goldenking:
என் கணவர் ஒரு முறைக் கூட அவராக என்னை தொட்டதில்லை.
நானாக கேட்டால் மட்டுமே கடமைக்கு உறவு கொள்கிறார்.
ஆசையாக முத்தமிட்டது கூட இல்லை.
அவரிடம் இதை பேசப் போனால் கேட்பதில்லை.
என் வாழ்க்கை கடைசி வரை திருப்தி இல்லாமலே கழிந்து விடுமோ?
உங்கள் கணவர் போல சில ஆண்கள் இருக்கிறார்கள்
நடுத்தர குடும்ப பெண்கள் செக்ஸ் பற்றியோ, அனுபவிப்பது பற்றியோ, திருப்தி இல்லை, என்பதைப் பற்றியோ பேசினாலோ ஏதோ ஒரு பெரிய குற்றம் பண்ணியது போல பார்க்கிறார்கள்
நம்மை வசைபாடுகிறார்கள் ....
இந்த மாதிரி கணவர் களிடம் மாட்டிய பெண்கள் தான் பின்னாளில் கள்ளத் தொடர்பில் மாட்டிக் கொள்கிறார்கள் ..
. சில ஆண்களுக்கு சொன்னாலும் புரிவதில்லை,
கவரும் படி கவர்ச்சி காட்டினாலும் புரிவதில்லை,
புரிய வில்லையா?
இல்லை திருப்திபடுத்தும் எண்ணம் இல்லையா என்று தெரியாமல் சில பெண்கள்...
.... சமீபத்தில் பக்கத்துவீட்டு பொண்ணும் நானும் படம் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
அந்தப் படத்தின் முத்தக் காட்சிய பார்த்தவள் என்னிடம் உண்மையில் இப்படி நடக்கும அக்கா, சினிமாவில் மட்டும் தானா என்று கேட்டாள்,
நான் அடிப்பாவி திருமணம் ஆகி இரண்டு பையன்கள் உனக்கு, ஏன் உன் கணவர் முத்தம் மிட்ட தில்லையா? என்று கேட்டேன்.
இல்லக்கா இரவில் படுப்போம்..
குழந்தை பிறக்க என்ன பண்ணனுமோ அத்த பண்ணி விட்டு தூங்கிடுவார்.
என் கால்கள் கூட அவர் மேல படக்கூடாது. திட்டுவார்
அதுவும் சில நிமிடங்களில் தான்.
அவர் முன்னாடி கவர்ச்சியா டிரஸ் பண்ண கூடாது..
.தொட்டுப் பேசக் கூடாது ....
.அதான்க்கா எல்லாரும் எங்கள மாதிரி தான் இருப்பாங்க என்று நினைக்கிறேன் ...
சினிமாவில் மட்டும் தான என்று கேட்கிறாள் அப்பாவியாக +2 படித்த கவிதா
இன்னொரு பொண்ணு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நடிகை சிநேகா மாதிரி இருப்பாங்க.
பணக்காரன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்
மத்திய அரசில் உயர் அதிகாரி....
மனுசன் திருமணம் ஆகியும் மூன்று மாதமாக மனைவிய தொடல ....
தினமும் அழுவா......
இவள் தொட ஆரம்பித்தால் குளியல் அறைக்குள் போய் ரொம்ப நேரம் கழித்து வருவானாம் ...
..தனியா தான் படுப்பானாம்......
.....நல்ல வசதி, மேலோட்டமாக பார்த்து பெண்களை திருமணம் செய்துக் கொடுத்துவிடுகிறார்கள்.
அவர்கள் கடமை முடிந்து விடுகிறது...
.இதில் பெண்கள் ஆணின் சுயரூபம் தெரிந்து வெளியில் சொல்ல முடியாமல், தனக்குள்ளே வைத்துக் கொள்ள முடியாமலும் தவிக்கிறார்கள்.
தைரிய மான பெண்கள் இன்னொரு உறவை மறைமுகமாக ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள்....
.... நல்லவனோ, கெட்டவனோ, ஆண்மை யுள்ளவனோ, ஆண்மை இல்லாத வனோ, நீ மகிழ்ச்சியா? இருக்கியா? இல்லையா? என்பதெல்லாம் இங்கு பார்ப்ப தில்லை..
ஏதோ உணர்ச்சி வேகத்தில் சில பெண்கள் கொஞ்சம் பாதை மாறிவிட்டால் கள்ளத்தொடர்பு, மோசமானவள், நடத்தை சரியில்லாதவள், என்று ஆயிரம் வசைச் சொற்கள்.
ஆண்கள் பெண்ணிடம் குறை இருந்தால் எப்படியாவது வேறு ஒன்றை தேடிக் கொள்வார்கள் .
கெளரவம், படிப்பு, கலாச்சாரம், பண்பாடு, என்பவற்றை கட்டிக் கொண்டு அழும் பெண்கள் ஈசியாக தனக்கு பிடித்த மான ஒன்றை சொல்ல தயங்கவார்கள் .....
எத வேண்டு மானாலும் தைரியமாக பேசலாம் ...
தன் கணவரிடம் இப்படி இருங்கள் .....என்று சொல்ல தயக்கமே...
.சில படாரென்று சொல்வார்கள் ஏன் ரொம்ப அலையரியா? அரிக்குதா? என்று சில பெண்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்...
.... பெண்ணே" உடலுறவின் அத்தனை முறைகளிலும் பெண்கள் பெரும்பான்மையான நேரங்களில் உச்சத்தை அடைவது சுய இன்பத்தின் மூலமே"
....."நான் சுய இன்பத்தை ஊக்குவிகிறேன்
மற்றவருடன் உறவு கொள்ள தொடங்கி விடாதீர்கள்.
அதற்கு முன்னர் சுய இன்பம் அடைதலைக் கற்றுக் கொள்ளுங்கள்!,
ஆண்கள் முயல்கிறார்கள்;
பெண்கள் முயல்வதில்லை,
ஆனால் பெண்களும் முயலுதல் வேண்டும்."
அவர் வளர்ந்த விதம் அவ்வாறு இருக்க வேண்டும்..
தவறான செயல் என்று சொல்லி வளர்க்க பட்டு இருக்கலாம்..
நண்பர்கள் அலையாதே!!!
உன் மேல் விருப்பம் குறைந்து விடும் என்று மூளைசலவை செய்து இருக்கலாம்..
ஒரு மனநல மருத்துவரை அணுகி எதன் காரணமாக என்பதை உறுதி செய்து உரிய கவுண்சிலிங் செய்வது நல்லது..
அந்த கால கிழடுகள் செல்லும் சொலவடை..
ஒர் பெண்..
வருத்தத்தில் தாயாகவும்,
சந்தோஷத்தில்நண்பனாகவும்,
படுக்கையில் தாசியாகவும் நடந்து கொள்ள வேண்டும்..
எனவே இதில் ஒன்றும் தவறில்லை..
உரிய கவுன்சிலிங் எடுக்க நிலைமை தெளிவாகும்..
உங்கள் கணவர் voyerism எனப்படும் மனநிலை பிறழ்வுக்கு ஆளாகி இருக்கிறார் என்பது எனது யூகம்.
இந்த பாதிப்புக்குள்ளானவர்கள் இயல்பான உடலுறவு செய்ய இயலாதவர்களாகவும்,
உடலுறவில் விருப்பமற்றவர்களாகவும் இருப்பார்கள்.
மாறாக முன் பின் தெரியாத பெண்களிடம் தங்கள் உறுப்பை காட்டுவது, பெண்கள் உடை மாற்றுவது, குளிப்பது போன்ற அன்றாட அந்தரங்க நிகழ்வுகளை ரகசியமாக படமாக்க பட்ட காணொலிகளை ரசிப்பது போன்ற விசித்திர மனநிலை உடையவர்களாக இருப்பார்கள்.
மேலும் தாமதியாமல் கணவரை நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்
ஆனால் மன நல மருத்துவரிடம் அழைத்து செல்வது அவ்வளவு எளிது அல்ல வர மாட்டார்கள் -குடும்பத்தினரிடம் காரணத்தை சொல்ல்வது ஒரு பெண்ணுக்கு எளிது அல்ல -சொன்னாலும் நம்ப மாட்டார்கள் -
தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை யார் அறிவார் என்பதுதான் அத்தகைய பென்களின் உண்மை நிலை
ஒன்று ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது .
உங்கள் கணவர் மனதளவில் ஏதோ ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவரிடம் அன்பாகப்பேசி
அது என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்.
வழக்கத்தைவிட அவர்மீது நிறைய அன்புகாட்டுங்கள்
அப்போதுதான் அவர் அக்காரணத்தை உங்களிடம் சொல்லவாய்ப்புள்ளது.
எல்லாபிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது அ
தனால் நீங்கள் பிரச்சனையைக்கண்டுபிடியுங்கள்
,தீர்வு எளிது.
இறைவனருளால் நீங்கள் உங்கள் பிரச்சனையிலிருந்து விடுபட்டு பல்லாண்டு வாழ்வீர்கள் என்று மனதாரவாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment