*#சாரஹா_சூத்திரம்*
**உண்மையான ஒன்றை விட்டுவிட்டு
ஏதோ ஒன்றின் பின்னால் முத்தமிட யாசித்துக் கொண்டு
அதுதான் முடிவான உண்மையென்று இருப்பது
விடைபெறும் ஒருவன், வாசலில் நின்று கொண்டு நொடிப்பொழுது இன்பத்திற்கு (பெண்ணிடம்) கேட்பது போல் ஆகும்.**
'இங்கே ஒன்று கூடுவது' என்பதை முத்தம் கொடுத்தல் என்று உருவகமாக எடுத்துக் கூறபட்டிருக்கிறது.
அது, ஆணும், பெண்ணும், சிவனும், பார்வதியும் மற்றும் இங்-யங் (yin-yang) சந்திப்பதைக் குறிக்கிறது.
நீங்கள் ஒரு பெண்ணுடன் கைகோர்த்துக் கொண்டு சென்றாலும், அது முத்தம் கொடுத்தல்தான்.
அதாவது கைகள் ஒன்றை ஒன்று முத்தம் கொடுத்துக் கொள்கின்றன.
நீங்கள் ஒரு பெண்ணின் உதடோடு, உங்கள் உதடை சேர்த்தால், அதுவும் முத்தம்தான்.
ஒன்று கூடுதல்தான்.
அதைப்போல உங்களுடைய பால் உறுப்பும், ஒரு பெண்ணின் பால் உறுப்பும், ஒன்று கூடுவதும் , முத்தம்தான்.
ஆகவே தந்த்ராவைப் பொறுத்தவரையில், இரண்டு மாறுபட்ட துருவங்கள் (POLARITIES) ஒன்று கூடுவதை, முத்தம் என்று உருவகமாக அழைக்கப்படுகின்றது .
சில சமயம் ஒரு பெண்ணை பார்த்தமாத்திரத்திலேயே, உங்களால் அவளுக்கு முத்தம் கொடுக்க முடியும்.
காதலர்களின் கண்கள் சந்திப்பது கூட, முத்தம்தான்.
அங்கே சந்திப்பு மற்றும் ஒன்று கூடுதல் நிகழ்கிறது.
உண்மையான ஒன்றை விட்டுவிட்டு ஏதோ ஒன்றின் பின்னால் முத்தமிட யாசித்துக் கொண்டு
இருப்பவர்களை
சாரஹா, 'பிரக்ஞையற்ற மனிதன்' என்கிறார்.
மக்கள், தான் என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல், விழிப்புணர்வு இல்லாமல், ஒருவர் பின்னே ஒருவர் தொத்திக்கொண்டு சென்று, தவற விடுகிறார்கள்.
ஆண், பெண்ணையும், பெண், ஆணையும் தவற விடுகிறார்கள்.
அவர்கள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் சந்திப்பதிலேயே இருக்கிறார்கள்.
ஆனால், உண்மையான சந்திப்பு அல்லது ஒன்று கூடுதல் ஒருபோதும் நடப்பதில்லை.
அதில் உள்ள தவறு என்னவென்றால், அவர்கள் ஒருவர் பின்னல் ஒருவர் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆசைபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், முடிவில் சலிப்பைத் தவிர, வேறு எதையும், அவர்கள் அடைவதில்லை.
முடிவான உண்மையான சந்திப்பு, இது அல்ல என்று சாரஹா சொல்கிறார்.
அந்த சந்திப்பு, உங்களிடம் உள்ள சகஸ்ரார் சக்கரத்தில்தான் நிகழ்கிறது.
ஒரு தடவை, அதில் சந்திப்பு ஏற்பட்டால், அது எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
இதுதான் 'உண்மை' வெளியில் ஏற்படும் சந்திப்பு,
பொய்யானது, கணத்தில் மறையக் கூடியது.
மிகவும் தற்காலிகமானது மற்றும் அது ஒரு மாயைதான்.
அது,
விடைபெறும் ஒருவன் வாசலில் நின்று கொண்டு நொடிப்பொழுது இன்பத்திற்கு (பெண்ணிடம்) அழைப்பு விடுப்பது போல் ஆகும்.
இந்த உவமை மிகவும் அழகானது.
"உங்களுக்குள்ளே ஒரு உண்மையான பெண், உங்களைச் சந்திப்பதற்கு எப்பொழுதும் தயாராகக் காத்துக்கொண்டு இருக்கும்பொழுது, நீங்கள் வெளியே உள்ள பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு செல்கிறீர்கள்" என்று சாராஹா சொல்கிறார்.
முதலில் "வீட்டைவிட்டு வெளியேறுவது" ..... நீங்கள், உங்களுடைய சொந்தவீட்டைவிட்டு, உங்களுடைய உள் மைய நிலையிலிருந்து நழுவி, வெளியில் உள்ள பெண்ணைத் தேடி ஓடுகிறீர்கள்.
ஆனால், உண்மையான பெண் உங்களுக்குள்ளே இருக்கிறாள்.
நீங்கள் எங்கே சென்றாலும், ஏன், இந்த உலகம் முழுவதும் ஓடினாலும், எல்லாவிதமான பெண்களையும், ஆண்களையும் துரத்திக்கொண்டு சென்றாலும், அவளை, அவனை, நிச்சயமாக தவறவிடுவீர்கள்.
அது ஒரு கானல் நீர், வெறும் தோற்றம்.
மற்றும் வானவில்லைத் தேடி, ஓடுவதற்கு சமம்.
எதையும் உங்களால் அடையமுடியாது.
உங்களுக்குள்ளே, உங்களுடைய பெண் இருக்கும்பொழுது..... நீங்கள் அவளைத்தேடி, வீட்டைவிட்டுச் சென்று எங்கும் தேடுகிறீர்கள்.
அடுத்து, "வாசலில் நின்று கொண்டு" ... இதுவும் ஒரு உருவகம்தான்.
நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய சொந்தவீட்டின் கதவருகேதான் நின்று கொண்டு இருக்கிறீர்கள்.
அதாவது உங்களுடைய புலன்களோடு இவைகள்தான் அந்தக் கதவுகள்.
கண்களும், கைகளும், பால் உறுப்புகளும், காதுகள் அனைத்தும்தான் அந்தக் கதவுகள்.
கண்கள் வழியே பார்ப்பது, காதுகள் வழியே கேட்பது, கைகளின் மூலம் தொடுவதற்கு முயற்சி செய்வது போன்ற செயல்களினால், நீங்கள் தொடர்ந்து அந்தக் கதவுகளுக்கு அருகிலேயே நின்றுகொண்டு, வீட்டின் உள்ளே செல்வத்துக்கு மறந்துவிடுகிறீர்கள்.
அதனுடைய முட்டாள்தனமான பின்விளைவு என்னவென்றால், உங்களுக்குக் காதல் என்பதைப் பற்றி உண்மையாக எதுவும் தெரியாத நிலையில், நீங்கள் ஒருத்தியிடம் (ஒரு பெண்ணிடம்), அவளுடைய புலன் இன்ப அனுபவங்களைக் கூறுமாறு கேட்கிறீர்கள்.
அவளுடைய பதிலைக் கேட்பதன்மூலம், நீங்களும் அந்த இன்பத்தை அடைய முடியும் என்று நினைக்கிறீர்கள்.
அது எப்படிஎன்றால், உணவுக்குப் பதிலாக, உணவின் பட்டியலை தின்பது போல இருக்கிறது.
ஆகவே, நீங்கள் முதலில் உங்களை விட்டுச் செல்கிறீர்கள்.
பிறகு உங்களுடைய சொந்த வீட்டின் கதவுக்கு அருகில் நின்றுகொண்டு, மற்ற பெண்களிடம், புலன் இன்பம் என்றால் என்ன, வாழ்வு என்றால் என்ன, மகிழ்ச்சி என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன என்று கேட்கிறீர்கள்.
ஆனால், கடவுள் உங்களுக்காக உங்கள் உள்ளேயே, காத்துக்கொண்டு இருக்கிறார்.
அவர் எப்பொழுதும் உங்களுக்குள்ளேயேதான் தான் வசிக்கிறார்...
ஆனால், அவரைப்பற்றி, நீங்கள் அடுத்தவரிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.
இப்படி பிறர் சொல்வதைக் கேட்பதன்மூலம், நீங்கள் ஏதாவது அறிந்துகொள்ள முடியும், உணர்ந்து கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? .
தந்திரா வரைபடம் (சூத்திரா 1) ஓஷோவின் விளக்கம் : பகுதி (1)
No comments:
Post a Comment