Search This Blog in tamil

Tuesday, 9 August 2022

ஆண்மைக்குறைவு உண்டாகுறதுக்கு பாதிகாரணமே

 ஆண்மைக்குறைவு உண்டாகுறதுக்கு பாதிகாரணமே 

 பெண்கள் தான்னு சொன்னா ஒத்துக்குவீங்களா ?


ஒரு மனிதனின் அன்பையும் காதலையும் செக்ஸ் மூடையும் 

முழுக்க ,முழுக்க தீர்மானிக்கும் சக்தி பெண்களே .


வேலை ,பொருளாதாரம் ,வீடு ,கடன் ,பெற்றோர் ,செய்முறை, கல்வி போன்ற 

செலவுகளை சமாளிக்கும் முழு பொறுப்பு இருக்கும் ஆணிடம் 


அவனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் ,

ரிலாக்ஸ் செய்யுமிடமாகவும் மனைவியின் அன்பும் காதலும் தான் அருமருந்து .


அது தெரியாமல் 

பெண்கள் பாதிநேரம் சிடுசிடுவென்று 

மூஞ்சியில் முள்ளை வெட்டி போட்டவாறும் 

வெந்நீரை ஊற்றும் போதும்

 ஆணுக்கு எப்படி காதல் அரும்பும் ?


அதையும் மீறி வரும் ஒரு ஆணிடம் 

படத்தில் காண்பிப்பதுபோல ,துப்பாக்கி சும்மாருக்கு ,

குண்டு இல்லை போன்ற கெக்கே பிக்கே ஜோக்கினாலும் குத்தினால் சுத்தம் .

அதையும் தாண்டினால் .


இவ்வளவுதானா ?

என்ற ஒற்றை கேள்வியிலும்


 ,புருவம் தூக்கிய பார்வையிலும்

 சகலமும் முடிந்துவிடுகிறது.


அப்புறம் பாதி நேரம் வெளியில் சுற்றும் ஆண் 

மீதிநேரம் படுத்தவுடன்,

எதுக்குடா வம்பு ? என்று 

நாளைய வேலையை நினைத்து 

போர்வைக்குள் உடனே தூங்கிவிடுகிறான் 


பின்னர் அந்த ஆணைக் குறை சொல்லுவது என்ன நியாயம் ? 


ஆண்மைக் குறைவு என்பது நோய் அல்ல 

அது ஒரு குறைபாடு 

எளிதில் நிவிர்த்தி செய்யக் கூடியது 


பாதிக்கு மேல் உள்ள ஆண்களின் ஆண்மைக் குறைபாட்டுக்கு பெண்களே காரணம் 

பெண்கள் அன்போடும் பாசத்தோடும் அக்கறையோடும் கனிவோடும் கருணையோடும் நடந்து கொண்டால் 

கணவனிடம் மனம் விட்டு பேசி தேவைகளைப் பகிர்ந்து கொண்டால் தீர்வு கிடைத்து விடும் 



சில ஆண்களின் ஆண்மைக் குறைவுக்கு சத்தான உணவுகளே போதும் 

எளிய  உடற் பயிற்சிகளுடன் கூடிய சத்தான உணவுகளே பலரை மீட்டு இருக்கிறது 


சில ஆண்களுக்கு மருந்துகளும் தேவைப் படலாம் 


எல்லா ஆண்களின் ஆண்மைக் குறைவுக்கும் 

பெண்கள் மட்டுமே காரணம் இல்லை என்றாலும் 

பெண்களின் பங்கும் 

ஆண்மைக்குறைவுக்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது 

பெண்கள் மனது வைத்தால் எளிமையாக சரி செய்து விட முடியும் 


ஆனால் சில ஆண்மைக் குறைவு உள்ள ஆண்கள் 

பாலியல் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் 

பாலியல் விழிப்புணர்வு பற்றி தெரிந்து கொள்ளவு முற்படுவது இல்லை 

அப்படியே தெரிந்து கொண்டாலு அதை செயலில் காட்டுவதில்லை 

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று செயல்படுவார்கள் 

மிருகம்போல  எந்த முன் விளையாட்டுக்களு இன்றி மனைவியை புணர்ந்து 

 தன் ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வார்கள் 

மனைவி  முன்விளையாட்டுகளில் ஈடுபட ஆர்வம் காட்டினாலும் 

மறைமுகமாக வெளிப் படுத்தினாலு  

அக்கறை காட்டாமல் புறம்தள்ளி 

தன தேவைகளை மட்டும் பூர்த்தி செய்ய்து கொள்வார்கள் 

மனைவியுன் தேவைகளை அலட்சியம் செய்வார்கள் 

மனைவியை அன்பாக பாசமாக நடத்துவதில்லை

 அடிமையாகவே நினைக்கும் மன நோயுடன் வாழ்கிறார்கள் 

இவர்கள் வைத்ததே சட்டம் என்று அடம் பிடிப்பார்கள் 


மனைவி மனம் திறந்து பேச முடியாது 

தன எதிர்பார்ப்புகளையும்தேவைகளையும் பகிர்ந்து கொள்ள முடியாது 

மீறி செய்தால் கெட்டபெயரும் அவமானமும்தான் மிஞ்சும் 


அவர்கள் என்ன சொனாலும் கேட்க மாட்டார்கள்

 மருத்துவரிடம் கூப்பிட்டாலும் வர மாட்டார்கள் 

தானாகவும் தெரிந்து கொள்ள மாட்டார்கள் 

தெரிந்தாலும் செயல் படுத்த தயங்குவார்கள் 

மனம் விட்டு வெளிப்படையாக தன் பிரச்சினைகளைப் பேசி தீர்வும் காண மாட்டார்கள் 

இப்படிப் பட்ட ஆண்கள் மனைவியை திருப்திப் படுத்தவும் மாட்டார்கள் 

திருப்தி அடைய பெண்களும் விரும்புவார்கள் என்று நினைக்க மாட்டார்கள் 

எதோ அடிமையைப் போல நடத்திவிட்டு தூங்கப் போவார்கள் 

இத்தகைய ஆண்களை கணவனாகப் பெற்ற பெண்கள் பாவம் 

நம் சமுதாயத்தில் அவர்களைப் போல மனதளவில் பாதிக்கப் பட்டவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் 

வெளியில் சொல்லவும் முடியாது 

விடிவும் கிடைக்காது 

மனதுக்குள் வைத்தே புழுங்கி புழுங்கி சாக வேண்டியதுதான் விதி 

மிக சொற்பமான பெண்கள் வேறு வழியை நாட தள்ளப் படுவார்கள் 



குறிப்பு 

அப்படிப்பட்ட ஆண்களும் இருக்கிறார்கள் என்பது உண்மை 

அனுபவத்தில் கண்டது

No comments:

Post a Comment