Search This Blog in tamil

Monday, 14 December 2020

சுகப்பிரசவத்திற்குப் பின் பெண்ணின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா?

 சுகப்பிரசவத்திற்குப் பின் பெண்ணின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா?

சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களின் மனதில் எழும் கேள்வி, பிரசவத்திற்கு பின் யோனிப் பகுதி தளர்ந்து விடுமா என்பது தான். இங்கு அதுக்குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.!!!


பல பெண்களுக்கும் சுகப்பிரசவத்திற்குப் பின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா என்ற சந்தேகம் எழும். ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக வயிற்றில் குழந்தை வளர வளர பெண்களின் உடலில் தொடர்ச்சியாக மாற்றங்கள் மற்றும் குழந்தை இருப்பதற்கு ஏற்ற அளவும் கருப்பை மற்றும் வயிறு விரிவடையும்.


கர்ப்பமாக இருக்கும் போது மில்லியன் கணக்கிலான கேள்விகள் பெண்களின் மனதில் எழும். அதில் சில கேள்விகள் குழந்தைப் பேற்றிற்குப் பின் அவர்களது உடல்நலம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். மேலும் சிசேரியன் பிரசவத்தை விட சுகப்பிரசவம் மிகவும் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இதனால் பல பெண்களும் சுகப்பிரசவத்தையே விரும்புகின்றனர்.சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களின் மனதில் எழும் கேள்வி, பிரசவத்திற்கு பின் யோனிப் பகுதி தளர்ந்து விடுமா என்பது தான். இப்போது அதுக் குறித்து காண்போம்.

    

சுகப்பிரசவத்தின் போது என்ன நடைபெறும்?

சுகப்பிரசவத்தின் போது, குழந்தை யோனியில் உள்ள கருப்பை வாயின் வழியே வெளிவரும். இப்படி குழந்தை வெளிவரும் போது, கருப்பையின் வாயானது 5 செ.மீ வரை விரிவடையும்.

    

பிரசவம் முடிந்த பின்...

பிரசவத்திற்கு பின், யோனிப் பகுதிய தற்காலிகமாக தளர்ந்து இருக்கும். சில பெண்கள் யோனிப்பகுதி பல காலம் தளர்ந்து இருக்கும். இது அப்பெண்ணின் வயது, பிறந்திருக்கும் குழந்தைகளைப் பொறுத்தது.

    

பாலியல் வாழ்க்கை பாழாகுமா?

சுகப்பிரசவத்தினால் பாலியல் வாழ்க்கை பாழாகுமோ என்ற அச்சம் பல பெண்களுக்கும் இருக்கும். மேலும் பல பெண்களும், சுகப்பிரசவத்திற்குப் பின், யோனி தளர்ந்து இருப்பதால், தங்களது துணை பாலியல் இன்பத்தை அடைவதில்லை என்றும் புகார் கூறுகின்றனர்.

    

சர்வே

சர்வேக்களிலும் பல ஆண்கள் சுகப்பிரசவம் மூலம் குழந்தைப் பெற்ற துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது திருப்தி அடைவதில்லை என்று, பெண்கள் கூறுவதைப் போன்றே ஆண்களும் கூறினர்.

    

முடிவு

சுகப்பிரசவத்திற்கு பின் பல பெண்களின் யோனிப் பகுதி இறுக்கமடையாமல் தளர்ந்தே இருப்பதால், சுகப்பிரசவம் மூலம் குழந்தைப் பெற்றெடுத்த பெண்கள் யோனியை இறுக்கமடையச் செய்யும் உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் யோனிப்பகுதியை இறுக்கமடையச் செய்யலாம்.

Sunday, 13 December 2020

ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி?

ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி?

வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இங்கு ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.!!!

நன்கு முதிர்ந்த கருமுட்டை அண்டகத்தில் இருந்து கருப்பையினுள் வெளித்தள்ளும் நிகழ்வு தான் அண்டவிடுப்பு அல்லது ஓவுலேசன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஓவுலேசன் மிகவும் முக்கியமானது. ஓவுலேசன் காலத்தில் உடலுறுவில் ஈடுபடும் போது, பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து கருப்பையினுள் கருவாக உருவாகும்.

ஆகவே வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இருப்பினும் ஒரு பெண்ணின் ஓவுலேசன் காலத்தை எப்படி கண்டறிவது என நீங்கள் கேட்கலாம். அதைத் தெரிந்து கொள்ளவும், ஓவுலேசன் காலத்தின் போது வெளிப்படும் சில அறிகுறிகளையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    
ஓவுலேசன் காலம்
ஓவுலேசன் காலமானது முதல் மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்த 13 அல்லது 14 நாட்களில் ஆரம்பமாகும். சில பெண்களுக்கு இது வேறுபடும். இங்கு குறிப்பிட்ட நாட்களில் இருந்து சிலருக்கு முன்பும், இன்னும் சிலருக்கு தாமதமாகவும் கூட ஆரம்பமாகலாம். இருந்தாலும் குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு, பெண்ணின் ஓவுலேசன் காலத்தை அறியலாம்.
    
அதிகமான பாலுணர்ச்சி
சில நாட்களாக உங்களது பாலுணர்ச்சி அதிகமாக இருந்தால், அது ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும். இக்காலத்தில் உடலுறவு கொண்டால், வேகமாக கருத்தரிக்கலாம்.
    
லேசான வெள்ளைப்படிதல்
ஓவுலேசன் காலத்தில் பிசுபிசுப்பான வெள்ளை நிறத் திரவம் யோனியில் இருந்து வெளியேறும். இதுவும் ஒரு பெண்ணின் ஓவுலேசன் காலத்தை சுட்டிக் காட்டும்.
    
புண்ணான மார்பகங்கள்
நிறைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக்குப் பின் மார்பகங்கள் புண்ணாக இருக்கும். இது குறைந்த முக்கியத்துவமுடைய அடையாளம் தான். இருந்தாலும், மாதவிடாய் சுழற்சிக்கு பின் இந்த அறிகுறி தென்பட்டால், அது ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும்.
    
ஈர்ப்பு அதிகரிக்கும்
ஒரு பெண்ணிற்கு ஓவுலேசன் காலத்தின் போது, தன் துணையின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். இதற்கு ஆணின் உடலில் உள்ள செக்ஸ் ஹார்மோன் பெண்ணின் வாசனை உணர்வை அதிகரித்து ஈர்ப்பது தான்.
    
மென்மையான மற்றும் திறந்த கருப்பை வாய்
ஓவுலேசன் காலமாக இருந்தால், யோனியின் வாய் திறந்தும், மென்மையாகவும் இருக்கும். மேலும் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, குறைவான வலியை உணரக்கூடும். அதுமட்டுமின்றி, ஓவுலேசன் காலமாக இருந்தால், யோனிப்பகுதி வறட்சியுடனேயே இருக்காது. இதனால் லூப்ரிகேஷன் தேவைப்படாது.
    
அடிவயிற்று வலி
சில பெண்களுக்கு அடிவயிற்று லேசான வலி ஏற்படும். அதுவும் இந்த வலி சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் வரை நீடித்திருக்கும். அதோடு, குமட்டல் அல்லது வெள்ளைப்படுதலுடன் வலியையும் அனுபவித்தால், அதுவும் ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும்.
    
லேசான இரத்தக்கசிவு
ஓவுலேசன் காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு யோனியில் இருந்து, இரத்தம் கலந்த நிறத்தில் வெள்ளைப்படிதல் ஏற்படும். எனவே இம்மாதிரியான அறிகுறி தென்பட்டால், ஓவுலேசன் காலம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.