Search This Blog in tamil

Tuesday, 9 August 2022

திருமணத்திற்கு பிறகு ஏன் கள்ள உறவு?( EMA)

 goldenking:

திருமணத்திற்கு பிறகு ஏன் கள்ள உறவு?( EMA)

சென்னை உள்ளிட்ட நகர தம்பதிகள் சொன்ன டாப் 10 காரணங்கள்

சென்னை: திருமணம் முடிந்த பின்பு தம்பதிகள் 

வேறு ஆணுடனோ பெண்ணுடனோ ரகசிய உறவு ஏன் வைத்துக்கொள்கின்றனர் 

என்பதற்கான காரணங்களை கிளீடன் ஆப் வெளியிட்டுள்ளது.

தற்போதைய கால கட்டத்தில் 

கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள்

 பெருமளவில் அதிகரித்து வருகின்றன. 


ஆரம்பத்தில் கருத்து வேறுபாடாக தொடங்கும் இந்த பிரச்சினை 

நாளடைவில் விவாகரத்தில் முடிகிறது.

இதன் காரணமாக முன்பைவிட விவாகரத்து வழக்குகளும்

 நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதே 

சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

 இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


ரகசிய உறவு


கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது, 

போதிய நேரமின்மை,

 தங்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேளாது 

என அடுக்கிக் கொண்டே போகலாம்


. ஆனால், இத்தகைய போக்கு மாற வேண்டும்

 என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


இதேபோல் ஒருசிலர் திருமணமான கணவர்கள்

 தனது மனைவிக்கு தெரியாமல் 

வேறு பெண்ணுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, 

உறவு வைத்துக்கொள்வதும், 


இதேபோல் 

திருமணமான பெண் வேறு ஒரு நபருடன்

 ரகசியமாக உறவு வைத்துக்கொள்வது 

போன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.


முதல் 3 காரணங்கள்

இந்த நிலையில், சென்னை போன்ற பெரு நகரங்களில் 

திருமணமான தம்பதிகள் அதிகம் ஏமாற்றப்படுவதற்கான

 அல்லது ஏமாறுவதற்கான 10 காரணங்களை 

பிரபல டேட்டிங் செயலியான கிளீடன் வெளியிட்டுள்ளது. 


இதில்,

 சலிப்பு, 

போதிய அளவு தகவல்களை தம்பதிகள் பரிமாறிக்கொள்ளாதது,

 ஒப்புக்கு பேசுவது 

ஆகியவையே முதல் 3 காரணங்களாக பட்டியலிட்டுள்ளது. 


நாட்டின் முதல் தர நகரங்களான 

மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு மற்றும் புனே

 ஆகிய நகரங்களில் 

திருமணத்தை தாண்டி பிற நபர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் 

டேட்டிங் செயலியை பயன்படுத்துபவர்களில் 

சுமார் 10 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் எல்லாம் 35 முதல் 45 வயது வரம்புக்கு உட்பட்டவர்கள் ஆவர்.


பாலியல் ரீதியான உறவு


கிளீடன் செயலியின் மேலாளர் சிபில் ஷிட்டெல் இந்த ஆய்வு முடிவுகள் பற்றி கூறும் போது, 

'திருமணத்தை தாண்டி வேறு நபர்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்வது 

உலகம் முழுவதும் தவறான செயலாகவே கருதப்படுகிறது. 


ஆனாலும் இதில் பல விஷயங்கள் உள்ளன.

 தம்பதிகள் பிற நபர்கள் பாலியல் தேவைக்காக நாடிச்செல்வதற்கு 

ஏமாற்றுதல் அல்லது ஏமாற்ற போவது ஆகியவை மட்டுமே காரணங்களாக இல்லை. 


இதைத் தாண்டி தம்பதிகள் இடையே போதிய அக்கறையின்மை 

அதாவது அலட்சியமாக செயல்படுதல், 

குடும்ப சண்டை, 

தனிமையாக உணர்தல் 

உள்ளிட்ட வேறு பல காரணங்களும் உள்ளன.


என்னென்ன காரணங்கள்

இதில் முதன்மையான காரணங்கள் என்னவென்றால், 

சலிப்பாக உணர்தல், 

அதிகம் பேசிக்கொள்ளாதது, 

தங்களுக்குள் உள்ள தகவல்களை சரியாக பகிர்ந்து கொள்ளாதது, 

அதீத எதிர்பார்ப்பு , 

கடந்த கால உறவுகள் 

( தங்கள் முன்பு தொடர்பில் இருந்த நபர்களோடு தனது துணையை ஒப்பிட்டு பார்ப்பது) 

பல துணைகளோடு வாழும் நபர்களை ஏற்றுக்கொள்வது,

 குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சினை, 

செக்ஸ்க்கு அடிமையாவது'

 ஆகியவை இருப்பதாக தெரிவித்துள்ளார்.



பெண்கள் 'திருமணத்தை தாண்டி வேறு நபர்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள  காரணங்கள் 


கணவன் மனைவியை மதிப்பது இல்லை 

மனைவியை அடிமை போல நடத்துவது 

மனைவியை சக உயிராக நினைத்து அவளுக்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருக்கும் என்று புரிந்து கொள்ளாமை

கணவனின் தாய் மற்றும் சகோதரிகள் உறவினர்கள் போன்றவர்களின்  பேச்சைக் கேட்டு மனைவியை உதாசீனப் படுத்துவது 

மனைவியுடன் சண்டை போடுவது 

மனைவியின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்காதது 

மனைவியை அன்பாக நடத்தாமை 

அக்கறை ( care taking )காட்டாமை 

கருணையுடன் நடந்து கொள்ளாமை 


பாலியல் ரீதியாக திருப்திப் படுத்தாமை 

முன் விளையாட்டுகள் ஏதும் இன்றி மிருகம் போல தன்னுடைய இச்சை தணிந்தால் போதும் என்ற பாலியல் செயல்பாடுகள் 

பாலியல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது அது பற்றி தெரிந்து கொள்ள அக்கறை காட்டாதது 

பெண்ணகளின் பெண் உறுப்பை விந்து கழிக்கும் கழிப்பிடம் ( Toilet ) போல பயன்படுத்துதல் 

தன்னுடைய பாலியல் குறைகளை மறைப்பதற்காக 

மனைவியை மட்டம் தட்டுதல் 

தவறாக பேசுதல்

 காம வெறி பிடித்தவளாக சித்தரித்தல் 

கொடுமைகள் செய்தல் 

போன்ற பல காரணங்கள் உள்ளன 



பொதுவாக  பெண்கள் திருமனமான புதிதில் எளிதாக திருப்தி அடைந்து விடுவார்கள் 

இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து

 அவர்கள் பள்ளிக்கு செல்லும் வரை 

பாலியல் திருப்தி இன்மையை அதிகம் வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள்


ஆனால் பெண்களின் முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல் குழந்தைகள் பள்ளிக்கு சென்று விடுவார்கள் 

ஓரளவுக்கு பகலில் ஒய்வு கிடைக்கும் 

அப்போது அவர்களுக்கு பாலியல் நாட்டம் அதிகம் இருக்கும் 

தோழிகளுடன் பேசி பல விசயங்களை தெரிந்து கொள்வார்கள் 

அதுவும் தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பெண்கள் அனைத்து பாலியல் விழிப்புணர்வுகளையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்


அவர்களின் பாலியல் செயல்பாடுகளும்  எதிர்பார்ப்புகளும் தேவைகளும் வேறுபடும் 

 

இந்த வயதில் அவர்களின் பாலியல் தேவைகளை அறிந்து திருப்திப் படுத்த வேண்டியது கணவனின் கடமை ஆகும் 


ஆனால் பல் ஆண்கள் குடும்பத்துக்காக சம்பாதிக்கும் காலமும் இதுதான் 


அதனால் பல ஆண்கள் இதில் நாட்டம் அதிகமாகக் காட்ட மாட்டார்கள் அதுவும் ஒரு காரணம் 


மேலும் முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல்பட்ட பெண்கள் தங்கள் கற்பனைக்கு வடிவம் கொடுத்து இன்பம் பெற  நினைப்பார்கள்

 நீண்ட நேர முன்விளையாட்டுகள் பலவித பொசிசன்களில் செயல்பாடுகள் போன்றவற்றை எதிர்பார்ப்பார்கள் 

அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்போது வாய்ப்பு கிடைத்தால் சில பெண்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் 


கணவனை இழந்த பெண்கள்

 பல வருடங்களாக நீண்ட கால நோய்களால் பாதிக்கப் பட்டு இருக்கும் கணவனின் மனைவிகள் 

வேலை நிமித்தமாக நெடு நாட்களாக அல்லது வருடக் கணக்கில் பிரிந்திருக்கும் கணவனை உடையவர்கள் 

குடி மற்றும் போதைக்கு அடிமையாகி குடும்பத்தைக் கவனிக்காத  கணவனை உடைய மனைவிகள் 

உழைக்காமல் சோம்பேறியாக ஊர் சுற்றி அலையும் ஆண்களின் மனைவிகள் 

பாலியல் வாழ்வில் திருப்தி அடையாத மனைவிகள் 

பொதுவாக வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வார்கள் 


மிக சில பெண்கள் ஒரு மாறுதலுக்காகவும் 

ஒரு வேடிக்கைக்காகவும் 

வேறு ஆண்களின் உறவு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகவும் 

இப்படி செயல்களில் ஈடுபடுவது உண்டு 



ஆண்கள் 'திருமணத்தை தாண்டி வேறு நபர்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள  காரணங்கள் 


அன்பு இல்லாத மனைவி -அக்கறை காட்டாத மனைவி 

எப்போதும் எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் மனைவி 

அடிக்கடி சண்டை போட்டு மனம் நிம்மதி இல்லாமல் ஆகும் மனைவி 

வீட்டுக்கு போனாலே பிரச்சினைதான் என்று என்னும் அளவுக்கு தொல்லை கொடுக்கும் மனைவி 

கணவனின் வருமானத்தை அறிந்து செலவு செய்து குடும்பத்தை நடத்தாமல் குறை சொல்லும் மனைவி 

குழந்தைகளை சரிவர கவனிக்காத மனைவி 

தன குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு கணவனை தனிக் குடித்தனம் செய்ய வற்புறுத்தும் மனைவி 

தனக்கும் ன் குடும்பதுக்கும் குழந்தைகளுக்கும் கணவன் சம்பாதிக்கிறான் என்பதை புரிந்து கொள்ளாத மனைவி 

பாலியலில் அக்கறை நாட்டம் காட்டாத அல்லது ஒத்துழைக்காத மனைவி 

போன்ற பல காரணங்கள் உள்ளன 


 சில ஆண்கள் ஒரு மாறுதலுக்காகவும் 

ஒரு வேடிக்கைக்காகவும் 

வேறு  பெண்களின் உறவு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகவும் 

இப்படி செயல்களில் ஈடுபடுவது உண்டு 


திருமணத்தை தாண்டிய உறவுகளால் பிரச்சினை வராத வரை ஒன்றும் நடக்காது 


பிரச்சினை என்று வந்து விட்டால் விவாக ரத்து கொலை அல்லது தற்கொலையில் போய் முடியும் வாய்ப்புகள் அதிகம்

No comments:

Post a Comment