Search This Blog in tamil

Tuesday, 15 June 2021

மனிதன் காமத்திற்கு எதிராக ஒரு போரையே உருவாக்கியுள்ளான்*

 🤺🤾‍♀️🤼‍♀️🏇🤺🤾‍♀️🤼‍♀️🏇🤺🤺


*மனிதன் காமத்திற்கு எதிராக ஒரு போரையே உருவாக்கியுள்ளான்* 


 அந்தப் போரின் விளைவுகளை நாம் சரியாக கணிப்பது கடினம் . 


ஓரினச் சேர்க்கை என்பது மனிதனின் நாகரீகமடைந்த இந்த உலகத்தைத் தவிர வேறு எங்காவது உண்டா ? 


பின்தங்கிய பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடையே ஒரு ஆண் மற்றொரு ஆணிடம் உடலுறவு கொள்வது என்பதை கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது .


 நான் பழங்குடி மக்களிடையே தங்கியுள்ளேன் . 


அவர்களிடம் நாகரீகமடைந்த மக்களின் இந்தப் பழக்கத்தைப் பற்றி கூறியபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் .


 அவர்களால் இதை நம்ப முடியவில்லை .


 ஆனால் மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்காக சங்கங்கள் உள்ளன .


 பெரும்பாலான மக்கள் ஓரினச் சேர்க்கை பழக்கமுள்ளவர்களாக இருக்கும்போது அதைத் தடுப்பது ஜனநாயகமற்றது என்று அந்த சங்கங்கள் வாதாடுகின்றன .


 ஓரினச் சேர்க்கையை ஒழிப்பதற்கு சட்டம் இயற்றுவது மனிதனின் அடிப்படை உரிமையையே எதிர்ப்பதாகும் என்று அவைகள் கூறுகின்றன .


 அது சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்துவது போலாகிறது என்கின்றனர் . 


தன் இனச் சேர்க்கைக்கான இந்த மனோபலம் பிறப்பதற்கு செக்ஸோடு நாம் கொண்டுள்ள போர்தான் காரணம் .


அதே போன்று நாகரீகம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளதோ அதே அளவுக்கு விபச்சாரமும் அதிகமாகி விட்டது .


 முதலில் இந்த விபச்சாரத் தொழில் ஏன் ஏற்படுகிறது என்று யாராவது சிந்தித்துப் பார்த்ததுண்டா ? 


மலைகளில் வாழும் பழங்குடி மக்களிடம் ஒரு விபச்சாரியையாவது காட்ட முடியுமா ?

 முடியாது . 


அங்கு வாழும் அந்த மக்களால் , தனது கற்பை விற்கின்ற பெண்கள் இருக்கிறார்கள் என்றோ , காசுக்காக உடலுறவிற்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள் என்றோ கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது . 


ஆனால் மனிதனின் நாகரீக முன்னேற்றத்தினால் காமத்தின் இந்த நெரிசல்களும் ஏற்பட்டு விட்டன . 


இது மலர்களைத் தின்னும் அந்தச் செயலுக்கு ஒப்பானது . 


மேலும் செக்ஸினால் ஏற்படும் ஏனைய நெறி கோணல்களை நாம் முற்றிலும் கணக்கில் எடுத்துப் பார்த்தால் ,


 செக்ஸின் அசிங்கமான வெளிப்பாடுகளின் முழு வரிசையையும் பரிசோதித்துப் பார்த்தால் நாம் இன்னும் அதிகமாக அதிர்ச்சிதான் அடைவோம் .


மனிதனுக்கு என்ன நேர்ந்துவிட்டது ?


 இந்த அசிங்கங்களுக்கும் , விபச்சாரத்திற்கும் யார் பொறுப்பாளிகள் ?


 செக்ஸைப் பற்றி மனிதன் புரிந்து கொள்வதற்கு பதிலாக அதை அடக்கி வைக்க வேண்டும் என்று கற்பித்தவர்கள் தான் இதற்குப் பொறுப்பாளிகள் .


 அப்படி அடக்கி வைத்ததினால்தான் மனிதனின் காம சக்தியானது தவறான வழிகளின் வழியாக ஒழுகிக் கொண்டிருக்கிறது . 


மனித சமுதாயம் முழுவதும் நோயுற்று , கீழ்த்தரமாக உள்ளது .


 இந்த புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ள சமுதாயம் மாற்றியமைக்கப்பட வேண்டுமெனில் காம சக்தியானது தெய்வீகமானது , காமத்தை நோக்கி கவர்ந்திழுக்கப்படுவது தேவையான மத ஆச்சாரம்தான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் .


செக்ஸை நோக்கி ஏன் அவ்வளவு பலமாக நாம் இழுக்கப்படுகிறோம் ?


 நிச்சயமாக அது பலம் வாய்ந்தது .


 காமத்தின் அடிப்படை மட்டங்களை நாம் கிரகித்துக் கொண்டால் நாம் மனிதனை காமத்தில் இருந்து வெளியே தூக்க முடியும் . 


அதன் பின்பு மட்டுமே " காம " உலகில் இருந்து " ராம " உலகம் வெளிப்படும் .


 அதன் பின்புதான் காமம் நிறைந்த இந்த உலகில் இருந்து கருணை வெளிப்படும்


 ........  பகிர்வு பதிவு......


**********#ஓஷோ#***********

***#காமத்திலிருந்து_கடவுளுக்கு#*******

#பகுதி :---------- 43 ----------

No comments:

Post a Comment