக அதை அடக்கி வைக்க வேண்டும் என்று கற்பித்தவர்கள் தான் இதற்குப் பொறுப்பாளிகள் .
அப்படி அடக்கி வைத்ததினால்தான் மனிதனின் காம சக்தியானது தவறான வழிகளின் வழியாக ஒழுகிக் கொண்டிருக்கிறது .
மனித சமுதாயம் முழுவதும் நோயுற்று , கீழ்த்தரமாக உள்ளது .
இந்த புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ள சமுதாயம் மாற்றியமைக்கப்பட வேண்டுமெனில் காம சக்தியானது தெய்வீகமானது , காமத்தை நோக்கி கவர்ந்திழுக்கப்படுவது தேவையான மத ஆச்சாரம்தான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் .
செக்ஸை நோக்கி ஏன் அவ்வளவு பலமாக நாம் இழுக்கப்படுகிறோம் ?
நிச்சயமாக அது பலம் வாய்ந்தது .
காமத்தின் அடிப்படை மட்டங்களை நாம் கிரகித்துக் கொண்டால் நாம் மனிதனை காமத்தில் இருந்து வெளியே தூக்க முடியும் .
அதன் பின்பு மட்டுமே " காம " உலகில் இருந்து " ராம " உலகம் வெளிப்படும் .
அதன் பின்புதான் காமம் நிறைந்த இந்த உலகில் இருந்து கருணை வெளிப்படும்
.........தொடரும் .............
**************#ஓஷோ#***********
*******#காமத்திலிருந்து_கடவுளுக்கு#*******
#பகுதி :---------- 43 ----------
No comments:
Post a Comment