*அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏*
*"பாலுணர்வு குற்றமே அல்ல"*
நீங்கள் மரங்களை நன்றாக கவனியுங்கள் மரங்கள் மிக உயரமாக வளர கூடியவை அவற்றின் உயரத்தை மட்டும்தான் பார்த்து ரசிக்கிறீர்கள் ஆனால் அவற்றின் வேர்கள் மிக ஆழமாக மிக தொலைவிற்கு பூமிக்கு அடியில் வேரூன்றி இருக்கும்.
பாலுணர்வு கொள்வது தவறு என்றால் பாலுணர்வு மையங்களை இறைவன் படைத்து இருக்க மாட்டான். வாழும் வாழ்க்கையின் எவை எவை தனக்குள் கட்டுப்படுத்த படுகிறதோ அவை அபரிதமாக ஒருநாள் வெளிப்படுத்தப்படும். இயற்கையால் படைக்கப்பட்ட தனது இயல்பிற்கு பொருந்தக்கூடிய வகையில் அனைத்து செயல்களையும் ரசித்து அனுபவித்து கடந்து செல்ல வேண்டும் அப்பொழுதுதான் வாழ்வின் பிறவியில்லா நிலை க்கு செல்ல முடியும். இப்படிப்பட்ட செயல் நிகழாத காரணத்தால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பல பிரச்சினைகள் எழுகின்றன. குடும்பங்கள் சிதறுகிறது இப்படிப்பட்ட நினைவுகளில் வாழும் குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.
ஆகாயத்தில் ஒரு பட்டம் மிக தூரத்தில் பறக்கிறது அப்போது பார்த்து சந்தோசம் அடைவோம். ஆனால் அவற்றுக்கு பறப்பதற்கு அவற்றில் கட்டப்பட்டுள்ள நூல் தான் காரணம். நூல் போல் ஞானமாக இருக்க வேண்டுமே தவிர அறிவு குப்பையாக இருக்கக் கூடாது.
பாலுணர்வு குற்றம் என்று கூறும் கார்ப்பரேட் கைக்கூலிகள் இறைவனை உணர்ந்து விட்டேன் என்று பெருமையாக கூறிக் கொள்கின்றனர்.
இந்த உலகம் பல நுண்ணுயிர்கள் ஆக சூழப்பட்டுள்ளது நுண்ணுயிர்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. உங்களது உடலில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்கின்றன ஒவ்வொரு நிமிடத்திலும் மனித உடலுக்குள் அவைகள் பாலுணர்வு கொண்டு தான் இருக்கின்றன. பாலுணர்வு கொள்ளவில்லை என்றால் மனித உடல் இருக்காது. இப்படிப்பட்ட நுண்ணுயிரிகளை படைத்த இறைவன் முட்டாளா?
பொருள் முதல் தூசி வரை அனைத்துமே இந்த பிரபஞ்சம் தான். அனைத்துமே அணுத்துகள் தான். அனைத்திலும் அவன் இருக்கிறான் அப்படிப்பட்ட நுண்ணுயிரி இப்பொழுது மனிதனை என்ன என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் அறிந்தது.
பாலுணர்வை அடக்கக் கூடிய மனிதர்கள்தான் பல தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். புரட்சி செய்பவர்கள் அனைவரும் பாலுணர்வை அடுக்குகின்றனர். பல்லாயிரம் மக்களை கொள்ளக்கூடிய அணு ஆயுதங்கள் செய்பவர்கள் அனைவரும் பாலுணர்வை அடக்கியவர்கள். பாலுணர்வில் முழுமையாக ஈடுபட்டவர்கள் இறைவனை உணர்ந்தவர்கள் தான்.
நீங்கள் இரவு நேரத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் அப்பொழுது உங்களுக்கு அவசரமாக சிறுநீர் வருகிறது நீங்கள் எழுந்து செல்லாமல் சோம்பேறித்தனத்தால் தூங்கிக்கொண்டு இருக்கும் பட்சத்தில் உங்களது உடலின் சிறுநீரகம் மண்டலம் பாதிக்க கூடாது என்று உங்களது உடலே அந்த உணர்வை மறைத்துவிட்டு கோபம், சண்டை மற்றும் சொல்ல முடியாத பலவகையான கனவுகளை அவர்களுக்குள் உருவாக்கும். உடலில் ஏற்படும் சிறிய கழிவுக்கு எதிரான வேலை செய்யும்பொழுது பாலுணர்வு மையம் என்பது (மூலாதாரத்தின் மூலம்) அதுவே இறையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியது அவற்றை அடக்கினால் உடல் என்னவெல்லாம் செய்யும்.
நமது சமூகத்தில் நிகழக்கூடிய ஒரு செயல் என்னவென்றால் பாலுணர்வை அடக்கலாம் ஆனால் மூலாதாரத்தின் ஆற்றலை கட்டுப்படுத்தக் கூடாது ஆற்றலை தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனைக் கற்றுக்கொள்ள பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். இது ஒரு செயலா?
மூலாதாரத்தின் ஆற்றலை பெருக்குவது பாலுணர்வு ஆற்றலை பெருக்குவதற்கு சமம். இதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
*நீங்கள் நீங்களாகவே உங்களது இயல்பில் வாழுங்கள்.*
*நன்றி*
*(பொருள் தேடுபவர்களாக வாழாதீர்கள்)*
நன்றி
No comments:
Post a Comment