Search This Blog in tamil

Wednesday, 27 November 2019

42 வயதில்

💞 நீங்கள் வாழ்க்கையை புரிந்து கொண்டால்

நீங்கள் வாழ்க்கையை காதலித்தால்

செக்ஸ் தெய்வீகமானது

புனிதமானது என்பதை புரிந்து கொள்வீர்கள்

அதன் பின் செக்ஸ் உணர்விலேயே நிலைபெற்று வாழ்வீர்கள்

அது எப்படி ஒரு வயதில் இயற்கையாக வந்ததோ

அதேபோல் இன்னொரு வயதில் தானகவே உங்களை விட்டு போய்விடும்

சுமார் 42 வயது நடக்குக்ம் போது செக்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை விட்டு மறைந்து விடுகிறது

எப்படி வந்ததோ அப்படியே அது போய்விடுகிறது

செக்ஸ் சில்மிஷம் செய்யும் பல வயதான நபர்களை பார்த்திருப்பீர்கள்

அவர்களால் உரிய காலத்தில் இயல்பாக நடந்து கொள்ள இயலவில்லை

எந்த பருவத்தில் செக்சில் திளைத்து நன்றாக அனுபவித்து இன்புற்றிருக்க வேண்டுமோ

அந்த பருவத்தில் சமுதாயம் அவர்களை கட்டிப் போட்டுவிட்டது

உடலுறவு கொள்ளும்போது கூட அவர்கள் அதில் முழமையாக ஈடுபடவில்லை

 அரை மனதுடன்தான் செக்ஸில் ஈடுபட்டார்கள்

விந்துணர்வு அவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை

நீங்கள் எந்த செயலை முழுமையாக செய்யவில்லையோ

அந்த செயலை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்

 அதனால்தான் அவர்கள் 70 வயதில் கூட சில்மிஷங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்

யார் ஒருவர் அன்பாக  இயல்பாக,  சரியாக வாழ்கிறானோ

தனது இயற்கையான செக்ஸ் உணர்வுகளை அலச்சியப்படுத்தாமல் அதை ஆண்டு அனுபவிக்கிறானோ

அவன் தனது 42 வயதில் செக்ஸில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றுவிடுகிறான்

ஆனால் அதே மனிதன் வாழத்தெரியாமல்

செக்ஸ் உணர்வுகளை உள்ளுக்குள் பூட்டிவைத்துக் கொண்டு

அரைவேக்காட்டுத்தனமாக நடந்து கொண்டால்

அதே 42 வயது அவனுக்கு ஆபத்தான காலமாக இருக்கிறது 

அதனால்தான் நாற்பது வயதில் நாய்க்குணம் என்ற சொல்ல வேண்டி இருக்கிறது 💞

💕 ஓஷோ 💕

No comments:

Post a Comment