Search This Blog in tamil

Saturday, 30 January 2021

உடலுறவுக்குப் பின் ஓர் அமைதி ஏற்படுகிறது

 உடலுறவுக்குப் பின் ஓர் அமைதி ஏற்படுகிறது......


அந்தப் பழைய சதிகாரர்கள்,அந்த வேளையில் உங்களை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.


ஆண்மகன் மறுபக்கம் திரும்பிப் படுத்துத் தூங்குவது போல் பாசாங்கு செய்கிறான்.


காரணம்,அவன் மனதின் ஆழத்தில் ஒரு குற்ற உணர்வு இருப்பதால்தான்.ஏதோ பாவச் செயல் செய்தவன் போல!


அவள் அழுகிறாள்.அவளை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக நினைக்கிறாள்.


அப்படி அவள் நினைப்பது நியாயம்தான்.அவள் காதலின் எந்தப் பரிமாரிப்பையும் பெறவில்லை.


ஓர் பரவச அனுபவத்தை அவள் பெறுவதே இல்லை.


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உலகத்திலேயே ஒரு பெண் கூட அந்த அனுபவம் பெற்றிருக்க வில்லை.


அந்தப் பரவச அனுபவம் பெற்ற பெண்களை இந்தியாவில் காணவே முடியாது.!


இதைவிட மனித சமுதாயத்திற்கு,வேறு சதி இருக்க முடியாது.


ஆண்மகன் எல்லாவற்றையும் சட்டென முடித்துக் கொள்கிறான்.அவன் தனக்குள் பைபிளையும்,குரானையும்,கீதையையும் சுமந்து கொண்டிருக்கிறான்.அவை எல்லாம் அவனுக்கு எதிராக,அவன் செயலுக்கு எதிராக இருக்கின்றன.


அவன் தவறு செய்வதாக அவை குற்றம் சாட்டுகின்றன.அதனால்,அவன்,அவசர அவசரமாக,அதை முடித்துவிட முயலுகிறான்.அதன் பிறகு,ஒரு மோசமான உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது.


அப்புறம் நிம்மதி எப்படி கிடைக்கும்.! மறுபடியும் இறுக்கமே ஏற்படுகிறது.


ஆணின் இந்த அவசரத்தால்,பெண் உச்ச நிலையை அடைய முடியாமலேயே போய்விடுகிறது.


'அவள் ஆரம்ப நிலையில் இருக்கும் போது,அவன் முடிவு நிலைக்குப் போய்விடுகிறான்.'


அதனால்,ஆண் ஒரு மிருகம் என்ற உணர்வு மட்டுமே பெண்ணுக்கு ஏற்படுகிறது.


--ஓஷோ--

No comments:

Post a Comment