Search This Blog in tamil

Tuesday, 16 March 2021

உடலுறவு என்பது

 உடலுறவு என்பது இரு உடல்களும் இணையும் புனிதமான ஓன்று. இதில் இருவருக்கும் சக்தி இழப்பு ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்தணுவும், பெண்களுக்கு அண்டக அணுவும் இழப்பு ஏற்படுகிறது. இந்த அணுக்களின் இழப்புக்கு பின் மீண்டும் உடல் இந்த அணுக்களை மீண்டும் உற்பத்தி செய்கிறது. 


முதலில் இந்த அணுக்களின் இழப்புக்கு பின் உடல் சோர்வும், அசதியும் இருக்கும். நன்றாக உறக்கம் வரும் . இவை வரும்போது நன்றாக உறங்குவது சிறந்தது. இதன் ஓய்விலே மீண்டும் அணுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த உறக்கம் நடைபெறாத போதும் ஆண் பெண் இருவருக்கும் மன பாதிப்பு , மன அழுத்தம், எந்த வேலையும் சரியாக செய்யமுடியாத நிலை , டென்ஷன் போன்றவை ஏற்ப்படும். 

மீண்டும் இருவருக்கும் அணு உற்பத்தி செய்வதற்கான சத்துக்கள் இருவரின் உடலில் இருக்க வேண்டும். அதற்கு தேவையான #சத்துள்ள ஆகாரங்களை ( உணவு ) இருவரும் சரியாக சாப்பிடுதல் வேண்டும். 


புதிதாக கல்யாணமானவர்கள் ஆர்வக்கோளாரில் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கூட உடலுறவு வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு தேவையான உணவும் ஓய்வும் அவர்களுக்கு தேவை. மற்றபடி சாதாரணமாக அனைவரும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது ஆரோக்கியமான ஓன்று. அப்போதுதான் உடலானது தனக்கு தேவையான சத்தினை உற்பத்தி செய்து நம் உடம்பினை ஒரே சீராக வைக்கிறது. 

அதற்காக, அதிகமான உணர்ச்சி இருக்கும்போது உடலுறவை தள்ளிப்போடுதல் என்பது அவசியமில்லை. அந்த நேரம் பின் ஓய்வும் நல்ல ஆரோக்கியமான உணவும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஓய்வு எடுக்கவேண்டும் என்ற காரணமாகவே உடலுறவு இரவு நேரம் சிறந்தது என முன்னோர்கள் கூறுவார்கள். நீங்கள் விடுமுறை நாட்களில் பகலில் உடலுறவு வைத்துக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

வளமுடன் ஆரோக்கியத்துடன் வாழுங்கள் ...

No comments:

Post a Comment