Search This Blog in tamil

Friday, 17 May 2013

சுய இன்பம்....


சுய இன்பம்! மருத்துவ ஆலோசனை!

டாக்டர் நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன். இதனால் ஏதும் பிரச்னை வருமா?

அல்லது




டாக்டர், நான் பத்து வருடமாக தினமும் கையடிக்கிறேன், எனக்கு திருமணம் ஆகப் போகிறது. எனக்கு குழந்தை பிறக்காது என்று பயமாக இருக்கிறது

அல்லது

டாக்டர், நான் தினமும் கை முட்டி அடித்ததால், என் ஆண் குறி இப்போது பல இன்ச் சின்னதாகி விட்டது. தயவு செய்து நல்ல வழி சொல்லுங்கள்.


டாக்டரின் பதில்:

ஆங்கிலத்தில் தெளிவான, இன்னும் விரிவான வடிவத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள்!

முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: ரிலாக்ஸ்!

உங்கள் காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா? உங்கள் ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்து. ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்களை உங்கள் உடல் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு உங்களின் காம வேட்கை அதிகரிக்கும். “அளவுக்கு மீறிய சுய இன்பம்” என்று ஒரு விடயமே கிடையாது. உங்கள் வாழ்க்கை தரத்தை பாதித்தால் மட்டுமே அது அளவுக்கு மீறியதாகி விடும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடியும் முன்பே தொடங்கி விடும். சராசரியாக பனிரெண்டு வயதில் ஆண்கள் சுய இன்பம் செய்ய தொடங்கி விடுவார்கள். பெண்களோ, அவர்கள் மற்றவர்களிடம் கேட்பது, அல்லது படிப்பதின் மூலமே சுய இன்பம் செய்யத் தொடங்குகிறார்கள். சுய இன்பம் செய்வது ஆண்களுக்கோ, பெண்களுக்கு வெட்கப் படவேண்டிய விஷயம் அல்ல. உங்கள் வீட்டில் ஒருவர் சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து அவர்களை கிண்டல் செய்யாதீர்கள். அவர்களை புரிதலோடு நடத்துங்கள். நீங்கள் ஒரு விடலைப் பையனையோ, பெண்ணையோ அவமானப் படுத்தினாலோ, அல்லது தண்டித்தாலோ, அவர்களின் செக்ஸ் பற்றிய குற்ற உணர்வு தோன்றி, பிற்காலத்தில் மன நோயாக வாய்ப்பு உண்டு.

இதைப் படிக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சுய இன்பம் அனுபவிக்காமல் இருந்தாலோ, அல்லது உங்கள் தோழனோ/தோழியோ எப்போதுமே சுய இன்பம் அனுபவித்ததில்லை என்று ஜம்பம் அடித்துக் கொண்டாலோ, இந்த புள்ளி விவரங்களை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

1) 95% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள்.
2) 75% பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சுய இன்பம் செய்து உள்ளார்கள்.

நீங்கள் சுய இன்பம் செய்யாதவராக இருந்தால், நீங்கள் தான் சற்று வினோதமான பழக்கம் உள்ளவர், மற்றவர்கள் அல்ல! உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சுய இன்பம் செய்பவர்கள் தான்.
நீங்கள் தினமும் பலமுறை கை முட்டி அடித்தாலும், உங்கள் ஆண் குறி சின்னதாக வாய்ப்பில்லை. சுய இன்பம் செய்வதால் ஆண் உறுப்பு சிரியாதாகும் என்று சொல்ல எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லை. நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் கை அடித்திருந்தால் உங்கள் குறி சிறுத்தோ, அல்லது லேசாக வெளிறிப் போன நிறத்திலோ தோன்றலாம். ஆனால், நிரந்தரமாக உங்கள் ஆண் குறி சிறுக்க வாய்ப்பில்லை. நீங்கள் 48 மணி நேரத்திற்கு சுய இன்பம் செய்யாமல் விட்டு விட்டால், உங்கள்
குறி பழைய நிலைக்கு வந்து விடும். ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தினமும் சுய இன்பம் செய்வது என்பது ரொம்ப இயல்பான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது பிரித்தானிய அரசாங்கம் , விடலைப் பசங்களை (பொண்ணுங்களையும்) தான் , தினமும் ஒரு முறை “சுய இன்பம் செய்யுங்கள்” என்று உற்சாகப் படுத்தி உள்ளது. ஏன் தெரியுமா? பால் வினை நோய்களையும், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆவதையும் தடுக்கத் தான். நம்ப மாட்டீங்களே! இந்த லிங்கை சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் பெண்ணாக இருந்து கொண்டு சுய இன்பம் செய்கிறீர்களா? தயவு செய்து இது பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.பெருமளவு பெண்கள் தாம் சுய இன்பம் செய்யும் முறை ரொம்ப விசித்திரமானது என்று எண்ணுகிறார்கள்.இது தவறானது. கிட்டத்தட்ட எல்லா சுய இன்ப முறைகளும், மிக விசித்திரமானவையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப் பட்டவை தான். நீங்கள் கீழ் கண்ட வாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது:

1) பொது இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உங்கள் தொடை மற்றும் இடை தசைகளை இறுக்கி சுய இன்பம் செய்தல்.

2) நாற்காலி ஓரத்திலோ, அல்லது கதவின் கைப்பிடியிலோ உங்கள் பெண் உறுப்பை வைத்து தேய்ப்பது.

3) உங்களின் பெண் உறுப்பின் இதழ்களையோ, அல்லது பருப்பையோ (கிளிடோரிஸ்) தலை அணையிலோ, அல்லது கரடி பொம்மை போன்ற மிருதுவான பொம்மைகளின் மேல் அழுத்தி உரசி, சுய இன்பம் செய்தல்.

4) விரலை விடுவதோ, அல்லது வைப்ரேட்டர்கள் உபயோகப் படுத்துவதோ படு சாதாரணமான விஷயம் என்று சொல்லத் தேவை இல்லை.

ஆண்கள் சுய இன்பம் செய்வதால், ஆண்மை குறைந்து போக வாய்ப்பே இல்லை. இது உங்கள் ஆண்மையை பெருக்கவே செய்கிறது. நீங்கள் கை அடித்தால், உங்கள் உறுப்பு பாதையில் உள்ள பழைய விந்துக்களை வெளியேற்றி, புதிய, மேலும் அதிகம் சீறிப் பாயக் கூடிய விந்து தயாராகிறது. இதனால், கர்ப்பம் அடைய வாய்ப்புகள் கூடுமே தவிர, குறைவதில்லை. நம்பவில்லை எனறால், இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்டார்ட்டிங் டிரபுள்

ஸ்டார்ட்டிங் டிரபுள்

பெரும்பாலான
ஆண்களுக்கு இந்தக் கவலை இருக்கும். 'எல்லாத்தையும்' நாமதான் 
ஆரம்பிக்கனும், நம்மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது.






செக்ஸ் உறவின்போது பெரும்பாலான 
ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். 
அவங்க பாட்டுக்கு கம்முன்னு இருப்பாங்க, என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு 
வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது.






ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில் 
'லீட்' பண்ண மாட்டார்கள், அவரே ஆரம்பிக்கட்டும், முன்னேறட்டும் என்று 
காத்திருக்கிறார்கள்?. இதற்கு நிபுணர்கள் தரும் பதில் இது...






பெரும்பாலான ஆண்கள் என்றில்லை, 
கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்குமே இந்தக் கேள்வி மனதில் எழுவதற்கு 
வாய்ப்புள்ளது. காரணம், பெரும்பாலும் ஆண்கள்தான் செக்ஸ் உறவின்போது 
பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் 
டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள்.






சில சமயங்களில், நமது மனைவிக்கு 
செக்ஸ் பிடிக்கவில்லையா, இப்படி அமைதியாக இருக்கிறாரே என்ற சந்தேகம் கூட 
சிலருக்கு எழலாம். பலருக்கு ஒரு வேளை நமது 'மூவ்'கள் சரியாக இல்லையோ என்ற 
சந்தேகம் கூட எழலாம்.






முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு 
ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட பலருக்குப் புரிபடுவதில்லை. 
இப்படிப்பட்ட சிந்தனைகளால் பல ஆண்கள் குழம்பிப் போவது நிஜம்தான்.






ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக வேண்டிய பெரிய விஷயமில்லை. சாதாரணமானவைதான்.






பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில் 
தயக்கம் காட்ட சில காரணங்கள் உள்ளன. நாமே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது 
ஈகோ பிரச்சினை வந்து விடுமோ என்று பல பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க 
தயக்கம் காட்டுகிறார்களாம்.






நாமே முந்திக் கொண்டு போனால் 
நம்மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவாரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு 
எழுகிறதாம். நாம்தான் சரியான 'சிக்னல்' கொடுத்தாச்சே, புரிந்து கொண்டு களம்
இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.






நான் சரியான முறையில்தான், 
உறவுக்கு ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன். அவர்தான் சரியாக புரிந்து 
கொள்ளாமல் இருக்கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் 
உட்கார்ந்திருக்கிறார்கள்.






பட்டவர்த்தனமாக எப்படி பளிச்சென சொல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக பல பெண்கள் சொல்கிறார்கள்.






ஆரம்பிப்பதில் அவர் தான் கில்லாடி, எக்ஸ்பர்ட், அதனால்தான் நான் மெளனம் காக்கிறேன் என்பதும் பல பெண்கள் சொல்லும் வாதமாக இருக்கிறது.






எனவே காதல் மற்றும் உறவில் ஈகோ 
என்பது பார்க்கப்படக்கூடாத ஒன்று. யார் ஆரம்பித்தால் என்ன, முடியும்போது 
அது சிறப்பாக, சந்தோஷமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.






அந்த நான்கு சுவருக்குள் தனிமையில்
இருக்கும்போது இருவருக்கும் இடையே எந்தவிதமான தயக்கமோ, வெட்கமோ, கெளரவம் 
பார்ப்பதோ இருக்கக் கூடாது. ஆடைகளுடன் சேர்த்து அவற்றையும் தூரப் போட்டு 
விட வேண்டும். அப்போதுதான் உறவு இனிக்கும், சிறக்கும்.






மேலும், பார்ட்னரிடமிருந்து வரும் 
'சிக்னலை' சரியாக புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையுமாகும். சிக்னல்
வந்து விட்டால், அடுத்தவர் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அதை விட்டு 
விட்டு, இல்லை, இல்லை வாயைத் திறந்து கேட்டால்தான் ஆச்சு என்று வறட்டுப் 
பிடிவாதமாக இருக்கக் கூடாது.






ஒரு வேளை கணவர் பிசியாக இருந்து 
கொண்டிருப்பார். அப்போது பார்த்து மனைவி அருகே வந்து கன்னத்தில் 
முத்தமிடலாம், கொஞ்சலாம். அதெல்லாம்தான் உறவுக்கு அழைப்பதற்கான 
'சிக்னல்'கள். எனவே பிசியாக இருந்தாலும் கூட அந்த சமிக்ஞைகளை சரியாக 
புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்சினை இல்லை.






மனைவி ஆரம்பிக்கட்டும், அவரே 
எல்லாவற்றையும் தொடங்கட்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை தாராளமாக 
அவரிடம் வெளிப்படையாக சொல்லி விடலாம். அடுத்த முறை உங்களை அசத்த அவரும் 
தயாராக இருப்பார்.






மொத்தத்தில் அன்பைக் காட்டவும், 
அருகாமையை இனிமையாக்கவும் வெளிப்படையான மனதும், செயல்பாடுகளும் முக்கியம் 
என்பதைப் புரிந்து கொண்டால், 'ஸ்டார்ட்டிங் டிரபுள்' இருக்கவே இருக்காது.

கொஞ்சம் அரவணைப்பு


 கொஞ்சம் அரவணைப்பு



தாம்பத்ய
உறவை விட முத்தமும், அரவணைப்பும், கட்டி தழுவுதல்களும்தான் ஆண்களின் 
முக்கிய விருப்பமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்கு 
நேர்மாறக செக்ஸ் உறவில் பெண்கள் அதிக ஆர்வமுடன் இருப்பது 
கண்டறியப்பட்டுள்ளது.






தாம்பத்ய உறவுக்கு ஆண்கள் தான் 
அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அனைவரும் 
நம்பிக்கொண்டுள்ளனர். ஆணின் ஸ்பரிசத்தையும் அரவணைப்பை மட்டுமே பெண்கள் 
அதிகம் விரும்புவார்கள் என்று இதுவரை எண்ணப்பட்டு வந்தது. இந்த எண்ணத்தை 
தவிடு பொடியாக்கும் வகையில் அதிரடியான ஆய்வு முடிவு சமீபத்தில் 
வெளியிடப்பட்டுள்ளது.






அரவணைப்பு போதும் 







ஐம்பது ஆண்டுகாலம் இணைந்து வாழும் 5
நாடுகளைச்சேர்ந்த ஆயிரம் தம்பதியரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 25 
ஆண்டுகளாக தாம்பத்ய உறவில் ஈடுபட்ட தம்பதியரில் பெரும்பான்மையான ஆண்கள் 
பலரும் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும் அதிகம் விரும்புவதாக 
தெரிவித்துள்ளனர்.






40 முதல் 70 வயதுடைய தம்பதியரிடம் 
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் பல ஆண்கள் தம்முடைய துணையுடன் உறவில் 
ஈடுபடுவதை விட முத்தமிடுவதையும், அரவணைப்பையுமே விரும்புவதாக கூறியுள்ளனர்.






செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் 
பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமும், கட்டிப் பிடிப்புகளும்தான் 
என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை 
மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.






உறவு அதிகம் வேண்டும்







பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவிலான
செக்ஸ் உறவையே தங்களது பார்ட்னர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்களாம். 
திருமணமாகி 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விட்ட பெண்களுக்கு செக்ஸ் உறவு 
குறித்த நல்ல அறிவும், ஞானமும் ஏற்படுகிறதாம். இந்த விஷயத்தில் ஆண்களை விட 
பெண்களுக்குத்தான் செக்ஸ் குறித்த முழுமையான ஞானம் இருப்பதாக தகவல் 
கூறுகிறது.




என்னதான் கட்டிப்பிடிப்புகளும், 
முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட 
செக்ஸ் உறவுகளுக்கும் 20 சதவிகிதம் பேர் முக்கியத்துவம் தருகிறார்களாம். 
ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் 
தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.






இந்த ஆய்வு இந்தியாவில் 
நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை 
எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியப் பெண்கள் பெரும்பான்மையோர் கணவனிடம் 
இருந்து எதிர்பார்ப்பது சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் 
தழுவல்களும்தான் என்றால் மிகையாகாது.

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!


மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!


* ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு
பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். 
இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு 
எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் 
கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட 
வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை
பலனளிக்கும்.







* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு 
வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.







* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.







* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் 
அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் 
அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் 
குணமாகும்.


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t34338-topic#ixzz2Tc6TfxgE 

முத்தம்


முத்தம்
முத்தம் என்ற வார்த்தையை முன்பெல்லாம் பேசுவதற்குக்கூட அச்சப்பட்டனர். இன்றைக்கு 
அன்பின் வெளிப்பாடாக முத்தம்தான் திகழ்கிறது. முத்தம் என்பது ஆன்மாக்களின் 
சங்கமம். முத்தமிடுவதன் மூலம் இறுகலான முகத்தசைகள் இளகுகின்றனவாம். முத்தம்
பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இன்னமும் தொடர்ந்து 
கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற முத்த 
ஆராய்ச்சி சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளது.




பலமான உறவு


தம்பதிகள் இடையேயான தாம்பத்ய உறவு பலமாக இருப்பதற்கு அவர்களு க்குள் 
நடைபெறும் முத்த பரிமாற்றமே முக்கிய காரணம். செல்போனில் நீண் டநேரம் பேச 
அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர் இடையே இணக்கமா ன உறவு இருக்க 
வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும்.


பெண்களைப் பொறுத்த வரை, அவர்கள் தங்கள் இணை உடனான வாழ்க்கையில் 
முத்தத்தையும் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். தங்களது அன்பையும், மகிழ்ச்சி 
யையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது
பகிர்ந்து கொள்கின்றனர்.


மனைவியின் முத்தம்


முத்தம் என்னும் இன்பக்கடலில் மூழ்கி அந்த இன்பத்தை அணு அணுவாய் 
ரசிப்பதிலும் பெண்கள்தான் டாப். முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் 
முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என்கின்றனர் நிபுணர்கள். ஆண்களைப் 
பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாகவே முத்தத்தை 
கருதுகிறார்களாம்.


புத்துணர்வு தரும்


ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் 
ஆண்களுக்கு சலித்துப் போய்விடுகிறதாம். திருமணத்திற்கு முன்பு காதலியிடம் 
முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் 
கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாம் வெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் 
கொள்கிறார்களாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக 
இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான்
அதற்கு காரணம்.


ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால் , அவர்களது 
எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் 
கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.


திருப்தியான உறவு


செக்ஸ் உறவின்போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்த மிடாமலேயே உறவை 
வெற்றிகரமாக முடித்துக்கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம்.
செக்ஸ் உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு 
திருப்தியான நிறை வை அவள் பெறுகிறாளாம். இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்கள் 
முத்தம் பற்றிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t34327-topic#ixzz2Tc2koHty 
Under Creative Commons License: Attribution