*#காமம்_நிர்வாணம்*
நீட்ஷே ஒருமுறை அழகான ஒரு குறிப்பைக் கூறினார் .
மதமானது காமத்திற்கு விஷம் வைத்து அதைக் கொல்ல முயன்றாலும் காமம் மரணமடைந்து விடவில்லை .
அதற்கு மாறாக அது இன்னமும் உயிருடனும் , முழுவதும் விஷம் நிறைந்ததாகவும் உள்ளது என்று அவர் கூறினார் .
காமம் இறந்து போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஆனால் அது அப்படி ஆகவில்லை .
அதற்கு விஷம் வைக்கப்பட்டது என்றாலும் அது உயிர் வாழ்ந்து வருகிறது .
நமது வழிகள் குறி தவறிச் சென்று விட்டன .
இன்று நம்மைச் சுற்றி நாம் காணுகின்ற காம வேட்கையானது விஷமாக்கப்பட்ட காமத்தின் சுருக்கம்தான் .
செக்ஸ் என்பது மிருகங்களிடத்திலும் உள்ளது .
ஏனெனில் செக்ஸ்தான் உயிர்ச்சத்து .
ஆனால் காமவெறி மனிதனிடம் மட்டுமே உள்ளது .
காமவெறி என்பது மிருகங்களிடம் இல்லை .
மிருகங்களின் கண்களைப் பாருங்கள் .
நீங்கள் அதில் காமத்தைக் காண முடியாது .
ஆனால் நீங்கள் ஒரு மனிதனின் கண்களைப் பார்த்தால் அதில் காமத்தைத் தவிர வேறெதையும் காணமுடியாது😏😏
காமத்திற்கான மொத்த ஆசையைத் தவிர வேறெதையும் காண முடியாது .
எனவே இன்றைய தினத்தில் மிருகங்கள் ஒருவிதத்தில் அழகாக உள்ளன .
ஆனால் பைத்தியக்காரத் தனமாக காமத்தை அடக்கி வைக்கின்ற இந்த மனிதனின் அசிங்கத்திற்கும் , துர்நாற்றத்திற்கும் ஒரு முடிவே இல்லாமல் இருக்கிறது .
எனவே காமவெறிலிருந்து மனிதனை விடுவிப்பதற்கான முதல் படியாக நான் நேற்று கூறியதைப்போல் குழந்தைகள் , சிறுவர்கள் , சிறுமியர்கள் இருபாலருக்கும் செக்ஸ் பாடம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் .
அவர்களுக்கு இந்த செக்ஸ் பற்றிய அறிவைக் கொடுப்பதோடு கூட அவர்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அசிங்கமான , செயற்கையான இடைவெளி அழிக்கப்பட வேண்டும் .
உண்மையில் அவர்கள் இன்னும் நெருக்கமாக கொண்டு வரப்பட வேண்டும் .
இப்போது நாம் பிரித்து வைத்திருப்பது முற்றிலும் செயற்கைத்தனமானது .
ஆணும் , பெண்ணும் முற்றிலும் வேறுபட்ட இரு உயிரினங்களைப் போல் ஆக்கப்பட்டு விட்டனர் .
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மனிதனால் இப்படி உருவாக்கப்பட்டுள்ள பிரிவினையை உற்று நோக்கினால் அவர்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ;
அவர்கள் இருவரும் மனித இனத்தின் ஒரு பகுதிதான் என்று கூட நம்மால் நம்புவதற்கு கடினமாக உள்ளது .
சிறுவர்களும் , சிறுமியர்களும் அவர்கள் விரும்பிய பொழுதெல்லாம் ஆடைகளின்றி வீட்டைச் சுற்றிவர அனுமதிக்கப் படுவார்களேயானால் அவர்களின் பிற்காலங்களில் அவர்கள் மனதில் ஏற்படும் இயற்க்கைக்கு மாறான ஆசைகளையும் , ஆபாசத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம் .
குழந்தைகள் ஒருவர் மற்றொருவரின் உடலைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆவலுள்ளவர்களாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே .
நாகரீகமடைந்தவர்களின் குழந்தைகள் எல்லாம் ' ' டாக்டர் ' ' விளையாட்டு விளையாட ஆசைப்படுவதை நாம் அனைவரும் பார்க்கிறோம் .
இதைவிட இன்னும் ஒரு விஷயம் என்னவெனில் , அமெரிக்க சமுதாயத்தில் மதத்தின் காவலர்கள் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்கள் புதிதாக ஒரு பிரிவை ஆரம்பித்துள்ளனர் .
அவர்களின் முக்கிய நோக்கம் என்னவெனில் , நாய் , பூனை , குதிரை மற்றும் ஏனைய மிருகங்களை ஆடையின்றி வெளியே வருவதைத் தடுப்பதுதான் .
அந்த மிருகங்களை அவர்கள் தெருவில் எடுத்து வரும்போது அவைகளுக்கு ஆடைகள் அணிவித்துத்தான் எடுத்து வர வேண்டும் என விரும்புகின்றனர் .
குழந்தைகள் ஆடையில்லாத அந்த மிருகங்களைப் பார்த்தால் அவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள் என்பதுதான் அவர்கள் கூறும் கருத்தின் பின்னணி .
அம்மணமாக இருக்கும் ஒரு மிருகத்தைப் பார்த்து குழந்தை கெட்டுவிடும் என்று கூறுவது எவ்வளவு வேடிக்கையாக உள்ளது !
ஆனால் எப்படியோ அவர்கள் தெருக்களில் ஆடையில்லாமல் மிருகங்கள் திரியக் கூடாது என்பதற்கு ஒரு சங்கமே ஆரம்பித்துள்ளனர் .
மனித வர்க்கத்தைக் காப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்படுகின்றனவென்று பார்த்தீர்களா !!!
மனித இனத்தின் காவலர்கள் என்று கூறிக் கொண்டு திரியும் இவர்கள்தான் மனிதனை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் .
ஆடைகள் இல்லாமல் மிருகங்கள் எவ்வளவு அழகாகவும் , அற்புதமாகவும் இருக்கின்றன என்று நீங்கள் ஒருபோதும் கவனித்ததில்லையா ?
அவைகளின் நிர்வாணத்திலும் கூட அவைகள் கள்ளம் கபடமற்றவைகளாக , எளிமையானவைகளாக , வஞ்சகமின்றி இருக்கின்றன .
மிருகங்கள் அம்மணமாக இருப்பதைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதே இல்லை .
மேலும் நீங்கள் உங்களது அம்மணமான நிலையை உங்களுக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருப்பதால்தான் மிருகங்கள் அம்மணமாக இருப்பது உங்கள் கண்களுக்கு பளிச்சென்று தெரிகிறது .
ஆனால் தங்களின் நிர்வாண நிலையைக் குறித்து பயப்படுகிறவர்களும் , கோழைகளும் அதை ஈடு செய்ய எதை வேண்டுமானாலும் செய்வதற்கு முயற்சிப்பார்கள் .
இப்படிப்பட்ட பரிகாரங்களையெல்லாம் புதிது புதிதாக கண்டுபிடிப்பதால்தான் மனித இனம் நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டு வருகிறது .
மனிதன் எளிமையாக இருக்க வேண்டுமெனில் , அவன் ஆடையின்றி , நிர்வாணமாக , கள்ளம் கபடமற்ற பேரானந்தம் நிறைந்து இருக்கலாம் .
மகாவீரரைப் போன்றவர்கள் ஆடையின்றி இருந்தனர் .
அதுபோல ஒவ்வொரு மனிதனும் தானும் ஆடையின்றி இருக்க முடியும் என்கிற மனப்பக்குவத்தை அடைய வேண்டும் .
மதவாதிகள் மகாவீரர் ஆடைகளைத் தவிர்த்து விட்டார் என்றும் , ஆடைகள் அணிவதை அவர் விட்டு விட்டார் என்றும் கூறுகின்றனர் .
ஆனால் நான் இதை மறுக்கிறேன் .
அவரது சித்தம் , அவரது உள்ளுணர்வு அந்த அளவுக்கு தெளிவாகவும் , அந்த அளவுக்கு கள்ளம் கபடமற்றதாகவும் ஒரு குழந்தையின் உள்ளத்தைப் போல் தூய்மையானதாக ஆகிவிட்டதால்தான் , அவர் நிர்வாணமாக இந்த உலகத்தை சந்தித்தார் .
தன்னிடம் மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்று ஒரு மனிதன் எண்ணும்போது , அவன் நிச்சயம் அம்மணமாக இருக்க முடியும் .
தனக்குள் மறைத்து வைத்துக் கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது என்று மனிதன் உணர்வதால்தான் அவன் ஆடைகளை அணிகிறான் .
ஆனால் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்னும்போது அவன் ஆடைகள் அணிய வேண்டிய அவசியமில்லை .
ஒவ்வொரு தனிமனிதனும் எந்தவிதமான குற்ற உணர்வுமில்லாமல் தூய மனத்தோடு , தெளிவான மனத்தோடு ஆடைகளை நிராகரிக்கும் தகுதியை அடைகின்றதொரு புதிய உலகம் அவசியம் தேவை .
அதில் தவறு எங்கே உள்ளது ?
அம்மணமாக இருப்பதில் என்ன அபாயமுள்ளது ?
வேறு ஏதாவது காரணங்களுக்காக ஆடைகளை அணிந்து கொள்வதென்பது வேறு விஷயம் .
ஆனால் தான் அம்மணமாக இருப்பதற்கு பயந்து கொண்டு மட்டுமே உடைகள் அணிவது கர்வத்தைத்தான் காட்டுகிறது .
அம்மணமாக இருப்பதற்கு பயந்து ஆடைகள் அணிவது உங்களது நிர்வாணத்தை இன்னும் அதிகப்படுத்தி , உங்களது மாசுபடுத்தப்பட்ட மனதிற்கு ஒரு ஆதாரமாக அது இருப்பதைத்தான் குறிக்கிறது .
ஆனால் இன்றோ நாம் ஆடைகளை அணிந்தும் கூட நமக்குள் உள்ள நிர்வாணத்தை ஒழிக்க முடியாமல் குற்ற உணர்வுடன்தான் இன்னமும் வாழ்ந்து வருகிறோம் .
ஆ ! கடவுள் எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்கிறார் !
அவர் மனிதனை ஆடையுடன் படைத்திருக்க முடியும் .
இப்படி நான் கூறுவதால் தயவுசெய்து நான் ஆடைகள் அணிய வேண்டாம் என்று கூறுவதாக முடிவு கட்டி விடாதீர்கள் .
வெறும் பயத்தினால் நமது நிர்வாணத்தை மறைப்பதற்காக ஆடைகளை அணிந்து கொள்வது ஒருபோதும் நமது நிர்வாணத்தை மறைத்ததாக ஆகாது என்பதை நான் கூறுவதற்கு தயங்கவில்லை .
நிர்வாணத்தைப் பற்றிய நமது இந்தச் செயற்கைதனமான உணர்வு நமக்கு வெறுப்பூட்டுவதாகவும் , பலமிழக்கச் செய்வதாகவும் உள்ளது .
ஆனால் இந்த உணர்வு ஒரு நீண்ட சமூக பாரம்பரியத்திலிருந்து வந்து விட்டது .
ஆடைகள் அணிந்தும் ஒருவன் அம்மணமாகத் தெரியலாம் .
அதேபோல் அம்மணமாக இருந்தும் ஒருவன் ஆடை அணிந்தவனைப் போலும் தெரியலாம் .
ஆண்களும் , பெண்களும் உடம்போடு ஒட்டி அணிகின்ற நவநாகரீக உடைகளை நீங்கள் பார்த்த பின்னரும் கூட நான் இதைக் குறித்து இன்னும் விளக்கமாகக் கூற வேண்டுமா ?
மற்றவர்கள் தங்களை கடைக்கண்ணால் பார்க்க வேண்டும் என்கிற திருப்தியடையாத ஆசைகளின் வெளிப்பாடுதான் இன்றைய நவநாகரீக உடைகள்
ஆணும் , பெண்ணும் ஒருவர் மற்றொருவரின் உடலைப் பார்த்துப் பழகிவிட்டால் அதன் பின்னர் உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமே நாம் உடைகள் அணிய வேண்டும் என்கிற நோக்கம் தானாகவே வந்துவிடும் .
ஆனால் அந்தோ பரிதாபம் !
நவீன காலங்களில் ஆடைகள் காமவெறியைத் தட்டி எழுப்புவதற்கென்றே திட்டமிட்டு தயாரிக்கப்படுகின்றன .
ஆடைகள் வெறும் ஆடைகளாக இல்லாமல் , மனிதனின் காமவெறியைத் தூண்டும் சாதனங்களாக மாறிக் கொண்டு வருவதால் , மனிதனின் நாகரீக வளர்ச்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?
இதனால்தான் நான் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளையெல்லாம் அம்மணமாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறேன் .
நமது பாலுணர்விற்காக உடலை மறைக்க வேண்டிய தேவையில்லை , வேறு காரணங்களுக்காகத்தான் ( இயற்கைச் சூழல்களால் ஏற்படும் இடர்பாடுகளுக்காக மட்டும் ) உடைகள் தேவை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
மேலும் நிர்வாணம் என்பது தனி மனிதனின் ஆளுகைக்குட்பட்பட்டது .
கள்ளம்கபடமற்ற , எளிமையான மனதிற்கு நிர்வாணம் என்பது குற்றமாகத் தெரியாது .
அது அழகாகத் தெரியும் .
ஆனால் இதுவரை மனிதன் விஷமூட்டப்பட்டு விட்டான் .
நாட்கள் செல்லச் செல்ல அந்த விஷம் மெல்ல மெல்ல மனித வாழ்க்கையின் ஒரு முனையிலிருந்து நேர் எதிர் முனைக்கு வந்து விட்டது .
அதன் விளைவாக நிர்வாணத்தைக் குறித்து நமது நோக்கமும் செயற்கையாகி விட்டது .
பாரதீய வித்யா பவன் ஆடிட்டோரியத்தில் முதல் கூட்டத்தில் நான் இந்தத் தலைப்பில் பேசியபோது ஒரு பெண்மணி என்னிடம் வந்து , ' ' நான் மிகவும் நிலைகுலைந்து போய்விட்டேன் .
உங்கள் மீது எனக்குக் கோபம் வருகிறது .
செக்ஸ் என்பது மானக்கேடான விஷயம் .
காமம் என்பது பாவச் செயல் .
அதைப் பற்றி நீங்கள் ஏன் இவ்வளவு விரிவாகப் பேசுகிறீர்கள் ?
நான் உண்மையிலேயே செக்ஸை நிந்திக்கிறேன் ' ' என்று கூறினார் .
அப்போது அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகி மகன்கள் , மகள்களோடு இருந்தபோதிலும் , அந்தப் பெண்மணி செக்ஸை நிந்திப்பதைப் பாருங்கள் .
அவளை செக்ஸ் என்னும் அந்தப் பாவச் செயலுக்கு அழைத்துச் செல்கின்ற அவளுடைய கணவனை அவள் எப்படி உண்மையிலேயே நேசிக்க முடியும் ?
செக்ஸ் என்னும் பாவச் செயலின் மூலம் பிறந்த அந்தக் குழந்தைகள் மீது உண்மையிலேயே எப்படி அன்பு செலுத்த முடியும் ?
வாழ்க்கையைப் பற்றிய அவளுடைய நோக்கத்தில் விஷம் தெளிக்கப்பட்டு விட்டது .
ஆகையால் அவளது அன்பும் , நேசமும் விஷமானதாகத்தான் இருக்கும் .
எனவே நிச்சயமாக அந்தப் பெண்மணிக்கும் , அவளது கணவனுக்கும் இடையில் அடிப்படையிலேயே பிளவு ஏற்பட்டு விட்டது .
அவளுக்கும் , அவளது குழந்தைகளுக்கும் இடையில் இருப்பது நிச்சயம் முள்வேலியாகத்தான் இருக்க முடியும் .
ஏனென்றால் அவளது எண்ணப்படி குழந்தைகள் பாவத்தின் பழங்கள் .
அவளுக்கும் , அவளது கணவருக்குமிடையே உள்ள உறவு ஒரு பாவச் செயலுக்காகத்தான் உள்ளது என்கிற குற்ற உணர்வு அந்தப் பெண்மணியின் ஆழ் மனதில் அடிக்கடி நடமாடிக் கொண்டிருக்கும் .
பாவச் செயலோடு யாராவது இணக்கமாக வாழ முடியுமா ?
செக்ஸைப் பழித்துக் கூறுபவர்கள்தான் நம் ஒவ்வொருவரின் மண வாழ்க்கையையும் குலைத்து விட்டனர் .
காமத்தின் மீது மதிப்பு வைப்பதற்குப் பதிலாக அதற்கு எதிராக , பலவந்தமாக அதை ஒழிக்கும் எண்ணமானது அநேக தீய விளைவுகளை ஏற்படுத்தி விட்டது .
தனக்கும் , தனது மனைவிக்கும் இடையே கண்ணுக்குப் புலப்படாத ஒரு தடையை வைத்துக்கொண்டு , அவளோடு கூடுகின்ற எந்த ஒரு ஆணும் தன் மனைவியுடன் மட்டும் திருப்தி அடைய முடியாது .
அவன் நிச்சயமாக அடுத்த பெண்களைத் தேடித் திரிவான் .
அவன் விபச்சாரிகளிடம் செல்வான் .
அவன் தனது வீட்டில் திருப்தி அடைந்திருந்தால் இந்த உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் அவனுக்குத் தங்கைகளாகவும் , தாய் மார்களாகவும் தென்படுவர் .
ஆனால் இப்போது தனது மனைவியிடம் திருப்தி இல்லாததால் , பார்க்கின்ற எல்லாப் பெண்களையும் தன் மனைவியாக பாவிப்பான் .
எப்போதும் எதன் பின்னாலாவது போய்க் கொண்டிருப்பான் .
ஆனால் இது இயற்கைதான் . இப்படித்தான் நடக்கும்
..........தொடரும் .........
*****************#ஓஷோ#***************
**********#காமத்திலிருந்து_கடவுளுக்கு#*********
#பகுதி :-----------56 ,57 , 58 ----------
#படித்ததில்_பிடித்தது
No comments:
Post a Comment