Search This Blog in tamil

Sunday, 9 August 2020

உலக_மகளிர்_புணர்ச்சி_உச்சநிலை_தினம் world female orgasm day

 #உடலரசியல் 


#உலக_மகளிர்_புணர்ச்சி_உச்சநிலை_தினம்.


8 ஆகஸ்ட் 2007லிருந்து world female orgasm day கொண்டாடப்படுகிறது.


இது பல பேருக்கு தெரிந்திருக்க கூட வாய்ப்பில்லை.


ஏன் இந்த ஒரு நாள் கொண்டாடப்படுகிறது ஆண்களுக்கு ஏன் அப்படி ஒரு நாள் இல்லை என்ற கேள்விக்கு ஒரு சின்ன விளக்கம் சொல்ல வேண்டும் என்றால் 15th August நாம் ஏன் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்ற கேள்விக்கு என்ன பதிலோ கிட்டத்தட்ட அதே தான் இதற்கும் பதில். 


உலகளவில் பெண்ணானவள் மதம், இன, மொழி, நாடுகளை தாண்டி இரண்டாம் பாலினமாக மட்டுமே கருதப்படுகிறாள். 


உடலாலும் உணர்வாலும் ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள். ஒரு ஆண்‌ பெண்ணின் உடலை, அழகை கண்டதும் உணர்ச்சி வசப்படுவதற்கு இணையாக பெண் ஒரு ஆணின் அங்க அவயங்களால் உணர்ச்சி வசப்படுவதில்லை. அவளுக்கு மனதை தாண்டி தான் அவளின் உணர்வை தொட வேண்டியுள்ளது.


அவசர காலத்தில் அவசரகதியாக வாழும் மனிதனுக்கு இதற்கெல்லாம் நேரம் எங்கே என்று அவசரகதியாக இருட்டறையில் இல்லத்தரசியோடு இணைந்து விட்டு இயங்கிவிட்டு அவன் உணர்வு வெளிப்பட்டதும் அசந்து விடுகிறான். 


நீங்கள் எத்தனை மணி நேரம் எத்தனை காலங்கள் அவளோடு இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை தாண்டி அவளின் சந்தோஷத்தை எந்தளவிற்கு நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை பொருத்தே அவளின் பூரணத்துவம் இருக்கும்.


காலம் காலமாக பெரும்பான்மையான பெண்களுக்கு உச்சமடைதல் என்றால் என்ன என்பதே அறியாமலே அவள் வாழ்நாளை கடந்திருக்கிறார்கள்.


சுமார் 700 ஆண்டுகளுக்கு முன், 13’ம் நூற்றாண்டிலிருந்தே பெண்களின் உணர்வுகளுக்கு எதிராக கடும் அடக்குமுறைகள் நிகழ்ந்திருக்கின்றன.


அரசியல் காரணங்களுக்காக பல திருமணங்கள் செய்து கொண்ட மன்னர்கள், பெண்களை அந்தபுரத்தில் அடைத்து ‘மட்டும்’ வைத்திருந்தனர். உணவு உடுப்பு என ராஜ வாழ்க்கை கிடைக்கும். ஆனால் அடிப்படை செக்ஸ் தேவைகள் பூர்த்தி அடையாது. அரசியலிலோ அல்லது கல்வி சாலையிலோ பெண்களுக்கு இடமே இல்லாத நேரம் அது. விதவைகள், திருமணம் தள்ளிப் போன முதிர் கன்னிகள், இளம் பெண்கள், கணவனால் திருப்தி செய்ய முடியாத பெண்கள் என தங்களோட செக்ஸ் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை.


மன பதட்டம், தூக்கமின்மை, அடிவயிற்றில் கனம், செக்ஸ் கனவுகள், எரிச்சல், கோபம் இவற்றுடன் கால்களுக்கு நடுவில் அதிக ஈரப்பதம் என அந்த அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவர்கள் அதை ஹிஸ்டீரியா என்ற ஒரு வகையான மன நோய் என்று கருதினார்கள். (ஹிஸ்டர் என்றால் கிரேக்கத்தில் கர்ப்பப்பை என்று பொருள். கர்பப்பையால் வரும் மன நோய் ஹிஸ்டீரியா ஆனது). சில பெண்கள் வயதான பின்போ அல்லது முதிர் வயதின் போதோ இந்த நோய் இருப்பவர்களை காணலாம்.


நடுவில் க்றிஸ்துவ சர்சுகள் வளர்ந்த போது பாலின உறுப்பை தொடுவதே பாவம் என்ற கருத்து வலுப்பெற்றது. 16 முதல் 18ம் நூற்றாண்டு வரையில் பெண்களுக்கென்று தனியாக செக்ஸ் எண்ணம் கிடையாது, அவர்கள் ஆணின் செக்ஸ் தேவையை தீர்ப்பதற்கு மட்டுமே உள்ளனர் என்று மருத்துவ உலகமும் நம்பியது. (மருத்துவர்கள் அனைவரும் ஆண்கள்) பெண்களுக்கான அரசியல் மற்றும் கல்வி சுத்தமாக மறுக்கப்பட்டதால் அவர்களின் தேவையை ஆண்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. சுய இன்பம் செய்வது இறைவனுக்கு எதிரான செயல் என்று கருதப்பட்டதால் அதை செய்யும் பெண்கள் குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்டிருந்தனர். செய்வதற்கு மனதளவில் அஞ்சினர். இந்த கால கட்டத்தில் இங்கிலாந்தின் 60%திற்கு மேற்பட்ட பெண்கள் ஹிஸ்டீரியாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.


பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்கள், ஹிஸ்டீரியா வந்த பெண்களுக்கு மருத்துவ ரீதியாக யோனி மசாஜ் தெரபியை செய்ய துவங்கினர். 


18’ம் நூற்றாண்டின் மத்தியில் (1858) மசாஜ் செய்வதால் பெண்கள் தற்காலிக நிவாரணம் பெறுகிறார்களே தவிர நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை, அதனால் நிரந்தர தீர்வுக்கு பெண்களின் க்ளிட்டோரியஸை வெட்டி எடுத்து விட வேண்டும் என்று விபரீத முடிவு செய்தார்கள். இவர்களின் கருத்துப்படி பெண்களின் கர்பப்பை, பெண்களின் உடம்பிற்குள் ஊர்ந்து கொண்டே இருப்பதாகவும் அது தான் ஹிஸ்டீரியாவிற்கு காரணம் என்றும் அதனால் ஒரு சர்ஜரி செய்து க்ளிட்டோரியஸ் மற்றும் கர்ப்பப்பையை வெட்டி எடுத்து விட வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்.  இதை தன் சொந்த சகோதரிக்கே செய்தும் காட்டினார்கள். குற்ற உணர்ச்சிக்கு ஆளான பல பெண்கள் தங்கள் செக்ஸ் தேவையை கட்டுப்படுத்த இந்த சிகிச்சையை இவர்களிடம் ATM கியூ போல வரிசையில் நின்று செய்து கொண்டார்கள். 1866’ல் இருந்து 1947 வரை இத்தகைய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக செய்து வந்தார்கள். இன்றும் சில பழங்குடி, ஆப்பிரிக்க முஸ்லிம் மத்தியில் இந்த பழக்கம் இருக்கிறது.


Parched என்ற படம் பெண்களின் செக்ஸ் பற்றிய அறியாமையை விளக்குகிறது. ஒரு பத்திரிக்கையின் கருத்து கணிப்பில் #70_சதவீதம் இந்திய பெண்களுக்கு உச்சநிலை என்றால் என்னவென்று அறியாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சும்மா இல்லைங்க 70 சதவீதம் பெண்கள். நீங்க ஒரு பெண் செக்ஸ்னு எழுதனாலே அவ எல்லாத்துக்கும் தயார்னு நினைச்சு அவளை கேவலமா திட்டுவீங்க, இல்லைனா உங்க கூட படுக்க கூப்பிடுவீங்க, இந்த தொந்தரவுக்காகவே பல பேர் ஒன்றும் தெரியாத வேஷம் போட வேண்டிய கட்டாயம் ஆகியுள்ளது. 


தன் தேவை முடிந்ததும் திரும்பி படுத்துக் கொள்ளும் ஆண்கள் ஒருவகை என்றால்‌, கண்ட கண்ட கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி ஆண்மையை தொலைத்துவிட்டு எழுச்சி பெறாத ஆண்கள் ஒருவகையில் பெண்களை தன் அடிமையாக்கும் முயற்சியில் அவளின் சிறகை ஒடிக்கின்றனர்.


இதெல்லாம் விட இன்னொரு வகை இருக்கிறது. மிக ஆபத்தான வகை மிருகங்கள். தற்காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு சென்று குடும்ப பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டி இருக்கிறது. ஆனால் வீட்டு வேலைகள், குழந்தையின் கல்வி என்று ஒட்டுமொத்தத்தையும் பெண் அதாவது மனைவியின் மீது சுமத்திவிட்டு, நடுராத்திரியில் வேலை பளுவால் அசந்து தூங்கும் மனைவியை புணர்வது. 


வேலை பளுவால் அவளுக்கு உணர்வே இராது, இந்த எருமை எப்ப முடித்துவிட்டு எழுந்திரிக்கும்னு தான் இருக்கும். இன்னும் ஒரு வகையில் சொல்ல போனால் டாய்லெட் கழுவுவதற்கு இணையாக அதுவும் அவளுக்கு ஒரு கடமையாகி போகும். ஆனால் பாருங்க வேறு வீட்டில் பிறந்து வளர்ந்து உங்க கல்யாணம் பண்ணிகிட்டு வந்து அந்த டாய்லெட் கூட அவ தான் கழுவணும். துரைங்க கழுவ மாட்டாங்க. சரி அது வேற டாபிக். அப்புறமா பேசறேன். 


கூட்டு குடும்பத்தில் வாழும் பெண்ணுக்கும் இது பொருந்தும். ஏன் அப்படி செய்யணும் தள்ளி படுயா சோர்வாக இருக்குனு சொல்லலாமே அவங்க என்று நீங்கள் சொல்லலாம். சொன்னால் அதற்காக அவன் வேறு ஒரு பெண்ணை நாடிவிட கூடாதே என்ற பயத்தின் காரணமாகவே இணங்கி போகலாம்.


இதெல்லாம் தாண்டியும் ஒரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவளுக்கு செக்ஸ் நாட்டமும் இராது, அவளுக்கு அது தேவையும் படாது என்ற வகை. மேற் சொன்ன அத்தனை பெண்களை விட இது போன்ற பெண்களுக்கு தான் உடலுறவு என்பது ஒரு தெய்வீகமான நிலையை தர கூடிய ஒன்று என்ற நம்பிக்கையை அவளது இணை தர வேண்டும். ஒரு சிலர் பாதிக்கப்பட்ட பெண் என்றால் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவிடுகிறார்கள். ஏற்கனவே எவன்னே தெரியாதவன் பயன்படுத்தியதை நான் பயன்படுத்துவதா என்று.


இன்னும் ஒரு சிலர் இப்படி ஒரு கேள்வி கேட்பாங்க. வன்புணர்வில் பெண்ணுக்கு ஆர்கஸம் கிடைக்குமா என்று. வலுக்கட்டாயமாக உங்கள் பின்புறத்தில் லத்தியை இறக்கினால் உங்களுக்கு அப்படியே குளுகுளுனு இருக்குமா என்று நான் பதில் கேள்வி கேட்பேன்.


ஆனால் பாருங்க உலகம் பூரா பெரும்பான்மையானவனுங்க எதிர்ல இருக்கிறது ஒரு மனுஷி. மிஷின் இல்லைன்றதே  புரியாம இருக்காங்க.  காதலிச்சாவே, கல்யாணம் பண்ணாதே என்னோட உரிமை, என்னோட பொருள், என்னோட சொத்துனு உரிமை கொண்டாடறாய்ங்களே. அவள் ஒரு உணர்வுள்ள உயிருள்ள மனுஷினு பலருக்கு புரிவது இல்லை.


வெறி வந்தா சில ஜென்மங்கள் சின்ன குழந்தைங்க,  நாய், பூனை, விலங்கினங்கள், ஆண்கள், பெண்கள்,  வயசானவங்கனு கூட பார்க்காம ஏதாவது ஒரு ஓட்டைக்குள்ள விட்டா போதும்னு விடறானுங்க. இந்த Rapistகு எல்லாம் இந்த சூடான சைலன்சர் ஓட்டைக்குள்ள விட சொல்லி தண்டனை கொடுக்கணும்.


பெண்களின் யோனியில் சமூகத்தின் ஓழுக்கவிழுமியங்களை திணிக்காமல் அவளை அவள் இயல்போடு, அவளுக்கு என்ன தேவை என்ற புரிதலோடு அவளை சந்தோஷமாக வாழ விடுதலே அவளுக்கு சந்தோஷத்தை அள்ளித் தருதலாக இருக்கக் கூடும்.


மத்தபடி உங்களுடையது எத்தனை நேரம் நின்று பேசினாலும் அவள் மனதை தொடாத எதனாலும் அவளை உச்சமடைய வைக்க முடியாது.


மேட்டர்னா முதல்ல போய் லைட்டை ஆப் பண்ணிட்டு இருட்டில் துழாவறதை விட்டுவிட்டு அவள் கண் பார்த்து உங்கள் இணை உங்களால் சந்தோஷமாக இருந்தாளா என்று ஊர்ஜிதம் படுத்திக் கொள்ளுங்கள். அதை விடுத்து எத்தனை மணி நேரம் என்று கணக்கு எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.


Post by laksmi chinna

No comments:

Post a Comment