காற்று , உணவு , தண்ணீர் , உறக்கம் , பாலின்பம் . - இவை தான் ஒரு மனித உடலுக்கான அடிப்படைத் தேவைகள் . இவற்றில் ஒன்று இல்லையென்றாலும் உடல் துன்பப் படுவது உறுதி .
அந்த உடற் துன்பம் காரணமாக மன நலமும் கெடுவது உறுதி .
ஆகவே இவற்றைத் தேடிப் பெறுகின்ற அறிவானது , மனிதனின் மரபணுவிலேயே இடம் பிடித்திருக்கிறது .
அந்த அறிவின் படி , எது கிடைக்கவில்லையோ அதைத் தேடி பெற அனைவரும் முயற்சிக்கிறார்கள்
இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல . .
இதை , இந்தியக் கணவன் மனதில் நிறுத்துவது இன்றைய சூழலில் மிகஅவசியம்.-
-----------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
" பாலுறவு அசிங்கமானது . அருவருப்பானது . அற்பத்தனமானது . இன்பத்தை தரக்கூடியது . பாவகரமானது . மிருகத்தனமானது . இனப் பெருக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியது . உடல் நலத்தை பாதிக்கக்கூடியது "-
இது போன்ற கருத்துடையவர் ஒன்று கடைந்தெடுத்த முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது திட்டமிட்டு மனித சமூகத்தை தவறாக வழிநடத்துபவராக இருக்க வேண்டும் .
ஏனெனில் இவர் தன்னுடைய பிறப்பையே அவமதிக்கிறார் . தான் உருவாகக் காரணமாக இருந்த இயற்கைக் சக்தியையே பழித்துரைக்கிறார் .
சற்று விரிவாக பார்ப்போமானால் ,,
பாலுறவு அசிங்கமானது என்ற கருத்து எதனால் உருவாகிறது ? பாலுறவில் ஈடுபடக் கூடிய உறுப்புகள் கழிவுறுப்புக்களாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன . அதனால் தான் பாலுறவு அசிங்கமானது என்கிற கருத்து உருவாகிறது .
ஆனால் இங்கேயுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் , பாலுறவில் ஈடுபடக்கூடிய உறுப்புகள் , கழிவுறுப்புகளாக இருந்தாலும் அதனால் ஏற்படும் இன்பத்தை உணர்வது 'மூளை ' .
ஆகவே , பாலின்பம் என்பது மூளை சார்ந்ததே ஒழிய கழிவுறுப்புகள் சார்ந்தது அல்ல .
மேலும் பாலுறவில் ஈடுபடாத தெரியாதவர்கள் தான் கழிவுறுப்புக்களை மட்டுமே கொண்டு விளையாடக்கூடியவர்கள் . பாலியல் ஞானமுடையவர்களை பொறுத்தவரை , உடல் முழுவதுமே பாலுறுப்பு தான் .
ஆகவே பாலுறவு அசிங்கமானது என்று கூறினால் , மொத்த உடலும் அசிங்கமானது என பொருளாகிறது .
கடவுள் அசிங்கமான எதையும் படைக்கக் கூடியவரல்ல .
மேலும் இந்த உலகிலேயே உயிர் தான் விலை மதிப்பற்றது .அந்த உயிரானது , பாலுறவு மூலமாக தான் உருவாகிறது . உருவாகிக் கொண்டுமிருக்கிறது . உலகம் உள்ளவரை இதை யாராலும் மாற முடியாது.
ஆகவே , விலை மதிப்பற்ற உயிர் உருவாக ஒரு அசிங்கமான செயலையா கடவுள் தேர்ந்தெடுத்திருப்பார் .?
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--ஆணும் சரி , பெண்ணும் சரி , ஆபாசப் படங்களில் காட்டப் படுபவை அனைத்தும் உண்மை என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு . திரைப்படங்களில் காட்டப் படுவதெல்லாம் உண்மையென ஒரு குழந்தை நம்புவதைப் போன்ற நம்பிக்கை இது . இந்த நம்பிக்கை ஆழ்மனதில் பதிவாகிவிடுகிறது .
ஏனெனில் , காமம் சார்ந்த அனைத்தும் நேரிடையாக ஆழ்மனதில் பதிந்து விடக் கூடியவை . அதாவது காமம் ஆழ்மனம் சார்ந்தது . காமம் சார்ந்த எந்தவொரு நிகழ்வையும் யாரும் முயற்சி செய்து நினைவில் வைத்திருக்கத் தேவை இல்லை .
குழந்தையாக இருந்தது முதல் இந்த வினாடி வரை , தான் கண்ட காமம் சார்ந்த ஒரு உண்மை காட்சியையோ அல்லது தனக்கு ஏற்பட்ட காமம் சார்ந்த அனுபவத்தையோ, எந்தவொரு மனிதப் பிறவியாலும் மறக்க முடியாது .
அதாவது காமம் சார்ந்த பிறரது நடவடிக்கைகளை பார்த்திருந்தாலும் சரி, திட்டமிட்டு ஒளிந்திருந்து பார்த்திருந்தாலும் சரி , மனிதனால் தான் கண்ட காட்சியை மறக்க முடியாது .
அதே போல தனக்கு ஏற்பட்ட காமம் சார்ந்த எந்தவொரு அனுபவத்தையும் மனிதனால் மறக்க முடியாது. ஏனெனில் காமம் என்பது நேரிடையாக ஆழ்மனத்திற்குள் இடம் பிடிக்கக் கூடியது . முயற்சி செய்து நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை .
திருமணம் வரை , சுய இன்பத்தில் ஈடுபட்ட அனுபவமெல்லாம் மறந்து போய் விடும் . ஆனால் எதிர் பாலினத்தோடு ஆறுவயதில் விளையாடிய அப்பா அம்மா விளையாட்டு முதல், பாலுறுப்புகளை பொருத்திப் பார்த்தது வரை எந்தவொரு அனுபவமும் மறக்கவே மறக்காது. மரணப் படுக்கையில் கூட நினைவிருக்கும் . இது இருபாலினத்திற்கும் பொருந்தும்.----------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித உடலில் நிகழும் பாலின்பம் ஒரு பேரின்ப அனுபவம் மட்டுமல்ல. உடல் நலத்தையும் மன நலத்தையும் சிறப்புறப் பேணக் கூடிய ஒரு மா மருந்து . மேலும் எவ்விதப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு அரு மருந்து . மூளையை அற்புதமாகச் செயல்படச் செய்கின்ற ஒரு அமிர்தம் . இன்றைய மருத்துவ அறிவியலும் , உளவியலும் பாலின்பத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறது . இந்த மருத்துவத்திற்காக தனியாக பணத்தைச் செலவளிக்கத் தேவையில்லை. வீட்டை விட்டு வெளியில் எங்கும் சென்று தேடத் தேவையுமில்லை . அது தவிர அன்பெனும் கடவுளைத் தம்பதியிரிடையே உருவாக்கி குடும்ப வாழ்க்கையைச் சொர்க்கமாக மாற்றக் கூடிய ஒரு மந்திர சக்தியும் கூட . உடலில் நிகழும் உச்ச கட்ட பாலின்பத்தால் ஏற்படுகின்ற நன்மைகளை பட்டியலிடத் தொடங்கினால் வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்தையும் தான் பட்டியலிட வேண்டும் . இந்த உண்மை இருபாலருக்கும் பொருந்தும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவன் ஒரு பெரிய பளிங்கு மாளிகையைப் பரிசளிக்கிறான். வேறொரு கணவன் அவனுடைய மனைவிக்கு ஒரு காரை பரிசளிக்கிறான். இனியொரு கணவனோ அவனுடைய மனைவிக்கு ஒரு தங்க ஆபரணத்தை பரிசளிக்கிறான். ஒரு ஏழைக் கணவன் அவனுடைய மனைவிக்குப் பாலின்பங்களை மட்டுமே வழங்குகிறான் . முதல் மூன்று மனைவியரும் தங்கள் கணவனுக்கு தலா ஒரு மதிப்பெண் அளித்த போது கடைசிப் பெண் மட்டும் தன் கணவனுக்கு ஐந்து மதிப்பெண்களை அளித்திருந்தாள் . ஏனெனில் பெண்ணின் ஆழ்மனமும் , மூளைநரம்புகளின் வலைப்பின்னலும் பாலியல்ரீதியாகத் தன்னை திருப்திபடுத்தக்கூடிய ஆணின் மார்பில் சரணடைந்து வாழும் படியாகத் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன .----------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
பசி , உறக்கம், காமம் .-இம்மூன்று உணர்வுகள் தான் ஒவ்வொரு நபரையும் வழி நடத்தக் கூடியவை. வாழ்க்கையை வடிவமைக்கக் கூடியவை. எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியவை . என்ன இது ? அறிவு தானே ஒரு நபரை வழி நடத்தக் கூடியது . வாழ்க்கையை வடிவமைக்கக் கூடியது . எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது , தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடியது . என்கிற கேள்வி சிலருக்கு எழலாம் . அது சரி தான். அறிவு தான் மேற்கண்ட அனைத்தையும் செய்கிறது . அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த அறிவையே மேற்கண்ட மூன்று உணர்வுகள் தான் வழிநடத்திக் கொண்டிருக்கின்றன . அறிவு என்பது பசி , உறக்கம் , காமம் ஆகிய உணர்வுகளின் அடியாள் . இந்த மூன்று உணர்வுகளின் கொத்தடிமை தான் மனிதனின் அறிவு.
பசி , உறக்கம், காமம் .-இம்மூன்று உணர்வுகள் தான் ஒவ்வொரு நபரையும் வழி நடத்தக் கூடியவை. வாழ்க்கையை வடிவமைக்கக் கூடியவை. எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியவை .
என்ன இது ? அறிவு தானே ஒரு நபரை வழி நடத்தக் கூடியது . வாழ்க்கையை வடிவமைக்கக் கூடியது . எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது , தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடியது . என்கிற கேள்வி சிலருக்கு எழலாம் . அது சரி தான்.
அறிவு தான் மேற்கண்ட அனைத்தையும் செய்கிறது . அதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் அந்த அறிவையே மேற்கண்ட மூன்று உணர்வுகள் தான் வழிநடத்திக் கொண்டிருக்கின்றன .
அறிவு என்பது பசி , உறக்கம் , காமம் ஆகிய உணர்வுகளின் அடியாள் . இந்த மூன்று உணர்வுகளின்
கொத்தடிமை தான் மனிதனின் அறிவு.
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
சற்று நிற்க. தன்னை நம்பி கரம் பிடித்த பெண்ணை போகப் பொருளாக பயன்படுத்தாமல் ,உணர்வுகளும், உணர்ச்சிகளும் கொண்ட உயிரினமாக நடத்த விரும்பும் ஆண் ,பள்ளியறை விளையாட்டுக்களின் போது காதலனாகத் தான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர , மறந்தும் கணவனாக நடந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் , காதலனிடம் பெண்ணுக்கு அச்சமிருக்காது. ஆனால் கணவனிடம் கடுகளவாவது அச்சம் கொள்வாள். அச்சமும் ஆணின் பாலின்பமும் பாலின்பமும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் அச்சமும் பெண்ணின் பாலின்பமும் பரம விரோதிகள். அதாவது அச்ச உணர்ச்சி தோன்றும் போது ஆணின் இன்பம் அதிவேகமாக நிகழ்ந்து விடும். ஆனால் பெண்ணின் இன்பம் நழுவிப் போய் விடும். மேலும் பெண் மனதில் அச்ச உணர்ச்சி இருக்கும் வரை ,உச்சகட்ட இன்பம் நிகழவே நிகழாது...
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித இனத்திற்கு மட்டுமே இயற்கையாய் வழங்கப்பட்ட சிறப்புக்கொடை பாலின்பம். குட்டிபோட்டு பாலூட்டி வளர்க்கும் விலங்குகள் அனைத்தும் இனவிருத்திக்காக மட்டுமே இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன . மனித இனம் மட்டுமே இன்பத்திற்காகவும் பாலுறவில் ஈடுபடுகிறது அதனால் எந்தவொரு விலங்கினத்தையும் விடப் பலமடங்கு கூடுதலாக பாலுறவில் ஈடுபடுகிறது. அவ்வாறு பாலின்பத்தில் ஈடுபட்டபோதெல்லாம் அறிவை வளர்க்கும் வேதிகள் மனித மூளையில் சுரக்கின்றன. அதனால் மனித இனத்தின் அறிவு வளர்ந்து கொண்டேயிருக்கிறது .அறிவு வளர்ச்சி காரணமாக தன்னையொத்த விலங்கினங்களை விட புத்திசாலித்தனமான விலங்கினமாக மனித இனம் உருவாகி, இறுதியில் உயிரினங்களின் நிரந்தரமான ஆட்சியாளனாக உயர்ந்து நிற்கிறது மிருகங்களோடு மிருகமாக வாழ்ந்து கொண்டிருந்த மனித இனத்தை மிருகங்களின் தலைவனாக உணர்த்தியது மூளை . அந்த மூளையை அவ்வாறு இயங்க வைத்தது இயற்கையால் வழங்கப்பட்ட பாலின்பம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
சக்தி மையங்கள் என்பவை உடலின் பல பகுதிகளில் உள்ள சக்கரங்கள். நவீனமாகச் சொன்னால் சுரப்பிகள். இவை தான் உடலின் ஒவ்வொரு பகுதியை ஆளக்கூடிய, பராமரிக்கக் கூடிய சிற்றரசர்கள் .
உச்சந் தலையிலிருந்து பாலுறுப்பு வரை ஏழு பேர் இருக்கிறார்கள். இந்த ஏழு சக்கரங்களும் சிறப்பாகச் சுழன்றால் தான் , இவற்றைச் சுற்றியுள்ள உடற்ப் பகுதி நலமாக இருக்கும். இவற்றில் சுரக்கும் வேதிகளே உடல் என்கிற இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருப்பவை. இதே வேதிகளே மனநலத்தையும் பேணக் கூடியவை .
உதாரணமாக , உச்ச கட்டம் இன்பம் நிகழும் போது சுரக்கும் ஒரு வேதி அந்த இன்பத்தை நிகழ்த்திய ஆணின் மீது கண் மூடித்தனமான அன்பை உருவாக்குகிறது . இனியொரு வேதி நுண்ணறிவை உருவாக்குகிறது. மற்றோரு வேதி மனதை சாந்தப் படுத்துகிறது . வேறொரு வேதி ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்கிறது .
புனிதசக்கரம் என்றழைக்கப்படுகின்ற சுவாதிஸ்தான சக்கரம் தான் பாலியல் சுரப்பியை இயக்கிக் கொண்டிருக்கிறது. பாலியல்சுரப்பி தான் ஆத்திரம், கோபம் , வருத்தம், கவலை போன்ற உணர்ச்சிகளை உருவாக்கக் கூடிய வேதிகளை சுரக்கிறது. அது அடிவயிற்றில் அமைந்துள்ளது . உணர்ச்சிகரமாகச் சண்டையிடச் செய்வதும் கூட இதே சுரப்பியே .
அதாவது, மனைவியை எந்த அளவிற்குப் போகப் பொருளாகக் கணவன் நடத்துகிறானோ , அந்த அளவிற்கு கோபத்தை உருவாக்கும் வேதியை இந்த பாலியல்சுரப்பி சுரந்து விடும் . பெண்ணுக்கே இது தெரியாது. தெரிந்தாலும் சுரக்காமல் தடுக்க முடியாது. அதனால் சுரந்துவிட அந்த வேதியின் வினையால் , கணவனுடன் வம்புச்சண்டை செய்து கொண்டிருப்பாள். ஆகவே இராட்சசியாக , பயங்கரமான பிடாரியாக இருக்கிற ஒவ்வொரு பெண்ணும் பரிதாபத்திற்குரியவள் . அனுதாபத்திற்குரியவள் . ஏனென்றால் இவையனைத்திற்கும் மூலகாரணமும் , முதற்காரணமும் கணவனே ..
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
தன் முன்னாள் நீட்டப் படும் பிச்சைப் பாத்திரத்தில் ஒரு நபர் எதைப் போடுகிறார் என்பதற்குப் பின்னால் கூட அவருடைய காமம் மறைந்திருக்கிறது .
தணிக்கப் பட்ட காமம் , கருணையோடு அணுக சொல்லும். இயன்றதை போட வைக்கும்.
அனால், தணிக்கப் படாத காமமோ சீறி மட்டுமே விழச் செய்யும் .
அதே போல , தன்னுடைய அதிகாரத்தை ஒரு நபர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதன் பின்னால் அவருடைய காமத்தின் நிலைப்பாடு மறைந்திருக்கிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆணை இயக்க ஒரு பெண் தேவை . பெண் வழங்குகின்ற பாலின்பம் தான் ஆணுக்கான இயக்க விசை. இது இயற்கை விதி. கோடியில் ஒரு ஆண் இதில் விதிவிலக்கு . தன்னை இன்புறுத்தி இயக்கிக் கொண்டிருக்கும் பெண்ணை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே ஆணும் விரும்புகிறான் . தன்னுடைய உள்ளங்கவர்ந்த காதலியை பிரமிக்கச் செய்யவே, மலைப்படையச் செய்யவே ஒவ்வொரு ஆணும் விரும்புகிறான் . தன்னை பெரிய வீரனென்றும், தீரனென்றும் திறமைசாலியென்றும் காட்டி கொள்வதோடு அதை நிரூபிக்கவும் விரும்புகிறான். இது தான் ஒரு ஆணை செயல்பட வைக்கிற உந்துவிசை . இது தவிர ஒரு ஆணை உந்தித் தள்ளும் சக்தி இந்த உலகில் வேறெதுவும் இல்லவே இல்லை . பாலின்பத்தை மனைவிக்கு வழங்கி மலைக்கச் செய்ய முடியாத போது தான் புறம் சார்ந்த வேட்டைப் பொருட்களைக் கொடுத்தாவது தன்னுடைய உள்ளங்கவர்ந்தவளை பிரமிக்க வைக்க முயற்சி செய்கிறான். அந்த நெருக்கடிக்கு ஆளாகும் போது தான் ஆண் இலஞ்சப் பணத்திற்காக அடுத்தவனிடம் காய் நீட்டுகிறான் . இது தன்னுணர்வற்ற நிலையில் நடைபெறுகிறது . எனினும் இலஞ்சம் வாங்குபவன் தோற்றுப் போவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனெனில் பாலின்பத்திற்கு மாற்றுப் பொருளாக விளங்கும் திறன் பணத்திற்க்கோ , பொருட்களுக்கோ இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
1) வயிற்று வலி , 2) அமாவாசை ,
3). குழந்தை விழித்துக்கொண்டுள்ளது ,
4.) தலைவலி , 5). வெள்ளிக்கிழமை ,
6). உடல் வலி , 7) மூடு இல்லை ,
8) தூக்கம் வருகிறது ,
9) என் அம்மா வந்திருக்கிறார் ,
10) கொசுத்தொல்லை ,
11) நாளை அதிகமாக வேலை இருக்கிறது ,
12) குழந்தைகள் வளர்ந்துட்டாங்க ,
13) இன்று என் பாட்டியின் நினைவுநாள் ,
14.) உங்கள் உடம்பு கெட்டு போய்விடும் ,
15) இன்று வேலை அதிகம் ,
16) ஓய்வு தேவை ,
17) வயதாகி விட்டது . போதும் ,
18) போரடிக்கிறது ,
19) உறவினர்கள் வந்துள்ளனர் ,
20) கரு உருவாகி விடும் ,
21). சிகரெட் வாசம் ,
22) உன் அம்மா பேச்சை கேட்டுக் கொண்டு ஏன் திட்டினாய் . நான் தர மாட்டேன் ,
23). நாளை மாத வீடாய் துவங்க போகிறது , 24),25),25),26),27) மாத வீடாய் என ஐந்து நாட்கள் .
28). இன்னைக்கும் டயர்டா இருக்கு , 29)இதற்கு மட்டும் நான்வேண்டுமாக்கும் ,
30) இன்று பண்டிகை தினம் ,
31) வேண்டாம். கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ..
ஒரு மாதத்தில் இத்தனை விதமான காரணங்களையும் , பகிர்ந்து கொள்ள முடியாத இன்னபிற காரணங்களைக் கூறியும், தன் மனைவி பாலுறவை நிராகரிப்பதாக சில கணவர்கள் புலம்புகிறார்கள் . இதில் உண்மை இல்லாமலில்லை .
ஆனால் அதை விட , கணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பேருண்மை ஒன்று ..,
மனைவியின் உறக்கத்தை கெடுத்து , அடங்கிக் கிடந்த அவளுடைய விரக தாபத்தை தூண்டி விட்டு விட்டு , அதை தணித்து அவளை உறங்க வைக்காமலே , போகப்பொருளாக பயன்படுத்திய பின் , அவளுக்கு அருகில் படுத்து, குறட்டை விட்டு ஆனந்தமாக உறங்கத் தொடங்கும் பாலியல் அறிவே இல்லாத ஆணிடமிருந்து, ஒரு பெண் தன்னை தற்காத்துக் கொள்ள இத்தகைய காரணங்களைக் கூறி தப்பிக்க வேண்டியிருக்கிறது .
என்னை போகப் பொருளாகப் பயன்படுத்தும் இத்தகைய மோசமான பாலுறவைக் காட்டிலும் , பாலுறவே இல்லாமல் வாழ்வதையே என் உடலும், மனமும் விரும்புகிறது .வேறென்ன செய்வேன், என்கிறாள் பெண் .
மேலும், தன்னை போகப்பொருளாக படுத்துவதிலிருந்து தற்காத்துக் கொள்ள, என் கணவனின் தாய் எதை செய்தாளோ , கணவனின் சகோதரிகள் எதை செய்கிறார்களோ அதையே நானும் செய்கிறேன் என்கிறாள் .
நியாயம் தானே ..
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
#ஒரு_காதல்_கணவர்_கூறுகிறார் ..
என் திருமணம் காதல் திருமணம் . ஓடி போய்த் திருமணம் செய்து கொண்ட காதல் எங்கள் காதல் . திருமணமாகி இருபதாண்டுகள் ஆகிறது . மனைவி இல்லத்தரசி . இரண்டு குழந்தைகள் உள்ளனர் . கடந்த இருபதாண்டுகளில் மனைவியில் பெயரில் வீடு கட்டியிருக்கிறேன் . நகைகள் , பட்டுச் சேலைகள் என பத்து லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவழித்திருக்கிறேன் .
என் தரப்பு உறவுகள் விழாக் காலங்களிலும் , மனைவியின் தரப்பு உறவுகள் அடிக்கடியும் வீட்டிற்கு வந்து போகும் சூழல் இருக்கிறது . சிறப்பாகக் கல்வி பயிலும் வாய்ப்பை குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன் .
எனினும் , நான் தான் என் மனைவியை மயக்கிக் காதலித்து திருமணம் வரை கொண்டு வந்து அவளை ஏமாற்றி விட்டதாக கூறுகிறாள்.
காதலித்தவளைக் கை விடுவது தான் ஏமாற்றும் செயல் எனக் கருதப்படும் சூழலில் திருமணம் செய்து இருபதாண்டுகளாகக் கூடி வாழ்ந்து கொண்டிருப்பதை ஒரு ஏமாற்றுச் செயல் என்று என் மனைவி கூறுவதைக் கேட்பது மிகவும் துயரமளிப்பதாக உள்ளது . உயிர் வாழும் விருப்பத்தை , கொஞ்சம் கொஞ்சமாக நான் இழந்து கொண்டிருக்கிறேன் .
இனியொரு_பணக்காரக்_கணவர்_கூறுகிறார் ...
நான் ஒரு தொழிலதிபர் . என் மனைவி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். மூவாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு என் நிறுவனத்தில் வேலை செய்தவள் . காதல் திருமணத்தின் அவள் உடுத்தியிருந்த ஆடைகள் மட்டுமே அவள் கொண்டு வந்த ஒரே சீதனம் .
அதன் பின் நான் தான் அவளுக்குரிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்து பராமரிக்கிறேன் . அவளது பஸ் பயணத்தை கார் பயணமாக மாற்றியிருக்கிறேன் . உலகத்தரம் வாய்ந்த பள்ளியில் குழந்தை படித்துக் கொண்டிருக்கிறான் .
கூலி வேலைக்கு பொய் கொண்டிருந்த அவளுடைய பெற்றோர் , உடன் பிறந்தவர்களுக்கு கூட தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து , பொருளாதார ரீதியாக உயர்த்தி விட்டிருக்கிறேன் .
எனினும் தன்னுடைய திருமண விஷயத்தில் தவறாக முடிவெடுத்து விட்டதாக, என் மனைவி என்னிடமே கூறுகிறாள் . என் மனம் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.
என்ன செய்து என்ன பயன். ? நிம்மதியே இல்லை . சாமியாராக போய் விடலாமா என்ற சிந்தனை அடிக்கடி வருகிறது ... என்று புலம்புகிறார்.
சரி. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமொன்று உண்டு. .
குடும்பத்திற்குள்ளாகட்டும், வெளியிலாகட்டும் தன்னால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மனைவியை அல்லது பிறரை பலிகடா ஆக்குவதில் பெண்ணை விட ஆண்கள் எப்போதும் கை தேர்ந்தவர்களே
#பழமொழி
" திருமணமான முதல் இருபதாண்டுகளில் கணவனால் மனைவிக்கு எவையெல்லாம் வழங்கப்படுகிறதோ , அவையெல்லாம் இம்மியளவு கூட பிசகாமல் கூட்டு வட்டியோடு அடுத்த இருபதாண்டுகளில் மனைவியால் கணவனுக்கு திருப்பி வழங்கப்படும் ".
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
#ஆயிரத்திற்கும்_மேற்பட்ட_பெண்களிடம்_ஆய்வுக்காக_கேட்கப்பட்ட_கேள்வியும்_பதிலும் ...
அடுத்த பிறவியிலும் பெண்ணாக , இப்பிறவியை காட்டிலும் மிக அழகானவளாக , மிகவும் செல்வச் செழிப்போடு , இதே கணவனுடன் வாழும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு வழங்கினால் ஏற்று கொள்வீர்களா ?
இந்த வாய்ப்பை , 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கையெடுத்து கும்பிட்டு முற்றிலும் நிராகரிக்கிறார்கள் .
ஆனால் நிராகரிப்பதற்கு அவர்கள் கூறும் காரணத்தில் வேண்டுமானால் உண்மையில்லாமல் இருக்கலாம் .
#குறிப்பு:
எந்த ஆணும் இந்த ஆய்வினை மேற்கொண்டு உண்மையை உணரலாம் .
ஆனால் இந்த ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரே நிபந்தனை .
இந்த கேள்வியை ஆண் , தன்னுடைய சகோதரிகளிடம். தோழிகளிடம் மட்டுமே கேட்க வேண்டும் .
தன் மனைவியிடம் இந்த கேள்விக்கான பதிலை கேட்டால் நேரடியாக பதில் சொல்ல மாட்டார் . அல்லது பொய் சொல்லுவார் .
ஏனெனில் , இதே கணவனுடன் இந்தபிறவி முழுவதும் வாழ்ந்தாக வேண்டுமே .. என்ன செய்வது ?
ஆனால் ஒன்று மட்டும் உறுதி . பேருண்மைகள் எப்போதும் கசப்பாகவே இருக்கும் .
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
நானெல்லாம் ஓய்வே இல்லாமல் அரைமணி நேரம் இயங்கத் தெரிந்தவனாக்கும் .
அரைமணி நேரம் கூட இயங்காமல், எனக்கெல்லாம் உயிர்நீர் வெளியேறாது .
என்னிடம் சிக்கும் பெண் , அதன் பின் ஆறு மாதங்களுக்கு பாலின்பத்தைப் பற்றி எண்ணிக்கூட பார்க்க முடியாது .
நான் ஒரு பெண்ணை தொட்டு விட்டேனென்றால் , அதன் பின் அவளால் தன் மரணம் வரையிலும் என்னை மறக்கவே முடியாது .
இவ்வாறும் , இன்ன பிறவாகவும் உளறிக் கொட்டாத ஆண்களைப் பார்ப்பதே அரிதாக உள்ளது .எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனச் சொல்வதைப் போன்ற வெள்ளைப் பொய்கள் இவை .
ஆண்களைப் பற்றிய மிகப்பெரிய ரகசியம் என்னவென்றால் , பெண்ணுக்குரிய இன்பங்களை வழங்கத் தனக்கு தெரியாது என்பதை எந்த ஆணும் ஒப்புக் கொள்வதில்லை .
ஒவ்வொரு ஆணும் தன் மனைவிக்குரிய இன்பங்களை வழங்குகிற கல்வியில் டாக்டர் பட்டத்தை வாங்கியிருப்பவர்களைப் போலவே தன்னைக் காட்சிப் படுத்திக் கொள்கிறான் .
ஏனெனில் அவ்வப்போது நிகழ்ந்து விடுகின்ற துரித ஸ்கலித ரகளைகளைப் பற்றிப் பிறரோடு பகிர்ந்து கொள்வதையும் , பெண்ணின் கபடத்தனமான முக்கல் , முனகல்களைக் கேட்ட மாத்திரத்தில் தன்னுடைய உயிர்நீர் வெளியேறி விடுகின்ற பலவீத்தைப் பற்றி வெளியில் கூறி நிவாரணம் தேடு வதையும் , பெண்ணுக்குரிய இன்பங்களை வழங்க தனக்கு தெரியாது என்பதை ஒப்புக் கொள்வதையும் , பெண்ணின் பால் மண்டல உடற்கூறு பற்றித் தனக்குத் தெரியாது என்று ஒப்புக் கொள்வதையும் , தன்னுடைய ஆண்மையோடு தொடர்பு படுத்திக் கொள்கிறான்
.
கடைந்தெடுத்த முட்டாள் கூட , பாலியல் பற்றித் தனக்கு தெரியாது என்று சொன்னதே இல்லை . அதன் காரணமாக தொடர்ந்து பாலியல் மூடனாகவே அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் .
மேலும் தன்னை நம்பிக் கரம்பிடித்த மனைவியை ஒரு போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் அதனால் , அவனுக்குக் கழுத்தை நீட்டிய பெண் மனோரீதியாக வதைப் பட்டுக் கொண்டிருப்பதோடு , அவனையும் தவறாமல் வதைத்துக் கொண்டிருக்கிறாள் .
#குறிப்பு : #ஆண்களை குறை சொல்வது பதிவின் நோக்கமல்ல . ஆண் , தன்னை கரம் பிடித்த பெண்ணுக்குரிய இயற்கை தேவையான பாலின்பத்தை முழுமையான வழங்கி , குடும்பவாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் தழைக்க வேண்டுமானால், ஆண்கள் இதுவரை காமம் குறித்து இதுவரை ஊட்டப்பட்ட கருத்துக்களை அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு , கூச்சத்தை , தயக்கத்தை தவிர்த்து பாலியல் அறிவை தேடிப் பெற முயல வேண்டும் என்பதே பிரதான நோக்கம் .
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
பாலுறவு பாவகரமானது என்று யாரேனும் ஒரு ஞானி கூறினால் அதைக் கடுகளவும் நம்பாதீர்கள் . அந்த மனிதர் ஞானமடையாதவர் என்பதற்கு இது தான் அடையாளம் .
ஏனெனில் , பிரபஞ்சம் அனைத்தும் கடவுளின் அம்சம் . முழுமையானது . இதில் நல்லவை என்றும் தீயவையென்றும் இரண்டு விஷயங்கள் இல்லை . மனதின் இருமை நிலையே , இருமை இயல்பே ஆன்மீக அறியாமை . அனைத்தும் ஒன்றே என்று உணர்வது தான் ஞானம் .
இருமை நிலையிலிருந்து ஒருமை நிலையை அடைவது தான் ஞானம் . பாவகரமானவை என்றும் புண்ணியகரமானவை என்றும் பிரித்துப் பார்ப்பதே ஆன்மீக நிலைக்கு எதிரானது . அனைத்தும் கடவுளின் படைப்பே . ஆகவே கடவுளின் படைப்பில் எந்தத் தவறும் இருக்க முடியாது .என்பதை உணர்வதே ஆன்மீகப் பயணத்தின் அரிச்சுவடி .
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
" ஊடிய வரை உணராமை வாடிய வள்ளி முதலறிந் தற்று " என்பது ஒரு குறள் .
அதாவது பெண்ணுடன் (மனைவியுடன் ) சண்டையிட்ட பின் , அன்றைய தினமே புணர்ந்து மகிழ்விக்கத் தவறுவது , வாடிய பயிரின் அடி மட்டத்தில் வெட்டுவதைப் போன்றது என்று வள்ளுவர் கூறுகிறார் .
அது எப்படியெனில், விடிய விடிய அந்தச் சண்டையைப் பற்றியே மனம் எண்ணிக் கொண்டிருக்கும் . அதனால் கோபம் உருவாகும் . அந்த கோபம் ஆழ்மனதில் வெறுப்பாய் பதியும் . அந்த வெறுப்பு காரணமாக , அன்பு சாகும் .
அதனால், தம்பதியரிடையே பிணக்குகள் அதிகரிக்கும் . வாழ்க்கை நரகமாகும் என்பதே குறளின் பொருள்
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு துணிச்சலான பெண் கூறுகிறார் ...
" கணவனை என்னிடம் நெருங்க விடவே அஞ்சுகிறேன் . ஏனெனில் சிறிது நேரம் சரச சல்லாப விளையாட்டுகளில் ஈடுபடலாம் என்றெண்ணி நெருங்க விட்டால் கூட , அதை உடனடி உடலுறவாக மாற்றவே கணவன் முயற்சிக்கிறான் .
நேரடியாகவே பாலுறவில் ஈடுபடுவதன் மூலம் எனக்குரிய இன்பங்கள் எதுவுமே நிகழாது என்பது எனக்குத் தெரியும் . இயந்திரத்தனமான பாலுறவால் என் மனநிலை மாசடைவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் . மேற்கண்ட தகவலை சொன்னாலும் என் கணவனுக்கு புரிவதில்லை . அதனால் அவனுக்கு பைத்தியம் பிடிக்காத அளவுக்கு மட்டுமே அண்ட விடுகிறேன் ".
பாலுறவு என்பது உடல் மூலமாக அன்பை பரிமாறிக் கொள்ளும் செயல் . ஆனால் , அன்பேயில்லாத இயந்திரத்தனமான பாலுறவு தான், பாலுறவே இல்லாத வாழ்க்கையை நோக்கி தள்ளுகிறது .
எந்த அளவிற்கு போகப் பொருளாக மனைவி பயன்படுத்தப்படுகிறாளோ , அதற்கேற்ப அவள் பாலுறவின் மீது வெறுப்படைகிறாள் . மோசமான பாலுறவைக் காட்டிலும் , பாலுறவே இல்லாமல் வாழ்வதையே ஒரு பெண்ணின் உடலும் மனமும் விரும்புகிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
B------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆணின் உடலில் நிகழும் உச்சகட்ட இன்பத்தையும் , விந்து வெளியேற்றத்தையும் ஒன்றாகவே பெரும்பான்மையான ஆண்கள் கருதுகிறார்கள் . விந்தை வெளியேற்றுவது தான் பாலுறவு . பெண்ணுறுப்பு என்பது விந்தை கொட்டுவதற்கான ஒரு குப்பைக் கூடை. ஆணின் விந்து அங்கு கொட்டப்பட்டவுடனே , பெண்ணுக்கும் இன்பம் நிகழ்ந்து விட்டதாக பொருள் . இது தான் பெரும்பாலான ஆண்களின் பாலியல் அறிவு .
பெண்ணுறுப்பின் வெளிப்புற வடிவத்தை தவிர , வேறு எதுவுமே தெரியாத நிலையில் தான் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள் . பெண்ணுறுப்பில் உள்ள , புணர் புழை என்பது வேறு . சிறுநீர்ப் புழை என்பது வேறு . பாலின்பத்தை அனுபவிப்பதற்கு மட்டுமே பெண்ணின் உடலில் பிரத்யேகமாக படைக்கப்பட்ட ‘பாலுறுப்பு “ என்பது வேறு . இம்மூன்றும் வெவ்வேறு உறுப்புகள் என்பதை கூட அறியாமலே 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மனைவியுடன் பாலுறவில் ஈடுபடுகிறார்கள் . பாலின்பத்தை அனுபவிப்பதற்காக மட்டுமே பெண்ணின் உடலில் பிரத்யேகமாக படைக்கப்பட்டது பாலுறுப்பு . இன்பத் துய்ப்பிற்காகவே படைக்கப்பட்ட இத்தகைய பாலுறுப்பு கணவனால் தீண்டப்படாமலேயே 90 சதவீத பெண்களின் உடல் சவக்குழிக்குள் செல்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை . ஏனெனில் பெண்ணின் பாலுறுப்பு கணவனால் தீண்டப் படாதவரை எத்தகைய பெண்ணும் உச்சகட்ட பாலின்பத்தை அடைய வே முடியாது .
சில ஆண்கள் தங்கள் மனைவிக்குரிய இன்பங்களை வழங்க மனதார விரும்புகிறார்கள் . ஆனால் அதை வழங்குவதற்குரிய வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள் . அதைப் பற்றி அடுத்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வெட்கப்படுகிறார்கள் . பெண்ணுக்குரிய பாலின்பங்கள் எவை ? அவற்றை வழங்குவது எப்படி ? என்பதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது தங்களுடைய ஆண்மைக்கு இழுக்கு என கருதுகிறார்கள் . மனைவியை ஒரு போகப் பொருளாகக் கணவன் பயன்படுத்திக் கொண்டிருப்பதற்கான இரண்டாவது காரணம் இந்த வெட்கம் .
மூன்றாவது காரணம் ஆணாதிக்க சிந்தனை . ஆணாக பிறந்து விட்ட காரணத்தாலேயே, பெண்ணைப் பற்றி அனைத்தும் தெரியும் என்று பல ஆண்கள் தங்களை கருதிக் கொண்டிருக்கிறார்கள் .
பெண்ணுக்கு எட்டு வகை தாம்பத்ய இன்பங்கள் உண்டு . அவற்றில் சிறந்தது அமிர்த இன்பம் . இது நிகழும் போது தான் , ஐம்பது முதல் இருநூறு மில்லி லிட்டர் வரை பெண்ணின் விந்தணு வெளியேறும் . அப்போது தான் பெண் மனதின் அடியாழ நிராசைகள் அனைத்தும் கொல்லப்படும் . காமம் தணிக்கப் படும் . அதோடு உடல் சார்ந்த , மனம் சார்ந்த , அறுபது வகையான நன்மைகளையும் பெண் பெறுவாள் . இதை ஒவ்வொரு கணவனும் உணர்ந்து , மனைவிக்குரிய பாலின்பத்தை வழங்குவதன் மூலமே இருவரும் இன்புற்று இல்லற வாழ்வு சிறக்கும் . குடும்ப வாழ்வு தழைக்கும் .
பெண்களைப் பற்றிய அடிப்படைப் பார்வையை மாற்றி, உள்ளதை உள்ளபடி பார்க்கும் திறனை இன்றைய இந்திய ஆண்கள் பெற்றாக வேண்டும் . மனைவியை போகப் பொருளாக பயன்படுத்தும் போக்கு முற்றிலுமாக ஒழித்துக் கட்டப் படவேண்டும் .இல்லாவிட்டால், குடும்ப அமைப்பு முறை தகர்க்கப்பட்டு ஆபத்தான விளைவுகளை உருவாக்கி விடும்.. அதனால் , சமூகத்தின் சமநிலை தகர்க்கப் பட்டு விடும் . பாலின்பப் பஞ்சமே குடும்பத்தில் நிகழும் அனைத்து சச்சரவுகளுக்குமான அடித்தளம் , .பாலின்ப பஞ்சமே கொலைகளின் மூலம். பாலின்ப பஞ்சமே சமூக குற்றவாளிகளை உருவாக்கும் வார்ப்புக் கூடம் . பாலின்பப் பஞ்சமே , பெண்ணின் மீதான தாக்குதலுக்கான பிறப்பிடம் .
பணம் , பணத்தால் பெண்ணுக்காக வாங்கப்படும் எவையுமே பெண்ணின் மனதை மகிழ்விக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் . ஆனால் பணத்தை பாலின்பத்துக்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்த முடியாது . பணம் அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரக் கோல் அல்ல . இதை இந்திய கணவன் உணரவேண்டிய மிக முக்கியமான ஒன்று.
ஆகவே , காமம் குறித்து இதுவரை ஊட்டப் பட்ட கருத்துக்கள் அனைத்தையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு இந்நூலை படிக்க துவங்கினால், ஒவ்வொரு கணவனையும் அசாதாரணமான காதலனாக , உண்மையான , சுயநலமற்ற, தவறாமல் மனைவிக்குரிய இன்பத்தை அளிக்கின்ற வெற்றிகரமான கணவனாக மாற்றியமைக்கும் . மனைவியின் உடல் நலத்தையும் , மன நலத்தையும் சிறப்பாக பேணக்கூடிய மருத்துவனாக மாற்றும் .அடைத்துக் கிடக்கின்ற அன்பின் ஊற்றுக்கள் அனைத்தையும் தூர் வாரி, பெண்ணின் மென்மையை உச்சபட்ச அளவிற்கு மிளிர வைக்கும்
சொர்க்கமும் நரகமும் எங்கோ வானுலகில் இருப்பவை அல்ல . அவை உருவகங்கள் . அகத்தால் உருவாக்கப்படுபவை . அந்த அடிப்படையில் ஒவ்வொருவருடைய இல்லற வாழ்வையும் சொர்க்கமாக மாற்றிக் காட்ட இந்த நூலால் நிச்சயம் முடியும் . அந்த வல்லமை இந்த நூலுக்கு உண்டு .
ஆங்கில மொழி புலமையற்ற, தமிழ் மொழியை மட்டுமே கற்கும் வாய்ப்பைப் பெற்ற , சாமான்யர்களுக்கு தாம்பத்யம் குறித்த ஆழமான அறிவைப் பெறும் வாய்ப்பு இல்லை என்ற பெரும் குறையைப் போக்கும் வகையில் , தன் ஞானத்தால் தமிழ் சமுகத்திற்கு அற்புத புதையலை கொடையாக வழங்கியிருக்கிறார் எங்கள் ஐயா .திரு. போதி பிரவேஷ் அவர்கள். தமிழ் சமூகத்திற்கு , எங்கள் ஐயா .திரு. போதி பிரவேஷ் அவர்கள் வழங்கியுள்ள கொடை இந் நூல் . . இந்நூலை வாங்க ஆணுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல . நூலின் தலைப்பை பார்த்தவுடன் ஏற்படும் , தயக்கம் , வெட்கம், இதையெல்லாம் படிச்சு தான் தெரிஞ்சுக்கணுமா , படிப்பதை யாராவது பார்த்துட்டா.. , என்ற மனோபாவங்கள் தான் ஆண்கள் பாலியல் குறித்த அறிவை பெறுவதற்கு தடையாக இருக்கும் எதிரிகள் . இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு தொடர்பு கொண்டு வாங்கி , வாசித்துணர்ந்து, இல்லற வாழ்வை இன்புற வாழுங்கள் . நன்றி
------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகின்ற பாலுறவால் உருவாகின்ற பாலின்பம் தான் குடும்ப வாழ்க்கை என்கிற வாகனம் சீராக இயங்குவதற்கான எரிபொருள் .
தம்பதியரிடையே நிலவும் சரச சல்லாபங்கள்
( கொஞ்சல்களும், குலாவல்களும் ) தான் அந்த வாகனத்தின் தேய்மானப் பகுதிகளை பாதுகாக்கின்ற உயவுப் பொருள்கள்.
ஒரு தார வாழ்க்கை என்பது தான் அந்த வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கருவி . இவற்றில் எந்தவொன்று இல்லையென்றாலும் குடும்ப வாழ்க்கை என்கிற வாகனம் பழுதடைவது உறுதி .
இந்நிலையில் போகப் பொருளாகப் பெண் பயன்படுத்தப் படுகின்ற இல்லற வாழ்வில், மனைவி எரிபொருள் . இல்லாத வாகனமாகி விடுகிறாள் . எரிபொருள் இல்லாமல் பயனற்று கிடக்கும் வாகனத்திற்கு சரச சல்லாபங்கள் என்கிற உயவுப் பொருளை கணவன் அளிப்பதில்லை . அதனால் வாகனம் பழுதடைகிறது . பயன்படுத்தாத எந்த பொருளும் பழுதடையும் என்பது இயற்கை விதி-------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐயா . போதி. பிரவேஷ் அவர்கள் ஒருமுறை என்னிடம் சொன்னார் ...
, இந்திய ஆண்களில் 90 சதவீதம் பேருக்கு தனது பாலுணர்வை தணிக்கத் தெரியுமே தவிர ,முறையான தாம்பத்யத்தில் ஈடுபடத் தெரியாது . தாம்பத்ய உறவில் மனைவி இன்பத்தை அனுபவித்தாரா என்பது கூட தெரியாது . இதற்கு அவர்கள் மட்டும் காரணமல்ல . சமூக அமைப்பும் ஒரு காரணம் .
இதை அவர்கள் உணர்ந்தாலும் கூட , நமது புத்தகத்தை தொட்டால் கூட தீட்டு என்பது போல் நினைப்பார்கள். புத்தகத்தை வாங்குவது தனது ஆண்மைக்கு இழுக்கு என்ற எண்ணமிருக்கும் . பெண் கூட துணிந்து வாங்குவார்கள். ஆனால் நமது புத்தகத்தினை ஆண்மகன்களிடம் சேர்ப்பது கடினம் . அந்தளவுக்கு ஆணின் மனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை எண்ணத்தை தகர்த்தால் ஒழிய இல்லற வாழ்வில் தம்பதியரிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் தழைக்காது என்றார் .
மேலும் , . ஐந்து பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லாத நிகழ்வுக்கு , நிமிடத்தில் 5000 கூட செலவழிப்பார்கள் . ஆனால் நமது புத்தகத்தை வாங்க ஆண்களின் மனம் அவ்வளவு கூச்சப் படும் என்றார் .
இதை ஆய்வுக்கு உட்படுத்திடும் நோக்கில் ;
கடந்த வெள்ளியன்று அவிநாசி மற்றும் திருப்பூர் பகுதிகளில் " ஐயா .திரு போதி பிரவேஷ் அவர்களின் "தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை ' நூலை விற்பனை செய்ய எங்கள் குழு களத்தில் இறங்கி சுமார் 150 க்கும் மேற்பட்டோரை தனித்தனியாக சந்தித்து அவர்களின் கையில் புத்தகத்தை தந்தோம் .
சிறிய டீ கடை அதிபர், பேன்சி கடைக்காரர், வழக்கறிஞர்கள் , பொறியாளர்கள்,வங்கி ஊழியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் இதர சிறுதொழில் செய்பவர் முதல் பெருந்தொழில் செய்பவர்கள் வரை இதில் அடக்கம் .
இதன் நோக்கம் எங்களின் புத்தகத்தினை விற்பது மட்டுமல்ல .ஆண்களின் மனநிலையை கண்டறியும் ஆய்வும் கூட .
இந்நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள் ஒவ்வொன்றாக பகிரப்படும் .------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகெங்கும் பாலியல் புரட்சி நடந்து கொண்டிருக்கும் காலம் இது . எண்ணற்ற தளங்களில் பெண் விடுதலையை சாத்தியமாக்கியுள்ள காலமும் கூட .
ஆகவே , வரலாறு நெடுகிலும் ஆண் கடந்து வந்துள்ள எந்தவொரு கால கட்டத்தையும் விட , இன்றைய காலகட்டம் தான், ஆணுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்துயிருக்கிறது . குடும்ப வாழ்க்கை மிகவும் குழப்பத்திற்குள்ளதாக மாறியிருக்கிறது
ஏனெனில் , பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண் விழிப்படைந்து விட்டாள் .
காலம் மாறி விட்டது . கூட்டுக் குடும்பத்தின் மூலம் பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலம் மலையேறி விட்டது . முந்நூறு ஆண்டு காலப் பெண்களின் போராட்டத்தால் , தன் பிறப்புரிமைகள் அனைத்தையும் இன்றைய பெண் பெற்று விட்டாள் .
பெண்ணும் தன்னுடைய பாலின்பங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டாள் . என்னுடைய உடல் தேவைகள் நிறைவேற்றப் படா விட்டால் உன்னுடைய கோரிக்கையும் நிர்த்தாட்சண்யமாக நிராகரிக்கப்படும் என்பதைத் தெளிவாக வலியுறுத்தும் காலம் வந்து விட்டது .
எதை எதிர்பார்த்து ஒரு பெண் திருமண வாழ்விற்குள் வந்தாளோ , அது கிடைக்காத பட்சத்தில், அந்த வாழ்க்கையைத் தொடர்வது பற்றி அவள் யோசிப்பது நியாயமே என்கிற கருத்தும் உருவாகி விட்டது .
தன்னை ஒரு ஆண் மகன் என நம்பி கரம் பிடித்த மனைவிக்கு , ஒரு பெண்ணின் உடலில் நிகழக் கூடிய பாலின்பங்கள் அனைத்தையும் தவறாமல் வழங்குவதை, ஒவ்வொரு ஆணும் அவரவருடைய முதற் கடமையாகக் கருதிட வேண்டும். பத்து நிமிட ஓட்டப் பந்தயத்தில் தன்னுடைய இன்பத்தை மட்டும் நிகழ்த்திக் கொண்டு , மனைவியின் காமத்தை தணிக்காமலே, அருகில் படுத்து குறட்டை விட்டு உறங்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் .
கணவனுக்குரிய பாலின்பம் கிடைக்காத போது, அவனுடைய மனநிலை கொதிப்படைவதைப் போன்றே , மனைவிக்குரிய பாலின்பம் கிடைக்காத போது மனைவியின் மனநிலையும் கொதிநிலை அடைகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அது தான் குடும்ப விவகாரச் சண்டைகள் அனைத்திற்கும் மூலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, மனைவிக்குரிய பாலின்பங்களை வழங்கிய பிறகே , தன்னுடைய பாலின்பத்தை நிகழ்த்திக் கொள்வதை பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு தார வாழ்வில் தங்கள் காம உணர்வைத் தணித்து வாழத் தெரிந்தவர்கள் தான் வீட்டிற்குள் மட்டுமின்றி வெளியுலகிலும் வெற்றிகரமான நபர்களாக திகழ்கிறார்கள் .
குடும்ப விவகார சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் , இல்லற வாழ்விழும் நிம்மதியின்றி வாழ்வதோடு, வெளியுலகிலும் தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் உரிய வெற்றிகளைப் பெற முடியாமல் தாழ்ந்து போகிறார்கள்.
ஆகவே , இன்றைய நவீன காலத்திற்கேற்ற பாலியல் அறிவை வளர்த்துக் கொள்வதும் பெண்களை பற்றிய கருத்தை மாற்றிக் கொள்வதும் ஒவ்வொரு ஆணின் கடமை . பண்டைய ஆணாதிக்க நிலையைத் துறந்து விட்டு, மனைவிக்குரிய இன்பங்களை வழங்கும் சூத்திரங்களை ஒவ்வொரு கணவனும் கற்றாக வேண்டும் .
வரட்டுத் தனமான பாலுறவை புனிதச் செயலாக மாற்றினால் மட்டுமே, போகப்பொருளாக பெண்ணைப் பயன்படுத்தும் கொடூரத்திற்கு முடிவு கட்ட முடியும் . அந்த நிலையை உருவாக்கினால் மட்டுமே ஒரு தார வாழ்வை மையமாகக் கொண்ட குடும்ப நிறுவனம் செழிப்புடன் இருக்கமுடியும் என்பதால் தந்த்ரா வழிமுறைகளை இந்நூல் பகிர்ந்து கொள்கிறது
உரிய சூத்திரங்களை “ பூஜை“ என்ற பெயரில் ஆணுக்குக் கற்றுத் தருகிறது . தந்த்ரா கூறும் பூஜை முறைகள் பல்லாயிரம் ஆண்டு பழமையானவை . அந்தக் கால பேரரசர்களுக்கென்றே உருவாக்கப் பட்டவை .
பத்துக்கும் மேற்பட்ட மனைவியரை பாலியல் ரீதியாக முழுமையாகத் திருப்தி படுத்திய படி வாழ அரசர்களுக்கு கற்றுக் கொடுத்தவை . ஒவ்வொரு ஆணையும் அதே போல உருவாக்கக் கூடியவை .
சொர்க்கமும் நரகமும் எங்கோ வானுலகில் இருப்பவை அல்ல . அவை உருவகங்கள் . அகத்தால் உருவாக்கப் படுபவை . அந்த அடிப்படையில் ஒவ்வொருவருடைய இல்லற வாழ்வையும் சொர்க்கமாக மாற்றிக் காட்ட இந்த நூலால் நிச்சயம் முடியும் . அந்த வல்லமை இந்த நூலுக்கு நிச்சயம் உண்டு .
எல்லாப் புகழும் எங்கள் ஐயா .திரு போதி பிரவேஷ் அவர்களுக்கு சமர்ப்பணம் .
தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை. விலை : 520. தொடர்பு கொள்ளுங்கள் 8903970554
( i got this number from facebook only but its wonderful book and its also available on internet... and ensure author name ஐயா .திரு போதி பிரவேஷ் before buy ... all the best dude
By.Blog author super siva)



வெற்றி தோல்விகளின் மூலப்பொருள் மனநிலை . மனநிலையோடு ஒப்பிடும்போது அறிவு என்பது குப்பைக்கு சமம் .மிகப்பெரிய அறிவாளிகளின் தோல்விக்கெல்லாம் அவர்கள் கொண்டிருந்த மனநிலையே மூலகாரணம் . உலகளவு அறிவிருந்தாலும் மனநிலை சரியில்லையேல், அந்த அறிவு அழிக்கும் சக்தியாகி விடும் . அல்லது பயன்படுத்தப்படாமல் வீணாகப் போய்விடும் .
மனநிலை தான் மனிதனின் மிகப்பெரிய சொத்து . வாழ்வில் சாதிக்க விரும்புபவர்கள் , மகா வெற்றி பெற விரும்புபவர்கள் மனநிலையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் .
அத்தகைய மனநிலையை உருவாக்குபவள் "பெண்" . ஆகவே பெண்ணின் மனநிலையை பாதுக்காக்கப் பட வேண்டும்.
ஒவ்வொரு ஆணும் தன் மனைவியை ஒரு தேவதையை போல வைத்திருக்க வேண்டும்.
தேவதையை போல தன் மனைவியை வைத்திருப்பது என்றால் காஞ்சிபுரம் பட்டுசேலையைக் கட்டி, சுமக்க முடியாத அளவிற்கு நகையை அணிவித்து அழகு பார்ப்பதல்ல .
முதலில் பெண்ணின் உடற் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப் பட வேண்டும் .
உடற் தேவைகளே மனிதப் பிறவியின் முதற் தேவைகள். அடிப்படை தேவைகள் . ஆகவே மனைவியின் முதற் தேவையான உடற் தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய ஒவ்வொரு கணவனும் கற்றுக்கொள்ள வேண்டும் என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து சொன்னவர்கள் இந்திய ஞானிகள் .
இவ்வாறு தேவதையை போல ஒவ்வொரு ஆணும் தன் ,மனைவியை வைத்திருந்தால் , கணவனுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, தன் சுற்றுப்புறம் முழுவதையும் அவள் சொர்க்கமாக வைத்திருப்பாள் .