Search This Blog in tamil

Monday, 30 March 2020

தந்த்ரா என்பது

"அன்புள்ள ஓஷோ, தந்த்ரா என்பது பெண் இன்ப அனுபவத்தைக் குறிக்கிறதா ?"

ஓஷோவின் பதில்....

நிச்சயம் இல்லை. அந்த அனுபவத்திலிருந்து விடுதலையாவதற்கு அது வழி வகுக்கிறது.

காமத்திலிருந்து விடுதலையாவதற்கு, இந்த தந்த்ராவைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் கிடையாது.

வேறு எந்த முறையும், மனிதனுக்கு உதவி செய்யாது.

மற்ற எல்லா முறைகளும், அந்தக் காமத்தை அதிகரிக்கவே செய்யும்.
காமம் இதுவரை மறையவே இல்லை.

அதை விஷத்தன்மையாக்கியது நமது முட்டாள் மதங்கள் தான். ஆமாம், அவைகள் மனிதனிடம் ஒரு குற்ற உணர்வை ( Guilt ) ஏற்படுத்திவிட்டது.

ஆனால், காமம் அப்படியே தான் இருக்கிறது, அது ஒரு போதும் மறையாது.
காரணம், அது பிறப்பின் உண்மை தன்மையை தொக்கி நிற்கிறது.

பிறப்பு என்பது இயற்கை. அது, இந்த உலகத்தை பொறுத்தவரை, மிகவும் அவசியமான நிகழ்ச்சி. அது உயிர்த்தன்மை கலந்தது.

அதை ஒரு காலும் அகற்றமுடியாது.

காமத்தின் மூலம் சக்தி வெளிப்படுதலை, மிகக் கவனமாகப் பார்பதன் மூலமே, அதை மறைய செய்யலாம்.

அதை கவனமாக புரிந்து கொள்வதன் மூலமாகவே, அதை மறையச் செய்யலாம்.

காமத்தை வெளிப்படுத்தாமல் அல்லது புரிந்து கொள்ளாமல், அதை அடக்கினால் அது கோபம், வெறுப்பு, பொறாமை, உடல் வியாதி என்று வேறு வழிகளில் வெளிப்படும்.

தந்த்ரா ஒரு போதும் காமத்தை ஆதரித்தது இல்லை.
அதிலிருந்து விடுபடுவதற்குத்தான், அது வழி சொல்கிறது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
~~ ஓஷோ ~~
தந்த்ரா அனுபவம்

No comments:

Post a Comment