விரைவாக விந்து வெளிப்பட்டால் ஆண்மை குறைவா??
வணக்கம்.
என் பெயர் ———. வயது 26. என்னுடைய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து உங்களுடைய பதிலை எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அடுத்த ஆணு எனக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. எனது முறைப்பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறேன். அவள் என்னை மிகவும் நேசிக்கிறாள். அவளது நேசத்திற்கு கைமாறாக ஏமாற்றத்தை மட்டுமே அளிக்கப்போகிறேனோ என்று அச்சப்படுகிறேன். ஏனென்றால் நான் 13 வயது முதலே சுய இன்பத்தில் ஈடுபட்டு வருகிறேன். உங்களது தளத்தை வாசிக்க தொடங்கியது முதல் சுய இன்பம் செய்வது தாறு என்ற அச்சம் நீங்கியது. ஆனால் சமீபத்தில் நான் ஒரு பெண்ணிடம் உறவு கொண்டபோது எனது ஆண்குறியை அவளது யோனிக்குள் செலுத்துவதற்கு முன்பே விந்து வந்துவிட்டது. பிறகு எவளவோ முயன்றும் என் குறி எழுச்சி அடையவில்லை. சுய இன்பம் செய்யும்போதும் பத்திலிருந்து பதினைந்து வினாடிகளுக்குள் விந்து வந்துவிடுகிறது. எனது சந்தேகம் எல்லாம் இதுதான்….
1) எனக்கு ஆண்மைக்குறைவு இருக்கிறதா?
2) திருமணத்திற்கு முன்பே எனது பிரச்சினையை எனது வருங்கால மனைவியிடம் சொல்லிவிடலாமா?
(ஏனெனில் அவள் எதிர்பார்த்து ஏமாறமாட்டாள் அல்லவா?)
3) திருமணத்திற்கு முன்பே மருத்துவரை ஆலோசித்துவிட்டு பிறகு திருமணம் செய்துகொள்ளலாமா?
4) எனக்கு குழந்தைப்பேறு கிட்டுமா? (ஏனெனில் எனது விந்து தண்ணிபோல் நீர்த்துப் போய் உள்ளது)
(சென்னையில் நம்பத்தகுந்த செக்ஸ் மருத்துவர்களை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.)
அட்மின் பதில் -
புதிதாக உடவு கொள்ளும் போது விரைவில் விந்து வருவது இயற்கை அதற்காக ஆண்மைக் குறைவு என்று அா்த்தம் அல்ல நண்பரே. சுயஅன்பம் காணும் போது விரைவா விந்து வருவதற்கு காரணம் எமது முழு கவனமும் சுயஇன்பத்தில் லயித்திருக்கும் எப்ப விந்து வரும் என்று நினைத்து செய்வதனால் விரைவில் வருகிறது. உடலுறவில் அப்படியல்ல அதற்கு முன் விளையாட்டுக்கள் நிறைய இருக்கின்றது அதன்பின்பு உடவு கொள்ளும் போது தகுந்த நேரத்தில் உச்சம் கிட்டுகிறது. உங்கள் மனைவியிடம் இது பற்றி ஒன்றும் கதைக்க வேண்டாம் ஏனேனில் தங்களுக்கு எந்த குறையும் இல்லை.. சாதாரண மன பயம் தான் காரணம் நீங்கள் உங்கள் மனைவியுடன் நெருங்கி பழக ஆரம்பிக்க இது தானாகவே சரியாகி விடும். வீணாக மனதை குழப்பிக்க வேண்டாம் நண்பரே. தங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பேறு உண்டு. நன்றி
No comments:
Post a Comment