Search This Blog in tamil

Thursday, 15 October 2020

வெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்! |

 வெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்! | Seven Advantages of Using Different Sex Positions!


தினமும் காலை இட்லி மட்டுமே காலை உணவாக கொடுத்தால், இரண்டாவது நாளே நீங்கள் வெறுத்து விடுவீர்கள். கண்டிப்பாக ஒரே வாரத்தில் இட்லியை கண்டாலே எரிச்சல் அடைந்து போவீர்கள்.


சாப்பிடும் உணவிலேயே இப்படி என்றால். மனிதனுக்கு உடல் ரீதியாக உச்சக்கட்ட இன்பத்தை அளிக்கும் செக்ஸில் ஒரே நிலையில் ஈடுபடுவதால் வெறுப்பு வரத்தானே செய்யும்.


சில பெண்கள் சில நிலைகளில் செக்ஸில் ஈடுபட தடை விதிக்கலாம். ஆனால், எல்லா நிலைகளுக்கும் “நோ” சொல்ல மாட்டார்கள். மேலும், வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவதால் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் நீங்கள் பல நன்மைகள் காணலாம்….


பல்வேறு கோணங்கள்!


துணையின் உடல் பாகங்களை வித்தியாசமான கோணங்களில் காண இயலும். இது துணையின் உடல் மீதான பார்வையை மாற்றும். இதனால் உடலுறவில் ஈடுபடும் போது ஈர்ப்பும், இறுக்கமும் அதிகரிக்கும். இது முக்கியமாக ஆண்கள் உச்ச உணர்ச்சி அடைய உதவும்.


உணர்சிகள்!


மேலும், வெவ்வேறு நிலையில் செக்ஸில் ஈடுபடும் நீங்கள் பெறும் இன்பமும், உணர்சிகளும் வேறுபடும்.எல்லா நிலைகளிலும் ஆண்குறி ஒரே மாதிரி செயற்படுவது இல்லை. ஒரு சில நிலைகளில் எளிதாகவும், ஒருசில நிலைகளில் கடுமையாகவும் இருக்கும். இதனால், நீங்கள் வெவ்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபடும் போதும், வெவ்வேறு உணர்சிகள் அடைகிறீர்கள்.


உணர்வுகள்!


நீங்கள் வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவதால் உங்கள் உணர்வும் வேறுபாடும். செக்ஸ் மீதான் வேறு கோணம் மற்றும் உங்கள் இருவர் மத்தியிலான இணைப்பு பெருகும். இது செக்ஸில் சலிப்போ, சோர்வோ ஏற்படாமல் இருக்க வெகுவாக உதவும்.


இணக்கின்மை!


சிறிய ஆண்குறி இருக்கும் ஆண்கள் ஒரே நிலையில் செக்ஸில் ஈடுபட்டால் பெண்கள் உச்ச இன்பம் அடைவது கடினம். மேலும், பெரிய ஆண்குறி இருக்கும் ஆண்கள் ஒரே நிலையில் செக்ஸில் ஈடுபட்டால் பெண்களுக்கு அசௌகரியங்கள் கூட ஏற்படலாம்.


இதுவே வெவ்வேறு நிலைகளில் ஈடுபடும் போது இந்த இணக்கின்மை குறைவாக இருக்கும். இதற்கு காரணம் ஒரு சில நிலைகளில் ஈடுபட ஆண்குறி பெரிதாக இறுகக் வேண்டும் என்றில்லை. அதே போல ஒருசில நிலைகளில் ஈடுபடும் போது ஆண்குறி பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.


பாகங்கள்!


செக்ஸில் ஈடுபடும் போது நிலைக்கு ஏற்ப உணர்சிகள் மாறும் என்பதை நாம் முன்பே கூறி இருந்தோம். வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடும் போது பெண்களின் பெண்ணுறுப்பு பகுதிகளில் வெவ்வேறு ரீதியாக தீண்டப்படும். இதனால் பெண்கள் அதிகம் உச்ச உணர்வு அடைவார்கள்.


வேண்டியதை செய்யுங்கள்!


பெண்கள் உச்ச உணர்வு அடைவதில் தாமதமாக தான் இருப்பார்கள். எனவே, ஒரே நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவது அவர்கள் உச்ச உணர்வு அடைவதை மேலும் தாமதம் ஆக்கலாம். எனவே, பெண்கள் விரைவாக உச்ச உணர்வு அடைய வேண்டும் என்றால் ஆண்கள் வெவ்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபட வேண்டியது அவசியம்.


உச்சக்கட்ட இன்பம்!


மேலும், உச்சக்கட்ட இன்பம் என்பது உடலின் பல்வேறு பாகங்களை தீண்டும் போது தான் உண்டாகும். நீங்கள் வெவ்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபடும் போது உடலின் அணைத்து பாகங்களும் அடங்கும்படி இருக்குமாயின். உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் உச்சக்கட்ட இன்பத்தை எட்டுவது எளிமையாகிவிடும்.

Wednesday, 14 October 2020

ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் ஏன் நான் நான் ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன்

 கேள்வி.


ஓஷோ , ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் ஏன் நான் நான் ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன் ?


*#ஓஷோபதில்*


 " நீங்கள் பார்த்தாலும் , பார்க்க முடியாவிட்டாலும் ஒரு பெண் அம்மணமாகத்தான் இருக்கிறாள் , நடக்கிறாள் , சிரிக்கிறாள். 


உடைக்குள் அம்மணமே ....


உடை மனித வர்க்கத்தின் கற்பனை ....


அது எதனால் தோன்றியதோ தெரியாது.


 நீங்கள் பூனை , நாய் , சிங்கம் , புலி போன்ற மிருகங்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறீர்களா ?


 இல்லை அல்லவா ? 


ஏனென்றால் அவை இயற்கையாக இருக்கின்றன ! 


ஒருமரம் அம்மணமாக நிற்கிறது .


 அதற்கு ஒரு நாள் புடவை சுற்றிப் பாருங்கள் ! 


சில நாட்கள் கழித்து , அம்மணமான மரங்களின் படங்கள் ரகசியமாக வெளியிடப்படும் !


அதை பைபிளுக்கு இடையில் வைத்து ( எந்த மத நூலுக்கும் இடையில் வைத்து ) ரகசியமாகப் பார்த்து ரசிப்பார்கள் 😁😁😁


 முயற்சி செய்து பாருங்கள் புரியும் !


 இங்கிலாந்தில் சிலர் தன் பெண் நாய்களின் அந்தரங்க உறுப்புகளை மூடி வெளியே அழைத்துச் செல்கிறார்களாம் !


 என்ன நாகரீகம் !


பெட்ரண்ட் ரஸ்ஸல் ( Betrand Russell ) தன்னுடைய சுய சரிதத்தில் , ' என்னுடைய குழந்தைப் பருவ காலத்தில் ( அது விக்டோரியா காலம் ) நாற்காலியின் கால்களுக்குக்கூட , துணி தைத்து மூடி வைத்தார்கள் ! 


ஏனென்றால் அது ஆண்குறியை ஞாபகப் படுத்துகிறதாம் ! ' என்று எழுதுகிறார் .


மனிதன் இயற்கையாக இருந்தால் இந்த ஆபாசப் படங்கள் மறைந்துவிடும் .


 பழங்குடியினர் இப்படித்தான் இருந்தார்கள் . 


அவர்களுக்கு இயற்கையான பாலியல் உந்துதல் ஏற்படும் பொழுது அந்த உணர்ச்சி ஏற்படும் .


 இதற்கும் ஒரு வழி இருக்கிறது , ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் , நன்றாக கலந்து பேசி , வீட்டில் இருக்கும்பொழுது மட்டும் கூடியவரை அம்மணமாக இருக்கலாம் ! 


முதலில் குறைந்தது ஒரு மணிநேரம் .


 இது ஆரம்பத்தில் மிகுந்த சங்கடத்தையும் , வெட்கத்தையும் கொடுக்கும் . 


பிறர் என்ன நினைப்பார்கள் என்ற குற்ற உணர்வும் ஏற்படும் . 


போகப்போக இந்த அற்ப ஆசைகள் , கவர்ச்சிகள் எல்லாம் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும் .


 ஒரு கட்டத்தில் அதைப் பார்க்க வெறுப்புக்கூட ஏற்படலாம் ! 


தாய் தகப்பனார் அம்மணமாக இருக்கும்பொழுது பிள்ளைகள் அம்மணமாக ஓடியாடி விளையாடலாமே 


இதற்கு ஏன் இவ்வளவு ஆவல் 


இயற்கை நம்மை மயக்கி வைத்திருக்கிறது - 


மனிதனால் உண்மையை அறிய முடியவில்லை . சிந்திக்க முடியவில்லை .


ஆங்கில வார்த்தையான ' Fasication ' ( கவர்ச்சி - ஆர்வம் ) என்பது ' Phallva ' என்ற வார்தையிலிருந்து வந்தது .


 இதன் அர்த்தம் உடலுறுவு உறுப்பின் தோற்றம் ' என்பது . 


இந்த வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாகிய ' Phala ' என்ற வார்த்தையிலிருந்து வந்தது . 


மனிதனின் பிரக்ஞையற்ற மனதில் அது பொக்கிஷமாகப் பதிந்துவிட்டது !


 ஏனெனில் அது கொடுக்கும் இன்பம் அப்படி ! 


மனித உடம்பில் அதைப்போல வேறு எந்த உறுப்பும் இன்பம் கொடுப்பதில்லை ! 


ஆகவேதான் மனிதன் அதை எப்பொழுதும் மூடிவைத்துப் பாதுகாக்க நினைத்தான் .


 கற்காலத்தில் அதை இலைகளால் வைத்து மூடினான் . 


பிற்பாடு ஆண் கற்பு , உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை விதித்து பெண்களை அடிமையாக்கிவிட்டான் .


எப்படியோ பெண்ணினம் அடிமைப்பட்டு இப்பொழுது சுதந்திரகாற்றை சுவாசிக்கிறது !


 இனி வருங்காலம் பெண்களுக்கு உரியதுதான் ! 


இப்பொழுதே அதன் அறிகுறி தெரிய ஆரம்பித்துவிட்டது ......


ஓஷோ

சுய இன்பத்தை பற்றி

 சுய இன்பத்தை பற்றி யாரும் பொதுவாக வெளிப்படையாக பேசியிருக்க மாட்டீர்கள். சுய இன்பம் என்பது நமக்கு நாமே உணர்ச்சி கிளர்ச்சியை ஏற்படுத்தி சுகம் காண்பது.


இது ஆணாக இருந்தால் ஆணுறுப்பை தொடுவது, பெண்ணாக இருந்தால் உதடு மற்றும் மார்பகங்களை தடுவுவது போன்ற செயல்களால் காம உணர்ச்சியை தன் கைகளாலே தூண்டி இன்பப்படுவது என்று சொல்லாம். சுய இன்பம் காண இவர்களுக்கு செக்ஸ் பார்ட்னர் யாரும் தேவையில்லை.


சுய இன்பம்


இந்த சுய இன்ப துடிப்பு நபருக்கு நபர் வேறுபடுகிறது. சிலருக்கு வாரம் ஒருமுறை, சிலருக்கு தினமும், சிலருக்கு ஒரே நாளிலேயே மூணு முறைக்கு மேல்.. எது எப்படியே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அல்லவா.. அளவுக்கு அதிகமான சுய இன்பமும் தீமையே விளைவிக்கும். ஒரு சிலர் தனது செக்ஸ் வேட்கைக்காகவும், வேறு சிலர் பல காரணங்களுக்காவும் கூட சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.


சுய இன்பம் நல்லதா கெட்டதா? இதை பற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளன. சுய இன்பத்தால் ஏற்படும் நன்மை!! தீமைகளை பற்றி இப்போது பார்ப்போம்.


மேலும் அளவுக்கு அதிகமாக சுய இன்ப பழக்கத்திலிருந்து இயற்கையான முறையில் விடுபடுவது எப்படி, ஏன் சுய இன்பத்திற்கு அடிமையாகின்றார்கள் என்றும் சில உபயோககரமான யுக்திகளையும் காண்போம்.


ஏன் சுய இன்பத்திற்கு ஆளாகின்றனர்?


ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் கூறும் பதில் இது தான்.


"சும்மா ஜாலிக்காக", "ஒரு ரிலேக்ஸ்க்காக", "தனியா உக்காந்துகிட்டு வேறஎன்ன பண்றது?" , "செக்ஸ் பண்ணி போர் அடிச்சு போச்சு" என்றும் மிகச்சிலர் விந்துஅணுக்களை தானம் செய்து பணம் சம்பாரிக்க என்றும்


பதில் சொல்கிறார்கள்


உடம்பில் என்ன நடக்கிறது?


அறிவியலார்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் சுய இன்பம் காணும் போது நமது உடம்பில் பல விதமான வேதியியல் மாற்றங்கள் நடக்கின்றன. இது நல்லதா கெட்டதா என்பது சுய இன்பத்தின் எண்ணிக்கையே பொருத்தது என்கிறார்கள். எப்போது சுய இன்பத்தின் அளவு குறைவாக இருக்கும் போது பெரும்பாலும் நடக்கும் வேதியியல் மாற்றங்கள் உடம்புக்கு நல்லது. அதுவே அளவுக்குஅதிகம் ஆகும் போது உடம்புக்கு கேடாகிறது.


செக்ஸ் உணர்ச்சி சுய இன்பம் மூலம் தூண்டப்படும் போது மூளை எண்டோர்பின், செரோடனின் மற்றும் டோப்மைன் போன்ற வேதி பொருட்களை சுரக்கிறது. இவை உடம்பின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவை தற்காலிகமாக மனஅழுத்தை குறைக்கவும், தூக்கமின்மை, கெட்ட உணர்ச்சி வேகம், தனிமை மற்றம் மனசோர்வுக்கும் மருந்தாகிறது. நமது நோய் எதிர்பபு சக்தி அதிகரிக்கிறது. கார்டிசால் நமது நோய் எதிர்பபு சக்தியே சீராக்க உதவுகிறது. செரோடனின் மற்றும் டோப்மைன் மனஅழுத்தை குறைக்க பெருமளவு உதவுகிறது.


சுய இன்பம் அனுபவித்தால் என்னாகும்?


சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான பிரச்சினை. பொதுவாக சுய இன்பம் ஒன்றும் பெரிய பாவச்செயல் இல்லை. அளவுக்கு அதிகமாகும் போது தான் ஒரு சில கெடுதல்களை கொடுக்கிறது. காரணம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.


சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகுவதில் எண்டோர்பின் மற்றும் டோப்மைன் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. டோப்மைன் நரம்பு மண்டலத்தை தூண்டி உணர்ச்சியில் ஒருகிளர்ச்சியை கொடுக்கிறது. இது விந்து வெளிப்படும் வரை அப்படியே ஒரு அபரிமிதமான சுகத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.


எண்டோர்பின் மனஅழுத்தையும், மன சோர்வையும் குறைத்து அப்படியே மனதை/ உடம்பை ரிலக்ஸ் செய்கிறது. விந்து வெளிப்பட்டதும் ஆனந்தமாக தூக்கம் வர இது தான் காரணம். மன அழுத்தை குறைக்க சுய இன்பம் ஒரு சுலபமான வழி என்று ஆகிவிட்டீர்களானல் அது அப்படியே உங்களை அடிமையாக்கி விடும்.


பொதுவாக தனிமையிலிருக்கும் போது அல்லது தனிமையை உணரும் போது தான் அடிக்கடி சுய இன்பம் காணும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தனிமை எண்ணத்திலிருந்து விடுபட அது தேவைப்படிகிறது. ஒரு சிலர் ஒவராக பலான படங்களை பார்த்து சுய இன்பத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.


சுய இன்பம் அளவை கடக்கும் போது??


அளவுடன் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான சுய இன்பம் உடல்வலிமைக்கும் மனதிற்கும் தீங்கு விளைவிக்கிறது. இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. ஏனென்றால் நாம் அனைவரும் வெவ்வேறு உடல் மற்றும் மன நிலையில் உள்ளோம் அல்லவா. டாக்டர் அனுப் சுய இன்பத்தை பற்றி கூறும் போது எண்டோக்ரின் - நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது, சுரப்பிகளின் சமன்பாட்டில் மாறுபாடு ஏற்பட்டு மூளையையும் பாதிக்கிறது. இது உங்களின் வாழ்க்கை மற்றும் உறவுமுறைகளை பாதிப்பதுடன் செக்ஸ் உறவு முறைகளையும் பாதிக்கிறது. இளைஞர் ஒருவர் 42 முறை தொடர்ந்து சுய இன்பம் அனுபவித்ததினால் உயிரிழந்த சம்பவத்தை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் விபரீதங்களை காண்போம்.


சோர்வு மற்றும் பலவீனம்


நீங்கள் ஒருமுறை சுய இன்பம் செய்யும் போது மனமும் உடலும் ஒரு வித நிம்மதியை உணர்வது சரிதான். இது உடலில் சுரக்கும் வேதி பொருட்களால் உண்டாகிறது. ஆனால் அடிக்கடி கை பழக்கத்தில் ஈடுபடும் போது போது மூளையும் உடலும் தொடர்ந்து வேலை செய்ய தூண்ட படுவதால் சோர்வும், பலவீனமும் அடைகிறது.


பார்வை மங்கி போதல்


நைட்ரிக் ஆக்ஸைடு, cGMP மற்றும் அசிடைல்கோலைன் குறைபாடு ஏற்படுவதால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வை மங்கும். கண்களை சுற்றி கரும் புள்ளிகள் உண்டாகும். கைபழக்கத்திற்கு அடிமை ஆகும் போது இந்த வேதி பொருட்களின் குறைபாடு உண்டாகிறது. முகம் வாட்டமாக காணப்படுவதுடன் கண்களின் கீழ் கரும் புள்ளிகள் உண்டாகும். கண்பார்வையும் பாதிக்கப்படுகிறது.


மன அழுத்தம், திடீர் மனநிலை மாற்றம்.


அதிக கைபழக்கத்தின் மூலம் கார்டிசால் அளவு உடலில் அதிகமாவதால் மனஅழுத்தை சரிசெய்ய உதவுவதுடன் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காரணமானாலும், அதுவே மன அழுத்தம் அதிகமாக காரணமாகி விடும். அதிகமாக கையடிப்பதனால், டெஸ்டோஸ்டீரான அளவு குறைந்து விடுவதால் திடீர் மன நிலை மாற்றத்திற்கு காரணமாகி விடும். இந்த மாற்றம், மிக குறைந்த நேரம் தான் ஏற்படும் என்றாலும், உங்களின் நடவடிக்கையையும் சமூக வாழ்க்கையும் பாதிக்க வாய்ப்புள்ளது.



அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு... 

Tuesday, 13 October 2020

முதல் முறை உடலுறவு போது பெண்களுக்கு வலி இருக்குமா? எவ்வளவு நேரம் வலி இருக்கும்? தாங்கி கொள்ள முடியுமா?



முதல் முறை உடலுறவின் போது பெண்களுக்கு இப்படி ஆக காரணம் என்ன தெரியுமா?

பலரும் இதனை பற்றி வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் தங்களது முதல் உடலுறவு அனுபவமானது மிக சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இது எல்லோருக்கும் மிகச் சிறந்த அனுபவமாக அமைந்து விடாது. இதில் சிலருக்கு சில தடுமாற்றங்கள் உண்டாகும். இது இயல்பானது தான்.


முதல் முறை உடலுறவு கொள்வது என்பது உண்மையில் பெண்களுக்கு அசௌகரியமானதாகவும், சில சமயங்களில் அதிக வலியை உண்டாக்குவதாகவும் இருக்கும். இது நிச்சயமாக பலருக்கு சாதாரணமானதாக இருக்காது. சில பெண்களுக்கு உடலுறவின் போது இரத்த போக்கு உண்டாகும். ஆனால் இது அனைவருக்கும் ஏற்படாது. இது சிலருக்கு மிகுந்த வலியை கொடுக்க கூடியதாகவும், அசௌகரியத்தை தர கூடியதாகவும் இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு உடலுறவு பற்றி போதிய அறிவு இருக்காது.

சரி, இந்த பகுதியில் ஏன் பெண்களுக்கு முதல் முறை உடலுறவு கொள்ளும் போது வலி உண்டாகிறது என்பது பற்றி காணலாம்.

1. வலி பயம் :

வலியை விட வலிக்குமோ என்ற பயம் தான் முதலில் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அதிக வலியை உண்டாக்குகிறது. முதல் முறை உடலுறவு வைத்துக் கொள்ளும் போது வலி உண்டாகமல் இருக்க, ஆண்கள் தங்களது துணைக்கு உதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உடலுறவுக்கு முன்னான காதல் பேச்சுக்கள் மற்றும் காதல் விளையாட்டுக்கள் போன்றவை பெண்களுக்கு உடலுறவு மீது இருக்கும் அதீத பயத்தை குறைக்க உதவுகின்றன.


2. இரத்த பயம்

முதல் முறை உடலுறவு கொள்ளும் போது இரத்த போக்கு ஏற்பட வேண்டும் என்பது கட்டாயம் என்பது பெண்களின் எண்ணமாக உள்ளது. இது மிகவும் தவறான ஒன்றாகும். முதல் முறை உடலுவின் போது இரத்த போக்கு உண்டானால் தான் கர்ப்பு இருக்கிறது என்ற மூட்டாள் தனமான அர்த்தம் பலரிடம் நிலவி வருகிறது. இது மிகவும் முக்கியமானது அல்ல. பெண்ணுறுப்பில் இருக்கும் மிகவும் லேசான மேம்பரேன் என்பது உடலியல் செயல்பாடுகள், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி செய்தல், சுய இன்பம் காணுதல் போன்றவற்றின் போது உடைந்து இருக்க கூடும். எனவே இது பெண்களுக்கு முக்கியமானது அல்லது. இதனால் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது, பெண்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்படாமல் இருப்பது நல்லது.


3. ஈரப்பதம்

வலி இல்லாத, நீண்ட நேர உடலுறவுக்கு பெண் உறுப்பில் ஈரப்பதம் உண்டாக வேண்டியது மிகவும் அவசியமாகும். உடலுறவுக்கு முன் விளையாட்டுக்கள் இந்த ஈரப்பதத்தை அதிகரிக்கும் என்பதால் நீங்கள் உங்களுடைய துணையுடன் இதனை செய்யலாம். ஈரப்பதம் இல்லாத நிலையில் உடலுறவு கொண்டால், வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், எரிச்சல், இரத்த போக்கு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.


4. வேகம்

உடலுறவில் வேகம் காட்டுவது என்பது வலியை உண்டாக்கும் என்பதால், மிகவும் நிதானமாகவும், மெதுவாகவும் செயல்பட வேண்டியது அவசியம். இல்லை என்றால் வலி உண்டாகும். இது பயத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கும் இது காரணமாக இருக்கும்.

5. அமைதியின்மை

உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அமைதியான மன நிலை என்பது மிகவும் அவசியம். பயம், மனக் குழப்பம், வெறுப்பு போன்றவை பெண் உறுப்பில் ஈரப்பதம் உண்டாவதை தடுக்கும் காரணங்களாக அமைந்து விடும். இதனால் உடலுறவு என்பது மிகவும் கடினமாக ஒன்றாக மாறும் வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு இந்த சூழ்நிலையில் வலி ஏற்படவும் செய்யும். எனவே மனதை அமைதியாகவும், உங்களது துணையுடன் ஒருங்கிணைத்தும் வைத்துக் கொள்வது என்பது முக்கியம்.


6. குறிப்பு

இந்த முறைகளை எல்லாம் கடைப்பிடித்தும் உங்களுக்கு உடலுறவு கொள்ளும் போது வலி ஏற்பட்டால் அருகில் உள்ள பெண்கள் நல மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தந்த்ரா

காற்று , உணவு , தண்ணீர் , உறக்கம் , பாலின்பம் . - இவை தான் ஒரு மனித உடலுக்கான அடிப்படைத் தேவைகள் . இவற்றில் ஒன்று இல்லையென்றாலும் உடல் துன்பப் படுவது உறுதி .
அந்த உடற் துன்பம் காரணமாக மன நலமும் கெடுவது உறுதி .
ஆகவே இவற்றைத் தேடிப் பெறுகின்ற அறிவானது , மனிதனின் மரபணுவிலேயே இடம் பிடித்திருக்கிறது .
அந்த அறிவின் படி , எது கிடைக்கவில்லையோ அதைத் தேடி பெற அனைவரும் முயற்சிக்கிறார்கள்
இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல . .
இதை , இந்தியக் கணவன் மனதில் நிறுத்துவது இன்றைய சூழலில் மிகஅவசியம்.-
-----------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------

" பாலுறவு அசிங்கமானது . அருவருப்பானது . அற்பத்தனமானது . இன்பத்தை தரக்கூடியது . பாவகரமானது . மிருகத்தனமானது . இனப் பெருக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியது . உடல் நலத்தை பாதிக்கக்கூடியது "-
இது போன்ற கருத்துடையவர் ஒன்று கடைந்தெடுத்த முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது திட்டமிட்டு மனித சமூகத்தை தவறாக வழிநடத்துபவராக இருக்க வேண்டும் .
ஏனெனில் இவர் தன்னுடைய பிறப்பையே அவமதிக்கிறார் . தான் உருவாகக் காரணமாக இருந்த இயற்கைக் சக்தியையே பழித்துரைக்கிறார் .
சற்று விரிவாக பார்ப்போமானால் ,,
பாலுறவு அசிங்கமானது என்ற கருத்து எதனால் உருவாகிறது ? பாலுறவில் ஈடுபடக் கூடிய உறுப்புகள் கழிவுறுப்புக்களாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன . அதனால் தான் பாலுறவு அசிங்கமானது என்கிற கருத்து உருவாகிறது .
ஆனால் இங்கேயுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் , பாலுறவில் ஈடுபடக்கூடிய உறுப்புகள் , கழிவுறுப்புகளாக இருந்தாலும் அதனால் ஏற்படும் இன்பத்தை உணர்வது 'மூளை ' .
ஆகவே , பாலின்பம் என்பது மூளை சார்ந்ததே ஒழிய கழிவுறுப்புகள் சார்ந்தது அல்ல .
மேலும் பாலுறவில் ஈடுபடாத தெரியாதவர்கள் தான் கழிவுறுப்புக்களை மட்டுமே கொண்டு விளையாடக்கூடியவர்கள் . பாலியல் ஞானமுடையவர்களை பொறுத்தவரை , உடல் முழுவதுமே பாலுறுப்பு தான் .
ஆகவே பாலுறவு அசிங்கமானது என்று கூறினால் , மொத்த உடலும் அசிங்கமானது என பொருளாகிறது .
கடவுள் அசிங்கமான எதையும் படைக்கக் கூடியவரல்ல .
மேலும் இந்த உலகிலேயே உயிர் தான் விலை மதிப்பற்றது .அந்த உயிரானது , பாலுறவு மூலமாக தான் உருவாகிறது . உருவாகிக் கொண்டுமிருக்கிறது . உலகம் உள்ளவரை இதை யாராலும் மாற முடியாது.
ஆகவே , விலை மதிப்பற்ற உயிர் உருவாக ஒரு அசிங்கமான செயலையா கடவுள் தேர்ந்தெடுத்திருப்பார் .?


------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--ஆணும் சரி , பெண்ணும் சரி , ஆபாசப் படங்களில் காட்டப் படுபவை அனைத்தும் உண்மை என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு . திரைப்படங்களில் காட்டப் படுவதெல்லாம் உண்மையென ஒரு குழந்தை நம்புவதைப் போன்ற நம்பிக்கை இது . இந்த நம்பிக்கை ஆழ்மனதில் பதிவாகிவிடுகிறது .
ஏனெனில் , காமம் சார்ந்த அனைத்தும் நேரிடையாக ஆழ்மனதில் பதிந்து விடக் கூடியவை . அதாவது காமம் ஆழ்மனம் சார்ந்தது . காமம் சார்ந்த எந்தவொரு நிகழ்வையும் யாரும் முயற்சி செய்து நினைவில் வைத்திருக்கத் தேவை இல்லை .
குழந்தையாக இருந்தது முதல் இந்த வினாடி வரை , தான் கண்ட காமம் சார்ந்த ஒரு உண்மை காட்சியையோ அல்லது தனக்கு ஏற்பட்ட காமம் சார்ந்த அனுபவத்தையோ, எந்தவொரு மனிதப் பிறவியாலும் மறக்க முடியாது .
அதாவது காமம் சார்ந்த பிறரது நடவடிக்கைகளை பார்த்திருந்தாலும் சரி, திட்டமிட்டு ஒளிந்திருந்து பார்த்திருந்தாலும் சரி , மனிதனால் தான் கண்ட காட்சியை மறக்க முடியாது .
அதே போல தனக்கு ஏற்பட்ட காமம் சார்ந்த எந்தவொரு அனுபவத்தையும் மனிதனால் மறக்க முடியாது. ஏனெனில் காமம் என்பது நேரிடையாக ஆழ்மனத்திற்குள் இடம் பிடிக்கக் கூடியது . முயற்சி செய்து நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை .
திருமணம் வரை , சுய இன்பத்தில் ஈடுபட்ட அனுபவமெல்லாம் மறந்து போய் விடும் . ஆனால் எதிர் பாலினத்தோடு ஆறுவயதில் விளையாடிய அப்பா அம்மா விளையாட்டு முதல், பாலுறுப்புகளை பொருத்திப் பார்த்தது வரை எந்தவொரு அனுபவமும் மறக்கவே மறக்காது. மரணப் படுக்கையில் கூட நினைவிருக்கும் . இது இருபாலினத்திற்கும் பொருந்தும்.----------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


மனித உடலில் நிகழும் பாலின்பம் ஒரு பேரின்ப அனுபவம் மட்டுமல்ல. உடல் நலத்தையும் மன நலத்தையும் சிறப்புறப் பேணக் கூடிய ஒரு மா மருந்து . மேலும் எவ்விதப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு அரு மருந்து . மூளையை அற்புதமாகச் செயல்படச் செய்கின்ற ஒரு அமிர்தம் . இன்றைய மருத்துவ அறிவியலும் , உளவியலும் பாலின்பத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறது . இந்த மருத்துவத்திற்காக தனியாக பணத்தைச் செலவளிக்கத் தேவையில்லை. வீட்டை விட்டு வெளியில் எங்கும் சென்று தேடத் தேவையுமில்லை . அது தவிர அன்பெனும் கடவுளைத் தம்பதியிரிடையே உருவாக்கி குடும்ப வாழ்க்கையைச் சொர்க்கமாக மாற்றக் கூடிய ஒரு மந்திர சக்தியும் கூட . உடலில் நிகழும் உச்ச கட்ட பாலின்பத்தால் ஏற்படுகின்ற நன்மைகளை பட்டியலிடத் தொடங்கினால் வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்தையும் தான் பட்டியலிட வேண்டும் . இந்த உண்மை இருபாலருக்கும் பொருந்தும்.


------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவன் ஒரு பெரிய பளிங்கு மாளிகையைப் பரிசளிக்கிறான். வேறொரு கணவன் அவனுடைய மனைவிக்கு ஒரு காரை பரிசளிக்கிறான். இனியொரு கணவனோ அவனுடைய மனைவிக்கு ஒரு தங்க ஆபரணத்தை பரிசளிக்கிறான். ஒரு ஏழைக் கணவன் அவனுடைய மனைவிக்குப் பாலின்பங்களை மட்டுமே வழங்குகிறான் . முதல் மூன்று மனைவியரும் தங்கள் கணவனுக்கு தலா ஒரு மதிப்பெண் அளித்த போது கடைசிப் பெண் மட்டும் தன் கணவனுக்கு ஐந்து மதிப்பெண்களை அளித்திருந்தாள் . ஏனெனில் பெண்ணின் ஆழ்மனமும் , மூளைநரம்புகளின் வலைப்பின்னலும் பாலியல்ரீதியாகத் தன்னை திருப்திபடுத்தக்கூடிய ஆணின் மார்பில் சரணடைந்து வாழும் படியாகத் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன .----------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


பசி , உறக்கம், காமம் .-இம்மூன்று உணர்வுகள் தான் ஒவ்வொரு நபரையும் வழி நடத்தக் கூடியவை. வாழ்க்கையை வடிவமைக்கக் கூடியவை. எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியவை . என்ன இது ? அறிவு தானே ஒரு நபரை வழி நடத்தக் கூடியது . வாழ்க்கையை வடிவமைக்கக் கூடியது . எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது , தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடியது . என்கிற கேள்வி சிலருக்கு எழலாம் . அது சரி தான். அறிவு தான் மேற்கண்ட அனைத்தையும் செய்கிறது . அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த அறிவையே மேற்கண்ட மூன்று உணர்வுகள் தான் வழிநடத்திக் கொண்டிருக்கின்றன . அறிவு என்பது பசி , உறக்கம் , காமம் ஆகிய உணர்வுகளின் அடியாள் . இந்த மூன்று உணர்வுகளின் கொத்தடிமை தான் மனிதனின் அறிவு.
பசி , உறக்கம், காமம் .-இம்மூன்று உணர்வுகள் தான் ஒவ்வொரு நபரையும் வழி நடத்தக் கூடியவை. வாழ்க்கையை வடிவமைக்கக் கூடியவை. எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியவை .
என்ன இது ? அறிவு தானே ஒரு நபரை வழி நடத்தக் கூடியது . வாழ்க்கையை வடிவமைக்கக் கூடியது . எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது , தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடியது . என்கிற கேள்வி சிலருக்கு எழலாம் . அது சரி தான்.
அறிவு தான் மேற்கண்ட அனைத்தையும் செய்கிறது . அதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் அந்த அறிவையே மேற்கண்ட மூன்று உணர்வுகள் தான் வழிநடத்திக் கொண்டிருக்கின்றன .
அறிவு என்பது பசி , உறக்கம் , காமம் ஆகிய உணர்வுகளின் அடியாள் . இந்த மூன்று உணர்வுகளின்
கொத்தடிமை தான் மனிதனின் அறிவு.
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
சற்று நிற்க. தன்னை நம்பி கரம் பிடித்த பெண்ணை போகப் பொருளாக பயன்படுத்தாமல் ,உணர்வுகளும், உணர்ச்சிகளும் கொண்ட உயிரினமாக நடத்த விரும்பும் ஆண் ,பள்ளியறை விளையாட்டுக்களின் போது காதலனாகத் தான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர , மறந்தும் கணவனாக நடந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் , காதலனிடம் பெண்ணுக்கு அச்சமிருக்காது. ஆனால் கணவனிடம் கடுகளவாவது அச்சம் கொள்வாள். அச்சமும் ஆணின் பாலின்பமும் பாலின்பமும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் அச்சமும் பெண்ணின் பாலின்பமும் பரம விரோதிகள். அதாவது அச்ச உணர்ச்சி தோன்றும் போது ஆணின் இன்பம் அதிவேகமாக நிகழ்ந்து விடும். ஆனால் பெண்ணின் இன்பம் நழுவிப் போய் விடும். மேலும் பெண் மனதில் அச்ச உணர்ச்சி இருக்கும் வரை ,உச்சகட்ட இன்பம் நிகழவே நிகழாது...
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


மனித இனத்திற்கு மட்டுமே இயற்கையாய் வழங்கப்பட்ட சிறப்புக்கொடை பாலின்பம். குட்டிபோட்டு பாலூட்டி வளர்க்கும் விலங்குகள் அனைத்தும் இனவிருத்திக்காக மட்டுமே இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன . மனித இனம் மட்டுமே இன்பத்திற்காகவும் பாலுறவில் ஈடுபடுகிறது அதனால் எந்தவொரு விலங்கினத்தையும் விடப் பலமடங்கு கூடுதலாக பாலுறவில் ஈடுபடுகிறது. அவ்வாறு பாலின்பத்தில் ஈடுபட்டபோதெல்லாம் அறிவை வளர்க்கும் வேதிகள் மனித மூளையில் சுரக்கின்றன. அதனால் மனித இனத்தின் அறிவு வளர்ந்து கொண்டேயிருக்கிறது .அறிவு வளர்ச்சி காரணமாக தன்னையொத்த விலங்கினங்களை விட புத்திசாலித்தனமான விலங்கினமாக மனித இனம் உருவாகி, இறுதியில் உயிரினங்களின் நிரந்தரமான ஆட்சியாளனாக உயர்ந்து நிற்கிறது மிருகங்களோடு மிருகமாக வாழ்ந்து கொண்டிருந்த மனித இனத்தை மிருகங்களின் தலைவனாக உணர்த்தியது மூளை . அந்த மூளையை அவ்வாறு இயங்க வைத்தது இயற்கையால் வழங்கப்பட்ட பாலின்பம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


சக்தி மையங்கள் என்பவை உடலின் பல பகுதிகளில் உள்ள சக்கரங்கள். நவீனமாகச் சொன்னால் சுரப்பிகள். இவை தான் உடலின் ஒவ்வொரு பகுதியை ஆளக்கூடிய, பராமரிக்கக் கூடிய சிற்றரசர்கள் .
உச்சந் தலையிலிருந்து பாலுறுப்பு வரை ஏழு பேர் இருக்கிறார்கள். இந்த ஏழு சக்கரங்களும் சிறப்பாகச் சுழன்றால் தான் , இவற்றைச் சுற்றியுள்ள உடற்ப் பகுதி நலமாக இருக்கும். இவற்றில் சுரக்கும் வேதிகளே உடல் என்கிற இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருப்பவை. இதே வேதிகளே மனநலத்தையும் பேணக் கூடியவை .
உதாரணமாக , உச்ச கட்டம் இன்பம் நிகழும் போது சுரக்கும் ஒரு வேதி அந்த இன்பத்தை நிகழ்த்திய ஆணின் மீது கண் மூடித்தனமான அன்பை உருவாக்குகிறது . இனியொரு வேதி நுண்ணறிவை உருவாக்குகிறது. மற்றோரு வேதி மனதை சாந்தப் படுத்துகிறது . வேறொரு வேதி ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்கிறது .
புனிதசக்கரம் என்றழைக்கப்படுகின்ற சுவாதிஸ்தான சக்கரம் தான் பாலியல் சுரப்பியை இயக்கிக் கொண்டிருக்கிறது. பாலியல்சுரப்பி தான் ஆத்திரம், கோபம் , வருத்தம், கவலை போன்ற உணர்ச்சிகளை உருவாக்கக் கூடிய வேதிகளை சுரக்கிறது. அது அடிவயிற்றில் அமைந்துள்ளது . உணர்ச்சிகரமாகச் சண்டையிடச் செய்வதும் கூட இதே சுரப்பியே .
அதாவது, மனைவியை எந்த அளவிற்குப் போகப் பொருளாகக் கணவன் நடத்துகிறானோ , அந்த அளவிற்கு கோபத்தை உருவாக்கும் வேதியை இந்த பாலியல்சுரப்பி சுரந்து விடும் . பெண்ணுக்கே இது தெரியாது. தெரிந்தாலும் சுரக்காமல் தடுக்க முடியாது. அதனால் சுரந்துவிட அந்த வேதியின் வினையால் , கணவனுடன் வம்புச்சண்டை செய்து கொண்டிருப்பாள். ஆகவே இராட்சசியாக , பயங்கரமான பிடாரியாக இருக்கிற ஒவ்வொரு பெண்ணும் பரிதாபத்திற்குரியவள் . அனுதாபத்திற்குரியவள் . ஏனென்றால் இவையனைத்திற்கும் மூலகாரணமும் , முதற்காரணமும் கணவனே ..
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------




தன் முன்னாள் நீட்டப் படும் பிச்சைப் பாத்திரத்தில் ஒரு நபர் எதைப் போடுகிறார் என்பதற்குப் பின்னால் கூட அவருடைய காமம் மறைந்திருக்கிறது .
தணிக்கப் பட்ட காமம் , கருணையோடு அணுக சொல்லும். இயன்றதை போட வைக்கும்.
அனால், தணிக்கப் படாத காமமோ சீறி மட்டுமே விழச் செய்யும் .
அதே போல , தன்னுடைய அதிகாரத்தை ஒரு நபர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதன் பின்னால் அவருடைய காமத்தின் நிலைப்பாடு மறைந்திருக்கிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


ஆணை இயக்க ஒரு பெண் தேவை . பெண் வழங்குகின்ற பாலின்பம் தான் ஆணுக்கான இயக்க விசை. இது இயற்கை விதி. கோடியில் ஒரு ஆண் இதில் விதிவிலக்கு . தன்னை இன்புறுத்தி இயக்கிக் கொண்டிருக்கும் பெண்ணை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே ஆணும் விரும்புகிறான் . தன்னுடைய உள்ளங்கவர்ந்த காதலியை பிரமிக்கச் செய்யவே, மலைப்படையச் செய்யவே ஒவ்வொரு ஆணும் விரும்புகிறான் . தன்னை பெரிய வீரனென்றும், தீரனென்றும் திறமைசாலியென்றும் காட்டி கொள்வதோடு அதை நிரூபிக்கவும் விரும்புகிறான். இது தான் ஒரு ஆணை செயல்பட வைக்கிற உந்துவிசை . இது தவிர ஒரு ஆணை உந்தித் தள்ளும் சக்தி இந்த உலகில் வேறெதுவும் இல்லவே இல்லை . பாலின்பத்தை மனைவிக்கு வழங்கி மலைக்கச் செய்ய முடியாத போது தான் புறம் சார்ந்த வேட்டைப் பொருட்களைக் கொடுத்தாவது தன்னுடைய உள்ளங்கவர்ந்தவளை பிரமிக்க வைக்க முயற்சி செய்கிறான். அந்த நெருக்கடிக்கு ஆளாகும் போது தான் ஆண் இலஞ்சப் பணத்திற்காக அடுத்தவனிடம் காய் நீட்டுகிறான் . இது தன்னுணர்வற்ற நிலையில் நடைபெறுகிறது . எனினும் இலஞ்சம் வாங்குபவன் தோற்றுப் போவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனெனில் பாலின்பத்திற்கு மாற்றுப் பொருளாக விளங்கும் திறன் பணத்திற்க்கோ , பொருட்களுக்கோ இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


1) வயிற்று வலி , 2) அமாவாசை ,
3). குழந்தை விழித்துக்கொண்டுள்ளது ,
4.) தலைவலி , 5). வெள்ளிக்கிழமை ,
6). உடல் வலி , 7) மூடு இல்லை ,
8) தூக்கம் வருகிறது ,
9) என் அம்மா வந்திருக்கிறார் ,
10) கொசுத்தொல்லை ,
11) நாளை அதிகமாக வேலை இருக்கிறது ,
12) குழந்தைகள் வளர்ந்துட்டாங்க ,
13) இன்று என் பாட்டியின் நினைவுநாள் ,
14.) உங்கள் உடம்பு கெட்டு போய்விடும் ,
15) இன்று வேலை அதிகம் ,
16) ஓய்வு தேவை ,
17) வயதாகி விட்டது . போதும் ,
18) போரடிக்கிறது ,
19) உறவினர்கள் வந்துள்ளனர் ,
20) கரு உருவாகி விடும் ,
21). சிகரெட் வாசம் ,
22) உன் அம்மா பேச்சை கேட்டுக் கொண்டு ஏன் திட்டினாய் . நான் தர மாட்டேன் ,
23). நாளை மாத வீடாய் துவங்க போகிறது , 24),25),25),26),27) மாத வீடாய் என ஐந்து நாட்கள் .
28). இன்னைக்கும் டயர்டா இருக்கு , 29)இதற்கு மட்டும் நான்வேண்டுமாக்கும் ,
30) இன்று பண்டிகை தினம் ,
31) வேண்டாம். கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ..
ஒரு மாதத்தில் இத்தனை விதமான காரணங்களையும் , பகிர்ந்து கொள்ள முடியாத இன்னபிற காரணங்களைக் கூறியும், தன் மனைவி பாலுறவை நிராகரிப்பதாக சில கணவர்கள் புலம்புகிறார்கள் . இதில் உண்மை இல்லாமலில்லை .
ஆனால் அதை விட , கணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பேருண்மை ஒன்று ..,
மனைவியின் உறக்கத்தை கெடுத்து , அடங்கிக் கிடந்த அவளுடைய விரக தாபத்தை தூண்டி விட்டு விட்டு , அதை தணித்து அவளை உறங்க வைக்காமலே , போகப்பொருளாக பயன்படுத்திய பின் , அவளுக்கு அருகில் படுத்து, குறட்டை விட்டு ஆனந்தமாக உறங்கத் தொடங்கும் பாலியல் அறிவே இல்லாத ஆணிடமிருந்து, ஒரு பெண் தன்னை தற்காத்துக் கொள்ள இத்தகைய காரணங்களைக் கூறி தப்பிக்க வேண்டியிருக்கிறது .
என்னை போகப் பொருளாகப் பயன்படுத்தும் இத்தகைய மோசமான பாலுறவைக் காட்டிலும் , பாலுறவே இல்லாமல் வாழ்வதையே என் உடலும், மனமும் விரும்புகிறது .வேறென்ன செய்வேன், என்கிறாள் பெண் .
மேலும், தன்னை போகப்பொருளாக படுத்துவதிலிருந்து தற்காத்துக் கொள்ள, என் கணவனின் தாய் எதை செய்தாளோ , கணவனின் சகோதரிகள் எதை செய்கிறார்களோ அதையே நானும் செய்கிறேன் என்கிறாள் .
நியாயம் தானே ..
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


#ஒரு_காதல்_கணவர்_கூறுகிறார் ..
என் திருமணம் காதல் திருமணம் . ஓடி போய்த் திருமணம் செய்து கொண்ட காதல் எங்கள் காதல் . திருமணமாகி இருபதாண்டுகள் ஆகிறது . மனைவி இல்லத்தரசி . இரண்டு குழந்தைகள் உள்ளனர் . கடந்த இருபதாண்டுகளில் மனைவியில் பெயரில் வீடு கட்டியிருக்கிறேன் . நகைகள் , பட்டுச் சேலைகள் என பத்து லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவழித்திருக்கிறேன் .
என் தரப்பு உறவுகள் விழாக் காலங்களிலும் , மனைவியின் தரப்பு உறவுகள் அடிக்கடியும் வீட்டிற்கு வந்து போகும் சூழல் இருக்கிறது . சிறப்பாகக் கல்வி பயிலும் வாய்ப்பை குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன் .
எனினும் , நான் தான் என் மனைவியை மயக்கிக் காதலித்து திருமணம் வரை கொண்டு வந்து அவளை ஏமாற்றி விட்டதாக கூறுகிறாள்.
காதலித்தவளைக் கை விடுவது தான் ஏமாற்றும் செயல் எனக் கருதப்படும் சூழலில் திருமணம் செய்து இருபதாண்டுகளாகக் கூடி வாழ்ந்து கொண்டிருப்பதை ஒரு ஏமாற்றுச் செயல் என்று என் மனைவி கூறுவதைக் கேட்பது மிகவும் துயரமளிப்பதாக உள்ளது . உயிர் வாழும் விருப்பத்தை , கொஞ்சம் கொஞ்சமாக நான் இழந்து கொண்டிருக்கிறேன் .
இனியொரு_பணக்காரக்_கணவர்_கூறுகிறார் ...
நான் ஒரு தொழிலதிபர் . என் மனைவி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். மூவாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு என் நிறுவனத்தில் வேலை செய்தவள் . காதல் திருமணத்தின் அவள் உடுத்தியிருந்த ஆடைகள் மட்டுமே அவள் கொண்டு வந்த ஒரே சீதனம் .
அதன் பின் நான் தான் அவளுக்குரிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்து பராமரிக்கிறேன் . அவளது பஸ் பயணத்தை கார் பயணமாக மாற்றியிருக்கிறேன் . உலகத்தரம் வாய்ந்த பள்ளியில் குழந்தை படித்துக் கொண்டிருக்கிறான் .
கூலி வேலைக்கு பொய் கொண்டிருந்த அவளுடைய பெற்றோர் , உடன் பிறந்தவர்களுக்கு கூட தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து , பொருளாதார ரீதியாக உயர்த்தி விட்டிருக்கிறேன் .
எனினும் தன்னுடைய திருமண விஷயத்தில் தவறாக முடிவெடுத்து விட்டதாக, என் மனைவி என்னிடமே கூறுகிறாள் . என் மனம் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.
என்ன செய்து என்ன பயன். ? நிம்மதியே இல்லை . சாமியாராக போய் விடலாமா என்ற சிந்தனை அடிக்கடி வருகிறது ... என்று புலம்புகிறார்.
சரி. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமொன்று உண்டு. .
குடும்பத்திற்குள்ளாகட்டும், வெளியிலாகட்டும் தன்னால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மனைவியை அல்லது பிறரை பலிகடா ஆக்குவதில் பெண்ணை விட ஆண்கள் எப்போதும் கை தேர்ந்தவர்களே
#பழமொழி
" திருமணமான முதல் இருபதாண்டுகளில் கணவனால் மனைவிக்கு எவையெல்லாம் வழங்கப்படுகிறதோ , அவையெல்லாம் இம்மியளவு கூட பிசகாமல் கூட்டு வட்டியோடு அடுத்த இருபதாண்டுகளில் மனைவியால் கணவனுக்கு திருப்பி வழங்கப்படும் ".
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------

#ஆயிரத்திற்கும்_மேற்பட்ட_பெண்களிடம்_ஆய்வுக்காக_கேட்கப்பட்ட_கேள்வியும்_பதிலும் ...
அடுத்த பிறவியிலும் பெண்ணாக , இப்பிறவியை காட்டிலும் மிக அழகானவளாக , மிகவும் செல்வச் செழிப்போடு , இதே கணவனுடன் வாழும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு வழங்கினால் ஏற்று கொள்வீர்களா ?
இந்த வாய்ப்பை , 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கையெடுத்து கும்பிட்டு முற்றிலும் நிராகரிக்கிறார்கள் .
ஆனால் நிராகரிப்பதற்கு அவர்கள் கூறும் காரணத்தில் வேண்டுமானால் உண்மையில்லாமல் இருக்கலாம் .
#குறிப்பு:
எந்த ஆணும் இந்த ஆய்வினை மேற்கொண்டு உண்மையை உணரலாம் .
ஆனால் இந்த ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரே நிபந்தனை .
இந்த கேள்வியை ஆண் , தன்னுடைய சகோதரிகளிடம். தோழிகளிடம் மட்டுமே கேட்க வேண்டும் .
தன் மனைவியிடம் இந்த கேள்விக்கான பதிலை கேட்டால் நேரடியாக பதில் சொல்ல மாட்டார் . அல்லது பொய் சொல்லுவார் .
ஏனெனில் , இதே கணவனுடன் இந்தபிறவி முழுவதும் வாழ்ந்தாக வேண்டுமே .. என்ன செய்வது ?
ஆனால் ஒன்று மட்டும் உறுதி . பேருண்மைகள் எப்போதும் கசப்பாகவே இருக்கும் .
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


நானெல்லாம் ஓய்வே இல்லாமல் அரைமணி நேரம் இயங்கத் தெரிந்தவனாக்கும் .
அரைமணி நேரம் கூட இயங்காமல், எனக்கெல்லாம் உயிர்நீர் வெளியேறாது .
என்னிடம் சிக்கும் பெண் , அதன் பின் ஆறு மாதங்களுக்கு பாலின்பத்தைப் பற்றி எண்ணிக்கூட பார்க்க முடியாது .
நான் ஒரு பெண்ணை தொட்டு விட்டேனென்றால் , அதன் பின் அவளால் தன் மரணம் வரையிலும் என்னை மறக்கவே முடியாது .
இவ்வாறும் , இன்ன பிறவாகவும் உளறிக் கொட்டாத ஆண்களைப் பார்ப்பதே அரிதாக உள்ளது .எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனச் சொல்வதைப் போன்ற வெள்ளைப் பொய்கள் இவை .
ஆண்களைப் பற்றிய மிகப்பெரிய ரகசியம் என்னவென்றால் , பெண்ணுக்குரிய இன்பங்களை வழங்கத் தனக்கு தெரியாது என்பதை எந்த ஆணும் ஒப்புக் கொள்வதில்லை .
ஒவ்வொரு ஆணும் தன் மனைவிக்குரிய இன்பங்களை வழங்குகிற கல்வியில் டாக்டர் பட்டத்தை வாங்கியிருப்பவர்களைப் போலவே தன்னைக் காட்சிப் படுத்திக் கொள்கிறான் .
ஏனெனில் அவ்வப்போது நிகழ்ந்து விடுகின்ற துரித ஸ்கலித ரகளைகளைப் பற்றிப் பிறரோடு பகிர்ந்து கொள்வதையும் , பெண்ணின் கபடத்தனமான முக்கல் , முனகல்களைக் கேட்ட மாத்திரத்தில் தன்னுடைய உயிர்நீர் வெளியேறி விடுகின்ற பலவீத்தைப் பற்றி வெளியில் கூறி நிவாரணம் தேடு வதையும் , பெண்ணுக்குரிய இன்பங்களை வழங்க தனக்கு தெரியாது என்பதை ஒப்புக் கொள்வதையும் , பெண்ணின் பால் மண்டல உடற்கூறு பற்றித் தனக்குத் தெரியாது என்று ஒப்புக் கொள்வதையும் , தன்னுடைய ஆண்மையோடு தொடர்பு படுத்திக் கொள்கிறான்
.
கடைந்தெடுத்த முட்டாள் கூட , பாலியல் பற்றித் தனக்கு தெரியாது என்று சொன்னதே இல்லை . அதன் காரணமாக தொடர்ந்து பாலியல் மூடனாகவே அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் .
மேலும் தன்னை நம்பிக் கரம்பிடித்த மனைவியை ஒரு போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் அதனால் , அவனுக்குக் கழுத்தை நீட்டிய பெண் மனோரீதியாக வதைப் பட்டுக் கொண்டிருப்பதோடு , அவனையும் தவறாமல் வதைத்துக் கொண்டிருக்கிறாள் .
#குறிப்பு : #ஆண்களை குறை சொல்வது பதிவின் நோக்கமல்ல . ஆண் , தன்னை கரம் பிடித்த பெண்ணுக்குரிய இயற்கை தேவையான பாலின்பத்தை முழுமையான வழங்கி , குடும்பவாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் தழைக்க வேண்டுமானால், ஆண்கள் இதுவரை காமம் குறித்து இதுவரை ஊட்டப்பட்ட கருத்துக்களை அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு , கூச்சத்தை , தயக்கத்தை தவிர்த்து பாலியல் அறிவை தேடிப் பெற முயல வேண்டும் என்பதே பிரதான நோக்கம் .
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


பாலுறவு பாவகரமானது என்று யாரேனும் ஒரு ஞானி கூறினால் அதைக் கடுகளவும் நம்பாதீர்கள் . அந்த மனிதர் ஞானமடையாதவர் என்பதற்கு இது தான் அடையாளம் .
ஏனெனில் , பிரபஞ்சம் அனைத்தும் கடவுளின் அம்சம் . முழுமையானது . இதில் நல்லவை என்றும் தீயவையென்றும் இரண்டு விஷயங்கள் இல்லை . மனதின் இருமை நிலையே , இருமை இயல்பே ஆன்மீக அறியாமை . அனைத்தும் ஒன்றே என்று உணர்வது தான் ஞானம் .
இருமை நிலையிலிருந்து ஒருமை நிலையை அடைவது தான் ஞானம் . பாவகரமானவை என்றும் புண்ணியகரமானவை என்றும் பிரித்துப் பார்ப்பதே ஆன்மீக நிலைக்கு எதிரானது . அனைத்தும் கடவுளின் படைப்பே . ஆகவே கடவுளின் படைப்பில் எந்தத் தவறும் இருக்க முடியாது .என்பதை உணர்வதே ஆன்மீகப் பயணத்தின் அரிச்சுவடி .
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


" ஊடிய வரை உணராமை வாடிய வள்ளி முதலறிந் தற்று " என்பது ஒரு குறள் .
அதாவது பெண்ணுடன் (மனைவியுடன் ) சண்டையிட்ட பின் , அன்றைய தினமே புணர்ந்து மகிழ்விக்கத் தவறுவது , வாடிய பயிரின் அடி மட்டத்தில் வெட்டுவதைப் போன்றது என்று வள்ளுவர் கூறுகிறார் .
அது எப்படியெனில், விடிய விடிய அந்தச் சண்டையைப் பற்றியே மனம் எண்ணிக் கொண்டிருக்கும் . அதனால் கோபம் உருவாகும் . அந்த கோபம் ஆழ்மனதில் வெறுப்பாய் பதியும் . அந்த வெறுப்பு காரணமாக , அன்பு சாகும் .
அதனால், தம்பதியரிடையே பிணக்குகள் அதிகரிக்கும் . வாழ்க்கை நரகமாகும் என்பதே குறளின் பொருள்
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு துணிச்சலான பெண் கூறுகிறார் ...
" கணவனை என்னிடம் நெருங்க விடவே அஞ்சுகிறேன் . ஏனெனில் சிறிது நேரம் சரச சல்லாப விளையாட்டுகளில் ஈடுபடலாம் என்றெண்ணி நெருங்க விட்டால் கூட , அதை உடனடி உடலுறவாக மாற்றவே கணவன் முயற்சிக்கிறான் .
நேரடியாகவே பாலுறவில் ஈடுபடுவதன் மூலம் எனக்குரிய இன்பங்கள் எதுவுமே நிகழாது என்பது எனக்குத் தெரியும் . இயந்திரத்தனமான பாலுறவால் என் மனநிலை மாசடைவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் . மேற்கண்ட தகவலை சொன்னாலும் என் கணவனுக்கு புரிவதில்லை . அதனால் அவனுக்கு பைத்தியம் பிடிக்காத அளவுக்கு மட்டுமே அண்ட விடுகிறேன் ".
பாலுறவு என்பது உடல் மூலமாக அன்பை பரிமாறிக் கொள்ளும் செயல் . ஆனால் , அன்பேயில்லாத இயந்திரத்தனமான பாலுறவு தான், பாலுறவே இல்லாத வாழ்க்கையை நோக்கி தள்ளுகிறது .
எந்த அளவிற்கு போகப் பொருளாக மனைவி பயன்படுத்தப்படுகிறாளோ , அதற்கேற்ப அவள் பாலுறவின் மீது வெறுப்படைகிறாள் . மோசமான பாலுறவைக் காட்டிலும் , பாலுறவே இல்லாமல் வாழ்வதையே ஒரு பெண்ணின் உடலும் மனமும் விரும்புகிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


B------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


ஆணின் உடலில் நிகழும் உச்சகட்ட இன்பத்தையும் , விந்து வெளியேற்றத்தையும் ஒன்றாகவே பெரும்பான்மையான ஆண்கள் கருதுகிறார்கள் . விந்தை வெளியேற்றுவது தான் பாலுறவு . பெண்ணுறுப்பு என்பது விந்தை கொட்டுவதற்கான ஒரு குப்பைக் கூடை. ஆணின் விந்து அங்கு கொட்டப்பட்டவுடனே , பெண்ணுக்கும் இன்பம் நிகழ்ந்து விட்டதாக பொருள் . இது தான் பெரும்பாலான ஆண்களின் பாலியல் அறிவு .
பெண்ணுறுப்பின் வெளிப்புற வடிவத்தை தவிர , வேறு எதுவுமே தெரியாத நிலையில் தான் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள் . பெண்ணுறுப்பில் உள்ள , புணர் புழை என்பது வேறு . சிறுநீர்ப் புழை என்பது வேறு . பாலின்பத்தை அனுபவிப்பதற்கு மட்டுமே பெண்ணின் உடலில் பிரத்யேகமாக படைக்கப்பட்ட ‘பாலுறுப்பு “ என்பது வேறு . இம்மூன்றும் வெவ்வேறு உறுப்புகள் என்பதை கூட அறியாமலே 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மனைவியுடன் பாலுறவில் ஈடுபடுகிறார்கள் . பாலின்பத்தை அனுபவிப்பதற்காக மட்டுமே பெண்ணின் உடலில் பிரத்யேகமாக படைக்கப்பட்டது பாலுறுப்பு . இன்பத் துய்ப்பிற்காகவே படைக்கப்பட்ட இத்தகைய பாலுறுப்பு கணவனால் தீண்டப்படாமலேயே 90 சதவீத பெண்களின் உடல் சவக்குழிக்குள் செல்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை . ஏனெனில் பெண்ணின் பாலுறுப்பு கணவனால் தீண்டப் படாதவரை எத்தகைய பெண்ணும் உச்சகட்ட பாலின்பத்தை அடைய வே முடியாது .
சில ஆண்கள் தங்கள் மனைவிக்குரிய இன்பங்களை வழங்க மனதார விரும்புகிறார்கள் . ஆனால் அதை வழங்குவதற்குரிய வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள் . அதைப் பற்றி அடுத்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வெட்கப்படுகிறார்கள் . பெண்ணுக்குரிய பாலின்பங்கள் எவை ? அவற்றை வழங்குவது எப்படி ? என்பதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது தங்களுடைய ஆண்மைக்கு இழுக்கு என கருதுகிறார்கள் . மனைவியை ஒரு போகப் பொருளாகக் கணவன் பயன்படுத்திக் கொண்டிருப்பதற்கான இரண்டாவது காரணம் இந்த வெட்கம் .
மூன்றாவது காரணம் ஆணாதிக்க சிந்தனை . ஆணாக பிறந்து விட்ட காரணத்தாலேயே, பெண்ணைப் பற்றி அனைத்தும் தெரியும் என்று பல ஆண்கள் தங்களை கருதிக் கொண்டிருக்கிறார்கள் .
பெண்ணுக்கு எட்டு வகை தாம்பத்ய இன்பங்கள் உண்டு . அவற்றில் சிறந்தது அமிர்த இன்பம் . இது நிகழும் போது தான் , ஐம்பது முதல் இருநூறு மில்லி லிட்டர் வரை பெண்ணின் விந்தணு வெளியேறும் . அப்போது தான் பெண் மனதின் அடியாழ நிராசைகள் அனைத்தும் கொல்லப்படும் . காமம் தணிக்கப் படும் . அதோடு உடல் சார்ந்த , மனம் சார்ந்த , அறுபது வகையான நன்மைகளையும் பெண் பெறுவாள் . இதை ஒவ்வொரு கணவனும் உணர்ந்து , மனைவிக்குரிய பாலின்பத்தை வழங்குவதன் மூலமே இருவரும் இன்புற்று இல்லற வாழ்வு சிறக்கும் . குடும்ப வாழ்வு தழைக்கும் .
பெண்களைப் பற்றிய அடிப்படைப் பார்வையை மாற்றி, உள்ளதை உள்ளபடி பார்க்கும் திறனை இன்றைய இந்திய ஆண்கள் பெற்றாக வேண்டும் . மனைவியை போகப் பொருளாக பயன்படுத்தும் போக்கு முற்றிலுமாக ஒழித்துக் கட்டப் படவேண்டும் .இல்லாவிட்டால், குடும்ப அமைப்பு முறை தகர்க்கப்பட்டு ஆபத்தான விளைவுகளை உருவாக்கி விடும்.. அதனால் , சமூகத்தின் சமநிலை தகர்க்கப் பட்டு விடும் . பாலின்பப் பஞ்சமே குடும்பத்தில் நிகழும் அனைத்து சச்சரவுகளுக்குமான அடித்தளம் , .பாலின்ப பஞ்சமே கொலைகளின் மூலம். பாலின்ப பஞ்சமே சமூக குற்றவாளிகளை உருவாக்கும் வார்ப்புக் கூடம் . பாலின்பப் பஞ்சமே , பெண்ணின் மீதான தாக்குதலுக்கான பிறப்பிடம் .
பணம் , பணத்தால் பெண்ணுக்காக வாங்கப்படும் எவையுமே பெண்ணின் மனதை மகிழ்விக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் . ஆனால் பணத்தை பாலின்பத்துக்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்த முடியாது . பணம் அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரக் கோல் அல்ல . இதை இந்திய கணவன் உணரவேண்டிய மிக முக்கியமான ஒன்று.
ஆகவே , காமம் குறித்து இதுவரை ஊட்டப் பட்ட கருத்துக்கள் அனைத்தையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு இந்நூலை படிக்க துவங்கினால், ஒவ்வொரு கணவனையும் அசாதாரணமான காதலனாக , உண்மையான , சுயநலமற்ற, தவறாமல் மனைவிக்குரிய இன்பத்தை அளிக்கின்ற வெற்றிகரமான கணவனாக மாற்றியமைக்கும் . மனைவியின் உடல் நலத்தையும் , மன நலத்தையும் சிறப்பாக பேணக்கூடிய மருத்துவனாக மாற்றும் .அடைத்துக் கிடக்கின்ற அன்பின் ஊற்றுக்கள் அனைத்தையும் தூர் வாரி, பெண்ணின் மென்மையை உச்சபட்ச அளவிற்கு மிளிர வைக்கும்
சொர்க்கமும் நரகமும் எங்கோ வானுலகில் இருப்பவை அல்ல . அவை உருவகங்கள் . அகத்தால் உருவாக்கப்படுபவை . அந்த அடிப்படையில் ஒவ்வொருவருடைய இல்லற வாழ்வையும் சொர்க்கமாக மாற்றிக் காட்ட இந்த நூலால் நிச்சயம் முடியும் . அந்த வல்லமை இந்த நூலுக்கு உண்டு .
ஆங்கில மொழி புலமையற்ற, தமிழ் மொழியை மட்டுமே கற்கும் வாய்ப்பைப் பெற்ற , சாமான்யர்களுக்கு தாம்பத்யம் குறித்த ஆழமான அறிவைப் பெறும் வாய்ப்பு இல்லை என்ற பெரும் குறையைப் போக்கும் வகையில் , தன் ஞானத்தால் தமிழ் சமுகத்திற்கு அற்புத புதையலை கொடையாக வழங்கியிருக்கிறார் எங்கள் ஐயா .திரு. போதி பிரவேஷ் அவர்கள். தமிழ் சமூகத்திற்கு , எங்கள் ஐயா .திரு. போதி பிரவேஷ் அவர்கள் வழங்கியுள்ள கொடை இந் நூல் . . இந்நூலை வாங்க ஆணுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல . நூலின் தலைப்பை பார்த்தவுடன் ஏற்படும் , தயக்கம் , வெட்கம், இதையெல்லாம் படிச்சு தான் தெரிஞ்சுக்கணுமா , படிப்பதை யாராவது பார்த்துட்டா.. , என்ற மனோபாவங்கள் தான் ஆண்கள் பாலியல் குறித்த அறிவை பெறுவதற்கு தடையாக இருக்கும் எதிரிகள் . இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு தொடர்பு கொண்டு வாங்கி , வாசித்துணர்ந்து, இல்லற வாழ்வை இன்புற வாழுங்கள் . நன்றி


------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகின்ற பாலுறவால் உருவாகின்ற பாலின்பம் தான் குடும்ப வாழ்க்கை என்கிற வாகனம் சீராக இயங்குவதற்கான எரிபொருள் .
தம்பதியரிடையே நிலவும் சரச சல்லாபங்கள்
( கொஞ்சல்களும், குலாவல்களும் ) தான் அந்த வாகனத்தின் தேய்மானப் பகுதிகளை பாதுகாக்கின்ற உயவுப் பொருள்கள்.
ஒரு தார வாழ்க்கை என்பது தான் அந்த வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கருவி . இவற்றில் எந்தவொன்று இல்லையென்றாலும் குடும்ப வாழ்க்கை என்கிற வாகனம் பழுதடைவது உறுதி .
இந்நிலையில் போகப் பொருளாகப் பெண் பயன்படுத்தப் படுகின்ற இல்லற வாழ்வில், மனைவி எரிபொருள் . இல்லாத வாகனமாகி விடுகிறாள் . எரிபொருள் இல்லாமல் பயனற்று கிடக்கும் வாகனத்திற்கு சரச சல்லாபங்கள் என்கிற உயவுப் பொருளை கணவன் அளிப்பதில்லை . அதனால் வாகனம் பழுதடைகிறது . பயன்படுத்தாத எந்த பொருளும் பழுதடையும் என்பது இயற்கை விதி-------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


ஐயா . போதி. பிரவேஷ் அவர்கள் ஒருமுறை என்னிடம் சொன்னார் ...
, இந்திய ஆண்களில் 90 சதவீதம் பேருக்கு தனது பாலுணர்வை தணிக்கத் தெரியுமே தவிர ,முறையான தாம்பத்யத்தில் ஈடுபடத் தெரியாது . தாம்பத்ய உறவில் மனைவி இன்பத்தை அனுபவித்தாரா என்பது கூட தெரியாது . இதற்கு அவர்கள் மட்டும் காரணமல்ல . சமூக அமைப்பும் ஒரு காரணம் .
இதை அவர்கள் உணர்ந்தாலும் கூட , நமது புத்தகத்தை தொட்டால் கூட தீட்டு என்பது போல் நினைப்பார்கள். புத்தகத்தை வாங்குவது தனது ஆண்மைக்கு இழுக்கு என்ற எண்ணமிருக்கும் . பெண் கூட துணிந்து வாங்குவார்கள். ஆனால் நமது புத்தகத்தினை ஆண்மகன்களிடம் சேர்ப்பது கடினம் . அந்தளவுக்கு ஆணின் மனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை எண்ணத்தை தகர்த்தால் ஒழிய இல்லற வாழ்வில் தம்பதியரிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் தழைக்காது என்றார் .
மேலும் , . ஐந்து பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லாத நிகழ்வுக்கு , நிமிடத்தில் 5000 கூட செலவழிப்பார்கள் . ஆனால் நமது புத்தகத்தை வாங்க ஆண்களின் மனம் அவ்வளவு கூச்சப் படும் என்றார் .
இதை ஆய்வுக்கு உட்படுத்திடும் நோக்கில் ;
கடந்த வெள்ளியன்று அவிநாசி மற்றும் திருப்பூர் பகுதிகளில் " ஐயா .திரு போதி பிரவேஷ் அவர்களின் "தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை ' நூலை விற்பனை செய்ய எங்கள் குழு களத்தில் இறங்கி சுமார் 150 க்கும் மேற்பட்டோரை தனித்தனியாக சந்தித்து அவர்களின் கையில் புத்தகத்தை தந்தோம் .
சிறிய டீ கடை அதிபர், பேன்சி கடைக்காரர், வழக்கறிஞர்கள் , பொறியாளர்கள்,வங்கி ஊழியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் இதர சிறுதொழில் செய்பவர் முதல் பெருந்தொழில் செய்பவர்கள் வரை இதில் அடக்கம் .
இதன் நோக்கம் எங்களின் புத்தகத்தினை விற்பது மட்டுமல்ல .ஆண்களின் மனநிலையை கண்டறியும் ஆய்வும் கூட .
இந்நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள் ஒவ்வொன்றாக பகிரப்படும் .------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------


உலகெங்கும் பாலியல் புரட்சி நடந்து கொண்டிருக்கும் காலம் இது . எண்ணற்ற தளங்களில் பெண் விடுதலையை சாத்தியமாக்கியுள்ள காலமும் கூட .
ஆகவே , வரலாறு நெடுகிலும் ஆண் கடந்து வந்துள்ள எந்தவொரு கால கட்டத்தையும் விட , இன்றைய காலகட்டம் தான், ஆணுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்துயிருக்கிறது . குடும்ப வாழ்க்கை மிகவும் குழப்பத்திற்குள்ளதாக மாறியிருக்கிறது
ஏனெனில் , பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண் விழிப்படைந்து விட்டாள் .
காலம் மாறி விட்டது . கூட்டுக் குடும்பத்தின் மூலம் பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலம் மலையேறி விட்டது . முந்நூறு ஆண்டு காலப் பெண்களின் போராட்டத்தால் , தன் பிறப்புரிமைகள் அனைத்தையும் இன்றைய பெண் பெற்று விட்டாள் .
பெண்ணும் தன்னுடைய பாலின்பங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டாள் . என்னுடைய உடல் தேவைகள் நிறைவேற்றப் படா விட்டால் உன்னுடைய கோரிக்கையும் நிர்த்தாட்சண்யமாக நிராகரிக்கப்படும் என்பதைத் தெளிவாக வலியுறுத்தும் காலம் வந்து விட்டது .
எதை எதிர்பார்த்து ஒரு பெண் திருமண வாழ்விற்குள் வந்தாளோ , அது கிடைக்காத பட்சத்தில், அந்த வாழ்க்கையைத் தொடர்வது பற்றி அவள் யோசிப்பது நியாயமே என்கிற கருத்தும் உருவாகி விட்டது .
தன்னை ஒரு ஆண் மகன் என நம்பி கரம் பிடித்த மனைவிக்கு , ஒரு பெண்ணின் உடலில் நிகழக் கூடிய பாலின்பங்கள் அனைத்தையும் தவறாமல் வழங்குவதை, ஒவ்வொரு ஆணும் அவரவருடைய முதற் கடமையாகக் கருதிட வேண்டும். பத்து நிமிட ஓட்டப் பந்தயத்தில் தன்னுடைய இன்பத்தை மட்டும் நிகழ்த்திக் கொண்டு , மனைவியின் காமத்தை தணிக்காமலே, அருகில் படுத்து குறட்டை விட்டு உறங்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் .
கணவனுக்குரிய பாலின்பம் கிடைக்காத போது, அவனுடைய மனநிலை கொதிப்படைவதைப் போன்றே , மனைவிக்குரிய பாலின்பம் கிடைக்காத போது மனைவியின் மனநிலையும் கொதிநிலை அடைகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அது தான் குடும்ப விவகாரச் சண்டைகள் அனைத்திற்கும் மூலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, மனைவிக்குரிய பாலின்பங்களை வழங்கிய பிறகே , தன்னுடைய பாலின்பத்தை நிகழ்த்திக் கொள்வதை பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு தார வாழ்வில் தங்கள் காம உணர்வைத் தணித்து வாழத் தெரிந்தவர்கள் தான் வீட்டிற்குள் மட்டுமின்றி வெளியுலகிலும் வெற்றிகரமான நபர்களாக திகழ்கிறார்கள் .
குடும்ப விவகார சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் , இல்லற வாழ்விழும் நிம்மதியின்றி வாழ்வதோடு, வெளியுலகிலும் தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் உரிய வெற்றிகளைப் பெற முடியாமல் தாழ்ந்து போகிறார்கள்.
ஆகவே , இன்றைய நவீன காலத்திற்கேற்ற பாலியல் அறிவை வளர்த்துக் கொள்வதும் பெண்களை பற்றிய கருத்தை மாற்றிக் கொள்வதும் ஒவ்வொரு ஆணின் கடமை . பண்டைய ஆணாதிக்க நிலையைத் துறந்து விட்டு, மனைவிக்குரிய இன்பங்களை வழங்கும் சூத்திரங்களை ஒவ்வொரு கணவனும் கற்றாக வேண்டும் .
வரட்டுத் தனமான பாலுறவை புனிதச் செயலாக மாற்றினால் மட்டுமே, போகப்பொருளாக பெண்ணைப் பயன்படுத்தும் கொடூரத்திற்கு முடிவு கட்ட முடியும் . அந்த நிலையை உருவாக்கினால் மட்டுமே ஒரு தார வாழ்வை மையமாகக் கொண்ட குடும்ப நிறுவனம் செழிப்புடன் இருக்கமுடியும் என்பதால் தந்த்ரா வழிமுறைகளை இந்நூல் பகிர்ந்து கொள்கிறது
உரிய சூத்திரங்களை “ பூஜை“ என்ற பெயரில் ஆணுக்குக் கற்றுத் தருகிறது . தந்த்ரா கூறும் பூஜை முறைகள் பல்லாயிரம் ஆண்டு பழமையானவை . அந்தக் கால பேரரசர்களுக்கென்றே உருவாக்கப் பட்டவை .
பத்துக்கும் மேற்பட்ட மனைவியரை பாலியல் ரீதியாக முழுமையாகத் திருப்தி படுத்திய படி வாழ அரசர்களுக்கு கற்றுக் கொடுத்தவை . ஒவ்வொரு ஆணையும் அதே போல உருவாக்கக் கூடியவை .
சொர்க்கமும் நரகமும் எங்கோ வானுலகில் இருப்பவை அல்ல . அவை உருவகங்கள் . அகத்தால் உருவாக்கப் படுபவை . அந்த அடிப்படையில் ஒவ்வொருவருடைய இல்லற வாழ்வையும் சொர்க்கமாக மாற்றிக் காட்ட இந்த நூலால் நிச்சயம் முடியும் . அந்த வல்லமை இந்த நூலுக்கு நிச்சயம் உண்டு .
எல்லாப் புகழும் எங்கள் ஐயா .திரு போதி பிரவேஷ் அவர்களுக்கு சமர்ப்பணம் .



தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை. விலை : 520. தொடர்பு கொள்ளுங்கள் 8903970554
( i got this number from facebook only but its wonderful book and its also available on internet... and ensure author name ஐயா .திரு போதி பிரவேஷ் before buy ... all the best dude
By.Blog author super siva)









வெற்றி தோல்விகளின் மூலப்பொருள் மனநிலை . மனநிலையோடு ஒப்பிடும்போது அறிவு என்பது குப்பைக்கு சமம் .மிகப்பெரிய அறிவாளிகளின் தோல்விக்கெல்லாம் அவர்கள் கொண்டிருந்த மனநிலையே மூலகாரணம் . உலகளவு அறிவிருந்தாலும் மனநிலை சரியில்லையேல், அந்த அறிவு அழிக்கும் சக்தியாகி விடும் . அல்லது பயன்படுத்தப்படாமல் வீணாகப் போய்விடும் .
மனநிலை தான் மனிதனின் மிகப்பெரிய சொத்து . வாழ்வில் சாதிக்க விரும்புபவர்கள் , மகா வெற்றி பெற விரும்புபவர்கள் மனநிலையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் .
அத்தகைய மனநிலையை உருவாக்குபவள் "பெண்" . ஆகவே பெண்ணின் மனநிலையை பாதுக்காக்கப் பட வேண்டும்.
ஒவ்வொரு ஆணும் தன் மனைவியை ஒரு தேவதையை போல வைத்திருக்க வேண்டும்.
தேவதையை போல தன் மனைவியை வைத்திருப்பது என்றால் காஞ்சிபுரம் பட்டுசேலையைக் கட்டி, சுமக்க முடியாத அளவிற்கு நகையை அணிவித்து அழகு பார்ப்பதல்ல .
முதலில் பெண்ணின் உடற் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப் பட வேண்டும் .
உடற் தேவைகளே மனிதப் பிறவியின் முதற் தேவைகள். அடிப்படை தேவைகள் . ஆகவே மனைவியின் முதற் தேவையான உடற் தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய ஒவ்வொரு கணவனும் கற்றுக்கொள்ள வேண்டும் என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து சொன்னவர்கள் இந்திய ஞானிகள் .
இவ்வாறு தேவதையை போல ஒவ்வொரு ஆணும் தன் ,மனைவியை வைத்திருந்தால் , கணவனுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, தன் சுற்றுப்புறம் முழுவதையும் அவள் சொர்க்கமாக வைத்திருப்பாள் .

Monday, 12 October 2020

ஒரு பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவது?

 ஒரு பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவது?


காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள்.


எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.


1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.


அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.


2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.


3. பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?


4. முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல் விட்டுக் குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும்.இது முதல் படி ஆகும்.


5. பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிக மிக முக்கியமானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக முலைக்காம்பு போல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.


6. பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சினை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம்.


உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.


7. க்ளிட்டோரிசை இப்போது தொடவேண்டாம். அதற்கும் முன் இன்னும் சிலவற்றைச் செய்தபின் தான் க்ளிட்டோரிசைக் கையாளவேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள்.


8. தயங்காமல் பெண்ணின் பொறுமையைச் சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும் முன் ஒரு நொடி விட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக்கொடுங்கள்.


9. உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம் இல்லாமல்.

பேசுவது போல் அதன் மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின் கீழ்உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும் வரையும் தொடருங்கள்.


10. உங்கள் நாக்கால் அவளின் பெண்ணுறுப்பின் உதடுகளைப் பிரித்து, மேலும் கீழுமாகத் தேயுங்கள்.


11. தொடைகளை இன்னும் சிறிது விரியுங்கள். முக்கிமாய், நீங்கள் எதை செய்தாலும் அதை மென்மையுடன் செய்யவேண்டும். இப்போது உங்கள் நாக்கை மென்மையான அழுத்தத்துடன் பயன்படுத்துங்கள். இது அவளின் பொறுமையை எல்லைக்கு அழைத்துச் செல்லும்.

இனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்.


12. இனி இப்போது அவளின் க்ளிட்டோரிஸை நக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. உணர்ச்சி எழும்பலில் அவளது க்ளிட்டோரிஸ் கொஞ்சம் பருத்து தடித்து முளைத்து நிற்கும். லேசாகத் துடிக்கும். மெதுவாய் , அதன் மேல் நக்குங்கள். நக்குதலை மென்மையாய் , ஆனால் சரியாய இடைவெளியுடன் தொடருங்கள்.


13. உள் உதடுகளை மென்மையாய் இழுங்கள். உறுப்பின் பீடத்தின் மேல் நாக்கை வேகத்துடன் மேல் இருந்து கீழாக நக்குங்கள். இப்படி செய்யும்போது அவளின் தொடைகள் சிறிது நடுங்கினால், நீங்கள் செய்யும் முறை சரி என்றே அர்த்தம். உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்.


14. அவள் உச்சகட்டம் அடைவதற்கு தயாராய் இருக்கிறாள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது கண்டால், உங்கள் உதடுகளை ஓ சொல்வது போல் வளைத்து, க்ளிட்டோரிஸை வாய்க்குள் வையுங்கள். மென்மையாய் உறிஞ்சுங்கள், உறிஞ்சும்போது அவளின் முகத்தை பாருங்கள். அவளின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கின்றது, அவளுக்கு காமம் அதிகமானால் அவள் முகம் அதை பிரதிபலிக்கும், இன்னும் அதிகமாய் உறிஞ்சுங்கள். இப்போது அவள் தன் உடலை மேலெழுப்பி உங்களுடன் ஒட்ட முனைவாள். இதுதான் அவளின் உச்சகட்டம்.


15. அவள் தன் உடலை எம்பும்போது நீங்களும் எம்பிப்பின்வாங்குங்கள் எதிர்த்துச் செயல் படவேண்டாம். எந்த நிலையிலும் அவள் எத்தனை அசைத்தாலும் உங்கள் வாயை அவளது உறுப்பில் இருந்து எடுக்காதீர்கள்.


16. சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடையும் நேரம் வேறுபடும். சிலருக்கு அது வர தாமதமாகும். அதுவரைக்கும் தொடர்ச்சியாய் உங்கள் வேலையைத் தொடர வேண்டும். உங்கள் விரலை நீங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். அதாவது யோனியை நக்கும்போதே, ஒரு விரலை உள்ளுக்குள் நுழைத்து ஆட்டினால், அவளின் உணர்ச்சியின் அளவை வார்த்தைகளில் வெளியிட முடியாது.


17. அவளது உச்சநிலைக்கு அடையாளங்கள் ;


சில பெண்களின் முகம் சிவக்கும், சிலர் நடுங்க ஆரம்பிப்பார்கள். அவளின் உடலின்அசைவின் அர்த்தங்களை புரிந்துகொள்ளதொடங்குங்கள், பின் நீங்கள் அவளுக்கு மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்கள். உங்கள் ஆளுமையை சிறப்பாய் உபயோகித்தால், 2வது உச்சகட்டம் தொடரலாம்.


18. அனைத்தும் முடிந்தபின் அவளைப் புணரத்தொடங்கலாம். புணர்ந்து முடித்தபின் அவளை மார்புடன் அணைத்துக் கொள்ளுங்கள். அவளை உங்களுடன் சேர்த்து உரசுங்கள், ஒரு பெண்ணுக்கு உடல் உறவின் பின் உடனேயே தூங்கும் துணையை விட மோசமானது எதுவுமில்லை. பேசுங்கள். மிகவும் திருப்தி அடைந்ததைக் கூறுங்கள்.

7வகை உச்சக்கட்ட உணர்வுகளும்

 செக்ஸ் என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. ஆனால், மனிதர்கள் மத்தியில் இது மன அழுத்தம், உறவுகளின் இணைப்பு, ஆரோக்கியம் என பலவற்றை வலுப்படுத்தும், இலகுவாக உணர செய்யும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது.


உடலுறவில் ஆண், பெண் காணும் இன்பங்கள் வேறுப்பட்டே இருக்கும். அதிலும், பெண்கள் உச்சக்கட்ட இன்பம் அடைய தாமதம் ஆகும் என்றும் கூறுவர். அனால், பெண்கள் இந்த இன்பத்தை அடைய 7 வழிகள் இருப்பதாக செக்ஸ் எக்ஸ்பர்ட்கள் கூறுகின்றனர்.


#1

கிளைடோரல்: இந்த வகை இன்பம் பெரும்பாலான பெண்கள் அறிந்தது தான். பெண்ணுறுப்பில் ஒரு பகுதி இது. இது சிறுநீர் வெளிப்படும் துவாரத்திற்கு மேல் அமைதிருக்கும். இந்த இடத்தை தீண்டுவதால் பெண்கள் சில நிமிடங்களில் உச்சக்கட்ட இன்பம் அடைய வாய்ப்புகள் இருக்கின்றன.


#2

ஜி - ஸ்பாட்: இப்படி ஒன்று இருக்கிறதா? இல்லையா? என ஒருபுறம் விவாதங்கள் நடந்துக் கொண்டிருந்தாலும். முப்பது சதவீத பெண்கள் இந்த ஜி-ஸ்பாட் தூண்டுதல் பெற்றுள்ளதாக கூறுகிறார்கள்.


இது பெண்ணுறுப்பில் இருக்கும் உச்சம் தூண்டும் தசை. வெளிப்புற பெண்ணுறுப்பில் இருந்து 2-3 இன்ச் உள்ளே இது இருக்கும்.


#3

எ - ஸ்பாட்: எ - ஸ்பாட் என்பது 4-5 இன்ச் உள்ளே இருக்கும் பகுதி. இது ஜிஸ்பாட்டுக்கு பின்னாடி அமைந்திருக்கும். இது பெண்ணை இரண்டாவது முறையாக இன்பம் பெற உதவும்.


#4

கலவை: கிளைடோரல் மற்றும் ஜி-ஸ்பாட் இரண்டும் கலந்தது தான் இந்த கலவை வகை. இதன் மூலமாக ஒரு பெண்ணை 15 நிமிடங்கள் வரை இன்பத்தை உணர வைக்க முடியுமாம்.


#5

ஸ்குயிரிட் (Squirt): எல்லா பெண்களாலும் இதை எட்ட முடியாது. ஆண்களுக்கு விந்து வெளிப்படுவது போல, பெண்களுக்கு நீர் திரவம் போன்றது வெளிப்படும். இது சிறுநீர் பாதை வழியாக வெளியேறும். இது எல்லா பெண்களுக்கும் வராது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.


#6

கோர்கேஸ்ம் (Coregasm): இது பெண்கள் வயிறு போன்ற பகுதிகளுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது ஏற்படும் உணர்வு. இது வயிறு முதல் பெண்ணுறுப்பு வரை உணர்ச்சியை தூண்டும். இதுவும் எல்லா பெண்கள் மத்தியில் காணப்படுவதில்லை.


#7

மார்பகம்: மார்பக பகுதிகளை தீண்டுவதால் சில பெண்களுக்கு கிளைடோரல் வகை இன்பம் கிடைக்கிறது. இது மார்பக காம்பு பகுதியை தீண்டுவதால் மட்டுமே பெற முடியும் என செக்ஸ் எக்ஸ்பேர்ட்கள் கூறுகிறார்கள்.


குறிப்பு!

இந்த ஏழு வகை உச்சக்கட்ட உணர்வுகளும் எல்லா பெண்கள் மத்தியிலும் ஏற்படும் என கூற முடியாது. அவரவர் உடல்நிலை மற்றும் இயற்கையாகவே ஒருசிலது ஒரு சில பெண்கள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ளுதல் எப்படி

 நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ளுதல்:


இந்த முகநூல் பக்கத்தில் கேட்கப்படும் அதிகப்படியான கேள்விகளில் ஒன்று, "நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ள என்ன செய்ய வேண்டும்?"


வெகு நீண்ட தேடலுக்குப் பிறகு அதற்கான விடையுடன் வந்துள்ளேன். 


பெருவாரியான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை, சீக்கிரம் விந்து வருவதால் திருமணம் செய்யலாமா வேண்டாமா, சீக்கிரம் விந்து வருவது ஆண்மைக்குறைவின் வெளிப்பாடா, என் பல கேள்விகள். இந்தப் பதிவில் அதற்கான விடை உங்களுக்காக.


நீங்கள் மட்டும் இந்த பிரச்சயானால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெருவாரியான ஆண்களில் நீங்களும் ஒருவர். மனைவியுடன் உறவு கொள்ள நேர்ந்த சில மணித்துளிகளில் விந்து வெளியாகி, உடல் சோர்ந்து உறங்கி விடும் ஆண்களும், காம இச்சை மேலே செல்ல ஆரம்பித்த சில நேரத்தில் கணவன் எல்லாத்தையும் முடித்து விட்டு உறங்கி விடுகையில் உச்சம்கட்டம் என்பதோ முழுமையான காம சுகம் என்ன என்பதோ அறியாமல் ஏமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்தும்  மனைவிகளும்  இங்கே மிக அதிகம்.


இதற்கு உடல், பழக்கவழக்கம் மற்றும் மனம் சார்ந்த பல காரணங்கள் உள்ளன. 


99% ஆண்கள் சுய இன்பம் கொள்கின்றனர். ஆனால் எப்படி, எங்கே, எவ்வளவு நேரம்  சுய இன்பம் காண்கின்றனர் என்பது முக்கியமான காரணிகள். பெரும்பாலும், குளியலறையில், படுக்கை அறையில் என. ஆனால் எல்லோரும் பொதுவாக முயற்சிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால், அது சீக்கிரம் விந்தை வெளியேற்றுவது. யாரேனும் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பிலேயே அவர்கள் சீக்கிரம் விந்தை வெளியேற்றி முடித்துவிட முயற்சிக்கிறார்கள். 


இந்தப் பழக்கம் அவர்களுக்கு அப்படியே உடலிலும், மனத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சீக்கிரம் விந்து வெளியேற்றி பழகிவிட்டதால் உடலும் மனமும் அதையே பிரதிபலிக்கிறது. அதாவது சீக்கிரம் விந்து வருத்துதல் தான் சுகம் என்று மனதும், சீக்கிரம் விந்து வெளிற்றியே பழக்கப்பட்டதால் உடலும் அதையே திரும்பவும் செய்கிறது. விளைவு மேலே சொன்ன விந்து முந்துதல் ஒரு பிரச்சினையாய் உருவெடுத்தல். 


இதை சரி செய்ய முதலில் ஆண்கள் செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. அது தான்  சுய மதிப்பீடு.


எப்படி செய்வது அதை? சொல்கிறேன். நீங்கள் துணையுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுகையில், இதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சுய இன்பம் செய்வது போல் மிக வேகமாக அல்லாமல், மெதுவாக. 


உறவு கொள்ளுகையில் உங்கள் ஆண் குறி எப்படி இயங்குகிறது, என்ன செய்கிறது, உச்ச கட்டம் வருகையிலும், விந்து வருகையிலும் நீங்கள் உங்கள் குறியில் என்ன உணருகிறார்கள் என்பன போன்றதே அது. 


விறைத்தலில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன. 1) நீளமாதல் 2) பெரிதாதல் 3) முழு விறைப்பு 4) கடின விறைப்பு (). 


நான்காவது நிலையான கடின விறைப்பு உச்சகட்டம் அல்லது விந்து வருவதற்கு சற்று முன் நிகழும் நிகழ்வாகும். இந்த நிலைகளை ஆண்  மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். 


சரி. இப்போது வழிமுறைகளைப் பாப்போம். 


1) மூச்சின் சக்தி:


வேகமாக தன்னிச்சையாக மூச்சு விடுவதால் நீங்கள் உங்களின் குறியின் மேலே அதிகம் கவனம் செலுத்துவீர்கள். அதனால் அதிகம் தூண்டப்படுவீர்கள். எனவே  உறவு கொள்ளுகையில் உங்கள் மூச்சின் மேல் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தன்னிச்சையான வேகமான மூசுவிடுதலாக அல்லாமல் உங்களால் கட்டுப்படுத்தப்பட்ட மெதுவான மற்றும் ஆழமான மூச்சு விடுதலாக அது அமைய வேண்டும். இந்த மெதுவான மூச்சுவிடுதல் உங்களின் அதிகபட்ச உணர்வுகளை கட்டுப்படுத்தி விந்து வருவதை தாமதப்படுத்தும். 


அதே போல மூச்சை வெளி விடுகையில் சிங்கம் உருமுவதைப் போன்ற லேசான சத்தம் எழுப்பி வாய் வழியாக மூச்சை வெளிவிட வேண்டும். (நீலப்படங்களில் ஆண்கள் இந்த முறையை உபயோகப் படுத்துவதை பார்த்திருப்பீர்கள்). இப்படி மூச்சை வெளியேற்றுவதால், இந்த சத்தம்  உங்களின் விதைப்பையில் ஆரம்பித்து, அடி வயிறு மற்றும் நுரையீரலைக் கடந்து உங்களின் வாய் வழியாக வெளியேறுவதாக நீங்க உணருவீர்கள். இதனால் நிச்சயமாக உங்களின் குறியில் இருந்து கவனம் திசை திருப்பப்படும், அதனால் விந்து வருகிறது என்ற உணர்வை நீங்கள் மறந்துவிடுவீர்கள். 


2)(PC Muscles) தசையை சுருக்கி விரித்தல்:


இதை எப்படி செய்ய வேண்டுமெனில், நீங்கள் சிறுநீர் கழிக்கையில் அதை இடையில் நிறுத்திப் பாருங்கள். அப்படி சிறுநீரை நிறுத்த நீங்கள் எந்த தசையை உபயோகிக்கிறீர்களோ அதை தான் இங்கே செய்யப் போகிறீர்கள். ஒரே வித்தியாசம் சிறுநீர் கழிக்காமல் அந்த தசையை சுருக்கி விரிக்கப் போகிறீர்கள். அதாவது விந்து வருவது போன்ற உணர்வு ஏற்படுகையில் இதை நீங்கள் செய்ய வேண்டும். 


3)விதைப்பையை இழுத்தல்:


விந்து வருவதுபோல் உள்ள சமயத்தில் உங்களின் விதைப்பை மேலே எழும்பி உங்களின் குறியோடு ஒட்டிக்கொள்ளும். அப்போது அதை மெதுவா விதையுடன் சேர்த்து உங்களின் உடலில் இருந்து சற்று  கீழே இழுக்க வேண்டும். இதை உங்க மனைவியே செய்யலாம். ஆனால் நீங்கள் அதை அவரிடம் கூற வேண்டும். இல்லாத பட்சத்தில் அவருக்கு உங்களுக்கு விந்து வருவதை உணரத் தெரியாது. 


4)குறி மொட்டை நசுக்குதல்:


விந்து வரும் உணர்வு வருகையில் உங்களின் குறியை வெளியில் எடுத்து அதன் நுனி மொட்டை நன்றாக நசுக்கி விடுங்கள். அதனால் ரத ஓட்டம் தடை பட்டு உணர்வுகள் சிறுது நேரத்திற்கு மட்டுப்படும். 


5)மிகச்சிறந்த முறை:


இதை ஒரு பயிற்சியாக தினமும் செய்ய வேண்டும். உங்களின் நாக்கை உள்நோக்கி மடித்து மேல் அண்ணத்தைத் தொடுமாறு வைத்து, உங்களின் (PC Muscles) தசையை சுருக்கி விரித்து சுருக்கி விரித்து இந்த பயிற்சியை தினமும் 3 - 5 நிமிடங்கள் செய்ய வேண்டும்  இது மிகச்சிறந்த பலனைக்கொடுக்கும். 


6)நெட்டுதல் முறை:


இந்த முறையில் ஆழமாக குறியை பெண் உறுப்பினுள் செலுத்துதல் மற்றும் மேலோட்டமாக செலுத்துதல் என்ற இரண்டு முறை இதில் பின்பற்றப்பட வேண்டும். அதாவது, மேலோட்டமான முறையில்  மற்றும் ஆழமாக நெட்டுதல் முறையில் குறியை முழுதும் உட்செலுத்தி உறவு கொள்ளுதல்.


அதாவது 9 முறை மேலோட்டமாகவும், 1 முறை ஆழமாகவும் உட்செலுத்த வேண்டும். ஏனென்றால் பெண்ணுறுப்பு முதல் 1.5 - 2.5 அங்குலம் வரை மட்டுமே உணர்ச்சி மிகுந்த பகுதி, ஆழமான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் அவ்வளவாக இல்லை. அதனால் பெண் அதிகம் தூண்டப்படுவாள். அதிகம் இன்பம் அனுபவிப்பாள். அதே சமயம், ஆணுறுப்பு முழுமையாக பெண் உறுப்பினுள் இருந்தால் மட்டுமே, அதிகமாக உணர்ச்சிகள் மேலெழும், சீக்கிரம் விந்து வரும். ஆனால் மிக சிறிய அளவு மட்டுமே இந்த முறையில் உட்செலுதப்படுவதால் நீங்கள் விந்தை வெளியேற்றாமல் நீண்ட நேரம் உறவு கொள்ள முடியும்.


7) அவள் இன்பம் அனுபவிப்பதை ரசியுங்கள்:


பெரும்பாலான ஆண்கள் உறவுகொள்ளுகையில் தங்களின் மனைவி என்ன உணருகிறார், எப்படி உணருகிறாள் என்பதை ரசிக்க மறந்து தாங்கள் இன்பம் துய்ப்பதிலேயே  குறியாய் இருக்கின்றனர். அதனால் தங்களின் குறியின் மேல் கவனம் செலுத்துகின்றனர். விளைவு சீக்கிரம் விந்து வந்து விடுகிறது.  மாறாக உங்கள் குறியை மறந்து அவளை ரசியுங்கள். அவளின் உடல் எவ்வளவு மென்மையாய் இருக்கிறது, சற்றும் ரோமம் இல்லாமல்  பளபளவென்று இருக்கிறது, அவளின் மார்பகங்களை ரசியுங்கள், உறவு கொள்ளுகையில் அவள் முனகுவதை ரசியுங்கள். அதனால் நீங்க உங்கள் குறியின் மீது கவனம் செலுத்த மாட்டீர்கள். நீண்ட நேரம் உறவு கொள்ளவும் முடியும்.

 


கணவன்மார்கள் இதை மனைவியிடமும், மணம் ஆகாத வாலிபர்கள் இதை சுய இன்பம் செய்யுகையிலும் முயற்சித்துப் பாருங்கள். சரியாக சொன்னபடி முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீண்ட உறவில் இன்பம் எய்த முடியும். வெறுமனே 1 அல்லது 2 முறை முயற்சித்து விட்டு இது சரி இல்லை என்று குறை கூறாதீர்கள். தொடர்து முயன்று வெற்றி கிட்டும் வரை செய்யுங்கள். ஒரு முறை வெற்றியை நீங்கள் சுவைத்துவிட்டால், வாழ்நாள் முழுதும் இதைக் கடைபிடித்து இன்பம் துய்ப்பீர்கள். 


முடிந்தவரை தெளிவாகக்கூற முயற்சி செய்துள்ளேன்.